ஸ்ரீசங்கரரின் ஞானம். 5

நான் மாறுபடாதவன், எனக்கு உருவம் இல்லை, குற்றமும் குறைவும் என்னிடமில்லை, நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது. எனக்கு குணமும் இல்லை செயலுமில்லை, நான் என்றுமுள்ளவன், சுதந்திரமானவன், அழியாதவன், நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது