ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 11

சீடன் — ‘ஆண்டவனே, உமக்கு நமஸ்காரம். வணங்கும் ஜனங்களுக்கு உண்மையான உறவினரே, கருணைக் கடலே, பிறவிக்கடலில் வீழ்ந்துள்ள என்னைக் களங்கமற்றதும் அமுதத்தைப் பொழிவதுமான உம்முடைய கடைக்கண் பார்வையால் கரையேற்றிவிடும். தடுக்க முடியாத பிறவித் துன்பமாகிய காட்டுத் தீயால் பொசுக்கப்பட்டவனும்,  துரதிருஷ்டமாகிய காற்றால் அலைக்கப்பட்டவனும், அதனால் பயந்தவனும் தங்களைச் சரணடைந்தவனுமாகிய அடியேனை – வேறு புகலிடம் நான் அறியேனாதலால் – சாவினின்று காத்தருள்வீராக. குரு — மனவமைதியுள்ளவர்களும் வஸந்த காலத்தைப் போல் உலகிற்கு நன்மையைச் செய்பவர்களும் பயங்கரமான பிறவிக்…