பயம் வேறு, பக்தி வேறு

பயம் வேறு, பக்தி வேறு தான். பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது. பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது. இரண்டும் இணைவது கஷ்டம் என்றாலும், அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

முகமூடி

நம் எல்லோருக்கும் இயற்கை முகம் என்னும் சிறிய முகமூடி போட்டு மனம் எனும் பெரிய ராட்சசனை மறைத்திருக்கிறது. அதனால் தான் நாம் நம்மை பார்ப்பதில்லை ஏன்னா ராட்ஷசனை பார்க்க எல்லோருக்கும்  பயம்தானே