ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 23

நான் ஒன்றாயிருப்பவன் ‘ இது அது, ‘ இப்படி, அப்படி, இதைப் போல் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. ஆசையற்றவர்களால் பூஜித்தற்குரியவன் எவனோ  அவன் நானே. புண்ணியம், பாவம் என்ற உள்ளுணர்வு என்னிடம் இல்லை. ஒற்றுமையை விளங்கவைப்பவன் நான். வேதாந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து பரிசுத்தமான மனது படைத்தவர்களிடம் விளங்கும் பரதத்துவம் நானே. இரவின் இருள் போன்ற அஞ்ஞானத்தைப் போக்கும் சூரியன் நானே.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுர சு. 4

இடைவிடாத தியானத்தால் ‘ நான் பிரம்மம் ‘ எனும் உண்மை மனதில் பதியும் போது அது அஞ்ஞானத்தையும் அதன் திரிசல்களையும் ஒரு ரஸாயனம் ( மருந்து ) நோயைப் போக்குவது போல் போக்கிவிடுகிறது. ஒருவன் படகில் செல்லும் போது கரையிலுள்ள மரங்கள் படகு செல்லும் திக்கிற்கு எதிராக நகர்வது போல் அவனுக்கு பிரமை ஏற்படுகிறது. பிறவிச் சுழலில் ஆத்மா உழல்வதாய்த் தோன்றுவதும் அப்படிப்பட்ட பிரமையே. ஆத்மாவினிடம் அனாத்மக் கற்பனையே அஞ்ஞானம் எனப்படுவது. அஞ்ஞானத்தின் ஒழிவே மோக்ஷம். இருள்,…