ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 2

சடைதரித்தவானாலும், மொட்டையடித்தவானாலும், குடுமியைக் கத்தரித்தவானாலும், காவித்துணியணிந்து பலவாறான வேஷம் பூண்டவானாலும், மதிமங்கியவன் பார்த்தாலும் பார்க்காதவனேயாகிறான். பலவகைப்பட்ட வேஷமெல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது. எவனால் பகவத்கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கை நீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய பூஜை ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ அவனுக்கு யமபயமில்லை

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.