விடை தேடி 3

அவசர உலகில் எத்தனையோ பணிகளுக்கிடையில் இதையெல்லாமா யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் ஒரு ஆளாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு ஆசை தான் நமக்குள் நடைபெறும் சங்கதிகளை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிறகு யார் தான் தெரிந்து கொள்வது? இப்படி சிந்தித்தால் என்ன? அதாவது நம்மிடம் சந்தோஷம் எனும் நிலை உண்டாவது மனதால் என்று தெரிந்து கொள்கிறோம், அப்போது உடலுக்கு சந்தோஷம் இல்லையா என்ற வினா வருகிறது, அதற்கு விடை உடலின் சந்தோஷத்தையும்…

விடை தேடி 2

ஒரே விஷயம் தரும் அனுபவம் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறதே அது ஏன்? அது பணமாகட்டும், பதவியாகட்டும், படிப்பில் முதலாவது வந்ததாகட்டும், பெண் ஆகட்டும், சந்தோஷம் எனும் பொறி நமக்குள் படர்ந்து நிறைவது கன நேரமாகவோ அல்லது அன்றைய நாள் மட்டுமே தான் இருக்கிறது, பின் அதே அனுபவம் வாய்த்தால் கூட சந்தோஷம் இருந்தாலும் கூட அதன் சதவிகிதம் மாறிவிடுகிறதே, ஒரு கால கட்டத்தில் அந்த அனுபவம் நமக்கு சந்தோஷபட வைக்காமல் கூட போய்விடுகிறதே,

விடை தேடி 1

எப்போதாவது ஒரு முறை தான் மனம் சந்தோஷமாக இருப்பது நமக்குத் தெரியவருகிறது. எந்த விஷயத்தில் சந்தோஷம் வந்தது என்று குறித்து வைத்துக் கொண்டு நாம் சில காலங்களுக்குப் பிறகு அதே விஷயத்தை நாம் அடைந்தாலும் மனம் சந்தோஷமாய் இருப்பதில்லை, ஏன்? என்ன காரணம்? என்று யாரேனும் இதை சிந்தித்தது உண்டா? அப்படி இது சிந்திக்க வேண்டிய விஷயம் தானா? வினா தான் உருவாகிவிட்டதே, இனி விடை தேடி பயணப்பட வேண்டியது தான், யாரேனும் துணைக்கு வருகிறீர்களா? ம்ம்,…

சரியான கோணம்

பிரச்சனையை சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்தில் இருந்து வரவேற்க்க முடிந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனுபவிப்பவர்களின் எல்லையை பொறுத்து இருக்கிறது வெற்றியின் ஆனந்தம் அனுபவித்து  பார்த்தவர்களுக்கு தான் அது புரியும்.

சந்தோஷம் பெற

மனிதன் தனக்கு எது தேவை என்றும், எது தேவையில்லை என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் சுகமாக இருக்கவேண்டும்  நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில் துக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது. இந்த மூன்று கொள்கைகள் கொண்ட மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்.