ஸ்ரீ சங்கரரின் ஞானம் 10

நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல் கேள்வி முதலியவற்றால் கொழுந்து விட்டெரியும் ஞானத்தீயில் பரிசுத்தமான ஜீவன் எல்லா மலங்களும் நீங்கித் தன்னுடைய சுய ஒளியுடன் பிரகாசிக்கிறான். ஒன்றை மற்றொன்றாய்க் கொள்ளும் மதியீனம் பரிபூர்ண ஞானத்தாலன்றி வேறெதனாலும் நீங்காது. ஜீவன் பிரம்மமே என்று அறிந்தனுபவிப்பதுதான் பரிபூர்ண ஞானமென்பது வேதத்தின் முடிவு.

கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

புரிந்துகொண்டால்

எது பார்க்கப்பட்டதோ அது காட்சி! எது கேட்கப்பட்டதோ அது கேள்வி! எது உணரப்பட்டதோ அது உணர்வு! எது அறியப்பட்டதோ அது அறிவு! இதில் ‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது , கடைசியில் வரும் விடை நீ என்பது இல்லை என்பதே இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவசியமில்லை உண்மை இதுதான் இதை புரிந்துகொண்டால் நிம்மதி புரியாவிட்டால் சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்

ஒவ்வொருத்தருக்கு

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம், ஒவ்வொருவிதமான வேதனை. யார்தான் இங்கு நல்லா இருக்காங்க. இது கேள்வி இதை மாத்தி கேட்டா யார் தான் இங்க நல்லா இல்லை அப்படிதான் வரும் நல்லா இருக்கறது அப்படின்னு எடுத்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு நல்லாயிருக்கு அப்படி பாக்கும் போது ஏதாவது ஒரு விதத்துல ஒவ்வொருத்தரும் நல்லா தான் இருக்கான்னுதான் தோணுது

ஒரு சின்ன கதை பகுதி 2

ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு,…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஓன்று முதல் ஆறு வரை

முதலாம் பாவம் ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம். இரண்டாம் பாவம் குடும்பஸ்தானம், கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம்,…

சுடர்

நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.