ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

தனிமையில் இருப்பவர்களுக்கு

தனிமையில் இருப்பவர்களுக்கு வேலை தான் துணை. துன்பங்களையும், வேதனைகளையும் மட்டுமல்ல ஆசைகளையும், இன்பங்களையும் கூட வேலையில் ஈடுபட்டு தான் மறக்க வேண்டும். இந்த வித்தையை தெரிந்து பயின்று தெளிந்தவர்கள் தன் நிலை மாறாமல் கெளரவத்தை இழக்காமல் அவமானத்தை அடையாமல் கரையேறிவிடுகிறார்கள். இந்த வித்தை சூட்சமம் தெரியாதவர்கள் பாவம், வேறு என்ன சொல்வது.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 1

பகலும், இரவும், மாலையும், காலையும், பனிக்காலமும், இளவேனிற்காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது, வயது கழிகிறது, என்றாலும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசைமட்டும் மனிதனை விடுவதில்லை. மதிமங்கியவனே! மரண சமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது. ஆகையால் கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி. எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாயிருக்கிறானோ அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு…

விடை தேடி 3

அவசர உலகில் எத்தனையோ பணிகளுக்கிடையில் இதையெல்லாமா யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் ஒரு ஆளாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு ஆசை தான் நமக்குள் நடைபெறும் சங்கதிகளை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிறகு யார் தான் தெரிந்து கொள்வது? இப்படி சிந்தித்தால் என்ன? அதாவது நம்மிடம் சந்தோஷம் எனும் நிலை உண்டாவது மனதால் என்று தெரிந்து கொள்கிறோம், அப்போது உடலுக்கு சந்தோஷம் இல்லையா என்ற வினா வருகிறது, அதற்கு விடை உடலின் சந்தோஷத்தையும்…

எப்போதும் மனிதனாய் வாழ

உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று  யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்  அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய்  என்று அர்த்தம்……!  நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே  

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 5

காலையில் தோன்றி மாலையில் அழியும் அநித்தியப் பொருள்களைப் போல் அஞ்ஞானத்தால் தோன்றும் பயன் அனைத்தும் அழிவுடையது.‍ அஞ்ஞானனியானவன் பயனில் ஆசை வைத்து கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியுடன் கருமம் செய்கிறான். அவன் மதிமயங்கியவன். ‘ நான் செய்கிறேன் ‘ ‘ நான் அனுபவிக்கிறேன் ‘ என்றெல்லாம் எண்ணுகிறான். அஞ்ஞானிகள் தத்தம் முன்வினைக்குத் தக்கபடி உலக விஷயமாகிற கடையைப் பரப்பி வைத்துக் கொண்டும், தங்கள் விதியை நொந்து கொண்டும் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…

அக்கறை

அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால் அது கோபப்படாது உதவி செய்து வழி காட்டும். ஆனால், நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம் அதிக கோபம் வருகிறதே என்ன காரணம் இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை. அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான். ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும். உண்மையான அக்கறை கோபப்படாது. அது உதவி செய்து வழி காட்டும்.…

மனிதனுடைய அடிப்படையான குணம்

மனிதனுடைய அடிப்படையான குணம் வன்முறைதான்.  ஒருவரை ஒருவர் முந்தி நான்தான் முதல் என்று காண்பிக்க, ஆசைப்படும் மனோபாவம் வன்முறையின் ஆரம்பம். விஞ்ஞானம் அமைதியையும், சாந்தத்தையும் எந்தக் காலத்திலும் தராது. அடுத்தாப்பல இருக்கிற மனுசன புரிஞ்சுக்காம, புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம, நிலாவையும், செவ்வாயையும் புரிஞ்சுஎன்ன ஆகப் போகுது.

லட்சியம்

லட்சியம் என்பது சுயநலமா? லட்சியத்திற்கும் சுயநலத்திற்கும் உள்ள வித்தியாசம் ஒரு தனிமனிதனின் ஆசை சுயநலம். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூட்டாக சேர்ந்து ஆசைப்படுவதற்கு பெயர் லட்சியம். பல்லாயிரக் கணக்கான பேர்களின் சுயநலம் ஒருவனுக்கு வரும்போது அது லட்சியம்