ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 36

ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைக்கும் நேரங்களுக்கிடையிலும், பிரார்த்தனைக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கிவை. நான் தட்சிணேசுவரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்த காலங்களிலும் பிரார்த்தனையையும் தியானத்தையும், பழகிவந்தேன்…. மனக் கவலையிருப்பதாக முறையிடும் என் சகோதரியும் அவ்வாறு செய்யட்டும். நாடோறும் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து தியானத்திற்கு அவள் அமர்வாளாக, பிறகும், அவளிடம் அக்கவலைகள் உள்ளனவா என்பதைக் காண்போம். ஆனால், அவள் தன்னுடைய துன்பங்களைப் பற்றிப் பேசுவாளே அல்லாது அவ்வாறு செய்யமாட்டாள், அவளுக்கு என்ன துன்பம்? குழந்தாய், கவலை இன்னதென்பதை நான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 15

தலையில் வைக்கப்பட்ட பளு முதலியவற்றால் ஏற்படம் துன்பம் பிறரால் தீர்க்கப்படலாம். பசி முதலியவற்றால் ஆக்கப்பட்ட துன்பமோ எனின் தன்னாலன்றி வேறு எவராலும் தீர்க்க இயலாதது. கட்டுப்படான உணவும் மருந்தை உட்கொள்ளுதலும் எந்த நோயாளியால் பின்பற்றப்படுகிறதோ அவனுக்க உடல் நலம் கைகூடுவது காணப்படுகிறது. மற்றொருவனால் அனுஷ்டிக்கப்பட்ட இச்செயல்களால் இவனுக்கு உடல் நலம் சிந்திப்பதென்பதில்லை. அறிவின்மை ஆசை தொழில் முதலிய வலைகளாலான தளையை நீக்குவதற்குத் தனக்குத் தானேயல்லாமல் நூறு கோடி கல்பகாலமானாலும் எவன் திறமை உடையவனாவான்? போகத்தாலன்று, ஸாங்கியத்தாலன்று, கர்மத்தாலன்று,…