ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 48

எத்தகைய சிற்றறிவை மனிதன் பெற்றிருக்கிறான்? அவனுக்கு வேண்டுவது ஒன்றாயிருக்க, அவன் கேட்பது வேரொன்றாயிருகிறது பல சந்தர்ப்பங்களில் அவன் பிள்ளையார் பிடிக்கத் தொடங்குகிறான். அது குரங்காய் முடிகிறது. ஆகவே நம் விருப்பங்கள் எல்லாவற்றையும் இறைவனது பாதங்களில் ஒப்படைத்தலே சாலச் சிறந்தது. நமக்கு எவை மிக நல்லவையோ அவற்றையே இறைவன் நமக்கு அருள்வான். ஆனால், ஒருவன் பக்தி பெருகுவதற்கும் பற்று அற்றுப் போவதற்கும் பிரார்த்திக்கலாம். அவை மேற் கூறிய இச்சைகளின் பாற்படா.

பயம் வேறு, பக்தி வேறு

பயம் வேறு, பக்தி வேறு தான். பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது. பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது. இரண்டும் இணைவது கஷ்டம் என்றாலும், அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 14

சிரத்தையும் பக்தியும் தியானயோகமும் முமுக்ஷு விற்கு முக்திக் காரணங்களாக வேத வாக்கியம் கூறுகிறது. எவனொருவன் இவைகளில் நிலையாயிருக்கின்றானோ அவனுக்கு அவித்தையால் கற்பிக்கப்பட்ட உடலாகிற தலையினின்று விடுதலை ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் கூட்டுறவால்தான் பரமாத்மாவேயாகிய உனக்கு ஆத்மாவல்லாததுடன் பிணைப்பும் அதனின்றே பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஆத்மா, அனாத்மாவாகிய இரண்டையும் பற்றிய பகுத்தறிவினால் எழும் ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும். சீடன் — குருதேவரே, கருணை கூர்ந்து எனது கேள்விக்குச் செவி சாய்த்தல் வேண்டும். அதற்கு மறுமொழியைத் தங்கள் வாயிலிருந்து…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 10

கு ரு வு ம், சீ ட னு ம் வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும்,பாவமற்றவரும், ஆசை வாய்ப்பட்டு அழியாதவரும், பிரம்ம ஞானிகளில் சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், விறகில்லாத நெருப்புப் போல் அமைதியுள்ளவரும், காரணமேதுமின்றிக் கடல் போன்ற கருணை உள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு. அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம் சேவை முதலியவற்றுடனும் பூஜித்து அவர் ஸந்தோஷமாயிருக்கையில் அவரை அண்டி தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றிக்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 9

சிராத்தத்தில் ( பிதிர்கட்கு ) அளிக்கப்படும் உணவை உண்ணக் கூடாது என்று பக்தர்களுக்குக் குருதேவர் சொல்வதுண்டு, ஏனெனில் அவ்வித உணவு பக்திக்கு ஊறு செய்யும். அது தவிர கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட எவ்வித உணவையும் ஒருவர் உண்ணலாம் . குருதேவர் உன்னைக் காப்பவராக இருப்பார். நீ அவரை நம்பி வாழ வேண்டும். அவர் விரும்பினால் உனக்கு நன்மை செய்யட்டும், இல்லையேல், உன்னை மூழ்கச் செய்யினும் செய்யட்டும். ஆனால் நீ எப்போதும் உன் சக்திக்குட்பட்டு, எப்போதும் நேர்மையானதையே செய்தல்…