ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 43

ஒரு சாது எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். அவனது மார்க்கம் வழுக்கலுடையதாதலின் மிகவும் எச்சரிக்கையாக அவன் அடியெடுத்து வைத்து அதில் நடக்க வேண்டும். சன்னியாசி ஆவது ஒரு விளையாட்டான காரியமா? அவர் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கலாகாது, தெருவில் செல்லும்போது அவரது பார்வை அவரது கால் கட்டை விரலின் மீதே பதிந்திருக்க வேண்டும். கழுத்தில் பட்டயம் அணிந்திருக்கும் நாய் எவ்வாறு ஏனைய தெரு நாய்களைப் போல் கொல்லப்படுவதினின்றும் காக்கப்படுகின்றதோ, அது போல் சன்னியாசியின் காவி நிற ஆடை,…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 2

சடைதரித்தவானாலும், மொட்டையடித்தவானாலும், குடுமியைக் கத்தரித்தவானாலும், காவித்துணியணிந்து பலவாறான வேஷம் பூண்டவானாலும், மதிமங்கியவன் பார்த்தாலும் பார்க்காதவனேயாகிறான். பலவகைப்பட்ட வேஷமெல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது. எவனால் பகவத்கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கை நீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய பூஜை ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ அவனுக்கு யமபயமில்லை