ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு –22

எனக்கு இந்திரிய சுகங்களில் விருப்பமில்லை. ஆத்மானுபவமும் அறிவும், ஆனந்தமும் என்னிடம் நிரம்பியிருக்கின்றன. வெளியுலகத்தைப்பற்றிய எண்ணத்தினின்று நான் வெகு தூரம் விலகியுள்ளேன். வெளியே காணப்படாதது எதுவோ அதனால் என்னுள்ளம் மகிழ்கிறது. மஹாபூதங்களினும் நான் பெரியவனாதலால் அவற்றில் பொதிந்துள்ள சக்தியின் நன்மையெல்லாம் நானே. உற்பத்தி செய்யும் உணர்ச்சி வேகம் என்னிடம் இல்லை.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 18

நான் யார் ? நான் ஈசுவரர்களுக்கு ஈசுவரன் என்னிடத்தில் பொறாமையும், பகைமையையும் ஒரு சிறிதும் இல்லை, இலக்ஷியத்தை அடைய முயல்பவர்களின் மனோரதத்தைப் பூர்த்தி செய்விப்பவன் எவனோ அவன் நானே. நான் அழியாதவன், என்னை அழிக்க முடியாது. நான் ஈசுவரன், உயிருக்கு உயிராகியவன். நான் ஒப்பிலா ஆனந்தம் நிறைந்தவன். நான் பரமசிவன். நான் அளவிலடங்காதவன். ஆத்மாவை அறிந்தவர்களில் நான் சிறந்தவன், ஆத்மானந்தத்தையனுபவிப்பவன். பாலர்களும் படிப்பில்லாதவர்களுங்கூட, எந்த ஆத்மாவின் பெருமையை ‘ நான் ‘ என்ற உணர்வில் கண்டனுபவிக்கிறார்களோ அந்த…

சரியான கோணம்

பிரச்சனையை சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்தில் இருந்து வரவேற்க்க முடிந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனுபவிப்பவர்களின் எல்லையை பொறுத்து இருக்கிறது வெற்றியின் ஆனந்தம் அனுபவித்து  பார்த்தவர்களுக்கு தான் அது புரியும்.