ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 18

நான் யார் ? நான் ஈசுவரர்களுக்கு ஈசுவரன் என்னிடத்தில் பொறாமையும், பகைமையையும் ஒரு சிறிதும் இல்லை, இலக்ஷியத்தை அடைய முயல்பவர்களின் மனோரதத்தைப் பூர்த்தி செய்விப்பவன் எவனோ அவன் நானே. நான் அழியாதவன், என்னை அழிக்க முடியாது. நான் ஈசுவரன், உயிருக்கு உயிராகியவன். நான் ஒப்பிலா ஆனந்தம் நிறைந்தவன். நான் பரமசிவன். நான் அளவிலடங்காதவன். ஆத்மாவை அறிந்தவர்களில் நான் சிறந்தவன், ஆத்மானந்தத்தையனுபவிப்பவன். பாலர்களும் படிப்பில்லாதவர்களுங்கூட, எந்த ஆத்மாவின் பெருமையை ‘ நான் ‘ என்ற உணர்வில் கண்டனுபவிக்கிறார்களோ அந்த…