ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 29

மனம் ஒருமைப்படாவிட்டாலும் தூய மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடவேண்டா. உங்கள் கடமையை நீங்கள் ஆற்றுங்கள். இறைவனது பெயரை ஓதும் போதே, காற்று அடியாதபடி தடுக்கப்பட்டுள்ள ஒரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப் போல், மனத்தானாகவே ஒருமைப்படும். காற்றே சுடரை ஆடச் செய்கின்றது. அதுபோல், நம்மிடத்துள்ள பாவனைகளும் விருப்பங்களுமே நமது மனத்தை அமைதியற்ற தாக்குகின்றன. காற்று மேகத்தை அடித்துச் செல்வதுபோலவே, இறைவனது திருநாமம் நமது மனத்தைச் சூழ்ந்துள்ள உலகப்பற்று எனப்படும் மேகத்தை அழிக்கிறது. கடுந்தவம் பழகிய பிறகே மனம் தூயதாகின்றது. ஒழுங்காகச்…