ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 36

ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைக்கும் நேரங்களுக்கிடையிலும், பிரார்த்தனைக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கிவை. நான் தட்சிணேசுவரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்த காலங்களிலும் பிரார்த்தனையையும் தியானத்தையும், பழகிவந்தேன்…. மனக் கவலையிருப்பதாக முறையிடும் என் சகோதரியும் அவ்வாறு செய்யட்டும். நாடோறும் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து தியானத்திற்கு அவள் அமர்வாளாக, பிறகும், அவளிடம் அக்கவலைகள் உள்ளனவா என்பதைக் காண்போம். ஆனால், அவள் தன்னுடைய துன்பங்களைப் பற்றிப் பேசுவாளே அல்லாது அவ்வாறு செய்யமாட்டாள், அவளுக்கு என்ன துன்பம்? குழந்தாய், கவலை இன்னதென்பதை நான்…