ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 38

ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 28

அநேக நோன்புகள் நோற்றலின் பயனாகவே மனத்தைத் தூயதாக்க முடியும். இறைவன் தூய்மை உருவினன். ஆதலின் நோன்பின்றி அவனைக் காணமுடியாது. ஒருவன் நாள்தோறும் பதினையாயிரம் முதல், இருபதினாயிரம் வரை இறைவன் பெயரை ஜபிப்பானாகில், மனத்தை நிலைநிறுத்த முடியும். இது முற்றிலும் உண்மை. நானே அதை உணர்ந்திருக்கிறேன். இம்முறையை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். முயற்சியில் தோல்வியைடந்தால், பிறகு முறையிடலாம். அடங்கிய மனத்தோடு ஒரு முறை இறைவன் பெயரை உச்சரிப்பதானது, அலைக்கழிக்கப்படுகின்ற மனத்தினால் இலட்சம் தடவை அப்பெயரை உச்சரிப்பதற்கு ஈடாகும். நீங்கள் நாள்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 21

உன் வேலைகளைச் செய்வதோடு தியானமும் பழகாதிருப்பின், செய்வது விரும்பத் தக்கதா, தகாததா என்பதைப் பிரித்தறிவது எப்படி? காலை, மாலைச் சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் தூய்மையாக இருக்கும். எவ்வளவோ தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பினும் கடவுளை நினைத்து வணங்கவாவது வேண்டும். கொஞ்சங், கொஞ்சமாகத் தியானமும் பிரார்த்தனையும் செய்யும் நேரத்தை அதிமாக்க வேண்டும். மந்திரம் உடலைச் சுத்தமாக்குகின்றது. கடவுள் நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் பரிசுத்தனாகிறான். ஆகையால் அவன் நாமத்தை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிரு. நீ செய்யும்…