விடை தேடி 4

ஆம், எத்தனைக்கெத்தனை திருப்தி அடைந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது, முக்கியமான விஷயம் திருப்தி அடைவதன் எண்ணிக்கை எத்தனை கூடினாலும் அத்தனைக்கத்தனை சந்தோஷத்தின் அளவும் கூடுகிறது. இது எனக்கு கிடைத்த விடை. இனி உங்களுக்கு கிடைத்த விடையையும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன். எந்த காரணமும் காரியமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்கும் கணத்தை நாம் கண்டு கொண்டிருந்தால் நான் சொன்ன விடையை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

நாலு பேர்

நாலுபேர் பேசுகிறார்கள், நாலு பேர் பார்க்கிறார்கள் என்று நினத்தே நாம் நம்மை பல இடங்களில் இழக்கிறோம். ஆயுளில் முக்கால் வாசி காலம் இப்படியே போய்விட்டால் தனக்கென வாழும் காலம் எப்போது எந்த அளவு