ஸ்ரீ சங்கரரின் ஞானம் 8

ஸம்ஸாரம் கனவு போன்றது, விருப்பு வெறுப்புக்கள் நிறைந்தது, அதனடைய காலத்தில் அது உண்மை போல் பிரகாசிக்கிறது. ஆனால் ஞான விழிப்பு ஏற்பட்டதும் மறைந்து போகிறது. அரணிக் கட்டையைக் கடைவது போன்ற ஆத்ம தியானம் எப்பொழுதும் செய்யப்பட்டால் அதினின்று எழும் தீயானது அஞ்ஞனமாகிற விறகை முழுவதும் எரித்துவிடும்.

துக்கம் ஏது?

எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும்.  அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?