இலட்சியப்பூர்த்தி அடைய

பகவான் பாபா சொல்கிறார் ” எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்” அன்பு உயர பண்பு உயரும். பண்பு உயர ஒழுக்கம் உயரும் ஒழுக்கம் உயர,தியானம் வளரும் தியானம் வளர ஒளி மிளிரும், ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் . அன்பு ஓங்க. சாதனை ஓங்கும் சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 32

கேள்வி – தியானம் செய்யும் போது என் மனத்தை என்னால் ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அடிக்கடி மாறக்கூடியதாகவும், நிலையில் நில்லாததாகவும் இருக்கிறது. பதில் – அதில் என்ன உள்ளது? அதுவே மனிதன் இயல்பு, பார்த்தலும், கேட்டலும் முறையே கண், காது இவற்றின் இயல்பாக இருத்தலைப் போலவே, தியானத்தை ஒழுங்காகச் செய்துவா, இறைவனது பெயர் இந்திரியங்களைக் காட்டிலும் மிக பலமுள்ளது. எப்போதும் உங்களைக் காத்து வரும் தாகூரை (ஸ்ரீ ராமகிருஷ்ணரை) யே மனத்தில் நினைத்துக் கொண்டிரு. உன்னிடமுள்ள தவறுகளைக்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31

தியானம் செய்யும் பழக்கம் மனத்தை ஒருமுகப்படுத்தும். அழியாப்பொருள்களையும் அழியும் பொருள்களையும் எப்போதும் பிரித்தறிக. இவ்வுலகப் பொருள்களுளொன்றின் மீது உங்கள் மனம் செல்லுவதைக் காணும் போதெல்லாம் உடனே அப்பொருள்களின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்துக் கடவுள் மீது மனத்தை நிலை நிறுத்த முயற்சி செய்க. வாழ்க்கையில் துன்பங்களால் அடிப்பட்ட பிறகே, பலர் இறைவனது நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் எவன் தன் இளமை முதற்கொண்டடே மனத்தை இறைவனுடைய திருவடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல் அர்ப்பணம் செய்வானோ, அவனே உண்மையில் பாக்கியசாலி. மனம் எப்போதும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 30

மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. அது காற்றுடன் போட்டியிட்டுக் கொண்டு ஓடும். ஆகவே, ஒருவன் எப்போதும் நிலைாயன, நிலையற்ற பொருட்களை ஆராய்ந்து, இறைவனைக் காணவே பாடுபட வேண்டும். குருதேவருக்காகப் பணி செய். அதனுடன் ஞானசாதனையும் பழகு. சிறிதளவு வேலை செய்தல் மனத்தை அற்ப நினைவுகளினின்றும், விடுவிக்கின்றது. எவ்வித வேலையும் செய்யாமல் ஒருவன் அமர்ந்திருப்பானேயாகில் பலவகை எண்ணங்களும் அவன் மனத்தினூடே புகும். உண்மையில் இறைவனிடம் உங்களுக்கு எவ்விதப் பற்றும் தோன்றாதிருந்த போதிலும், அவனது பெயரை உரைப்பதால் மட்டுமே, அவனைக்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 26

இயற்கையாகவே மனம் அமைதியற்றது. ஆகவே, மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு முன், ஒருவன் மூச்சைக் கட்டுப்படுத்தித் தியானம் செய்யலாம். அது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவுகின்றது. ஆனால் அதிக அளவில் அதை செய்தல் கூடாது. ஏனெனில் அதனால் மூளை சூடடையும். நீங்கள் ஈசனது தரிசனத்தைப் பற்றியோ, தியானத்தைப் பற்றியோ பேசலாம். ஆனால் மனமே முக்கியம் என்பதை நினைத்துக் கொள். மனம் ஒரு நிலைப்படும்போது ஒருவன் எல்லா சித்திகளையும் பெறுகிறான். தொடர்ந்தாற்போல் தியானம் செய்தால் மனம் உறுதி பெற்று விடும். அப்போது…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 25

தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக் கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும், தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும். மனமே எல்லாம். ” இது சுத்தமானது, இது அசுத்தமானது ” என்பதை மனத்தினாலேயே ஒருவன் உணர்கிறான். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்பவன் ஆகிறான்.

உறவு சிக்கல் ஏற்படும் போது 2

நிலை 1: அதிர்ச்சி நாம் கொண்டிருக்கும் அன்பு திடீர் என சம்பந்தப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படும் போது முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு அதிர்ச்சி ஆகும். அதனுடன் தொடர்ந்து ஆச்சர்யமும் சில சமயங்களில் பயம் கூட ஏற்படும். இதனால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனும் உணர்வு தான் பயமாக வெளிப்படும். இந்த சூழ்நிலை ஏற்படும் போது மன பயிற்சிக்காக தியானம் செய்யுங்கள். உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்