சில விஷயங்களை

சில விஷயங்களை பகுத்தறிவைக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு பார்க்க முடியாது. உதாரணம் ஒருவரின் புகழ், பெருமை போன்றவை, ஏன் ஒருவருக்கு பெருமை கூடி வருகிறது? ஏன் ஒருவருக்கு புகழ் போன்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில் சொல்லாது, அப்படியே சொன்னாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒரே காரணத்தை சொல்லுவதில்லை. காரணம் மனிதனுக்கு அறிவு மட்டுமில்லையே மனமும் இருக்கிறதே, அது மட்டுமல்ல மனிதனுக்கு வாழ்வு மட்டுமல்ல வினையும் இருக்கிறதே.

ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆண்டவனே ஸ்ரீராமகிருஷ்ணராகத் தோன்றினான். இது உண்மையே. பிறருடைய துக்கத்தையும், துன்பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப் பெற்றான். தனது நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப்போல உலவினான். பிறர் அவனை இன்னான் என உணர்ந்ததும் அவன் மறைந்துவிட்டான். குருதேவரைச் சரண்புகுந்தால் நீ யாவையும் பெறுவாய். துறவுதான் அவரது பெருமை. நாம் அவர் பெயரைச் சொல்வதும் உண்பதும் அனுபவிப்பதும் அவர் எல்லாவற்றையுமே துறந்து விட்டமையால்தான். சத்தியத்தினிடம் குருதேவருக்குத்தான் எவ்வளவு பற்று, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் உண்மையைக் கடைப் பிடிப்பதே…