ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 30

மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. அது காற்றுடன் போட்டியிட்டுக் கொண்டு ஓடும். ஆகவே, ஒருவன் எப்போதும் நிலைாயன, நிலையற்ற பொருட்களை ஆராய்ந்து, இறைவனைக் காணவே பாடுபட வேண்டும். குருதேவருக்காகப் பணி செய். அதனுடன் ஞானசாதனையும் பழகு. சிறிதளவு வேலை செய்தல் மனத்தை அற்ப நினைவுகளினின்றும், விடுவிக்கின்றது. எவ்வித வேலையும் செய்யாமல் ஒருவன் அமர்ந்திருப்பானேயாகில் பலவகை எண்ணங்களும் அவன் மனத்தினூடே புகும். உண்மையில் இறைவனிடம் உங்களுக்கு எவ்விதப் பற்றும் தோன்றாதிருந்த போதிலும், அவனது பெயரை உரைப்பதால் மட்டுமே, அவனைக்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 29

மனம் ஒருமைப்படாவிட்டாலும் தூய மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடவேண்டா. உங்கள் கடமையை நீங்கள் ஆற்றுங்கள். இறைவனது பெயரை ஓதும் போதே, காற்று அடியாதபடி தடுக்கப்பட்டுள்ள ஒரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப் போல், மனத்தானாகவே ஒருமைப்படும். காற்றே சுடரை ஆடச் செய்கின்றது. அதுபோல், நம்மிடத்துள்ள பாவனைகளும் விருப்பங்களுமே நமது மனத்தை அமைதியற்ற தாக்குகின்றன. காற்று மேகத்தை அடித்துச் செல்வதுபோலவே, இறைவனது திருநாமம் நமது மனத்தைச் சூழ்ந்துள்ள உலகப்பற்று எனப்படும் மேகத்தை அழிக்கிறது. கடுந்தவம் பழகிய பிறகே மனம் தூயதாகின்றது. ஒழுங்காகச்…

கர்மா செயல்படும் விதம் 1

மனிதன் செயல்படுவதற்க்கு பல உறுப்புகளின் செயல்கள் தேவைப்படுகிறது. அதில் மிக மிக முக்கிய பங்கு வகிப்பது உடலும், உயிரும் ஆகும். உடல் இயங்க காரியமாற்ற, சிந்திக்க, செயல்பட உடலின் பல உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகிறது. அப்படி செயல்பட ஆதாரமாய் இருப்பது கண்ணுக்கு தெரியும் உடலின் உள் கண்ணுக்கு தெரியா காற்று உட்சென்று வெளிவரும் இயக்கமே மற்றஎல்லா இயக்கங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருக்கிறது. இதை நாம் பிராணன் என்றும் உயிர் என்றும் அழைக்கின்றோம். இந்த உயிராகப்பட்டது இருக்க…

பிரபஞ்ச சக்திகள் 1

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்புகள்  ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அண்டத்திலுள்ளதே பிண்டம்     பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமுமொன்றே   அறிந்து தான் பார்க்கும் போதே என்று சித்தர் பாடுகிறார்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.