அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு

ஒரு தரமாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இடைவிடாது ஆண்டவனைப் பிரார்த்திப்பவன் அவனது அருளால் பிரேம பக்தியை அடைகிறான். குழந்தாய், , இந்தப் பிரேமையே ஆத்மிக வாழ்வின் இதயமாகும். பிருந்தாவன கோபிகள் இதனை அடைந்தனர். அவர்கள் இவுவலகத்தில் கண்ணனைத் தவிரப் பிறிதொன்றையும் உணரவில்லை.

அன்னை சாரதா தேவி அன்பு முரசு

உன் இதயத்தின் உள்ளிடத்திருந்து எப்போதும் ஆண்டவன் நாமத்தைக் கூறிக்கொண்டேயிரு, மனப்பூர்வமாக குருதேவரைத் தஞ்சம் அடை, சூழ்நிலையிலுள்ள பொருள்களை உன் மனம் எவ்வாறு கருதுகிறது என்பது பற்றிய கவலை வேண்டாம். ஆத்ம வழியில் முன்னேறியுள்ளோமா இல்லையா என்று கணக்கிட்டுப் பார்த்துக் கவலைப்படுவதில் உன் காலத்தை வீணாக்காதே, நாம் முன்னேறியுள்ளோமா என்று ஆராய்தலே அகங்காரமாகும். உன் குருவினிடத்தும் இஷ்ட தேவதையிடத்தும் நம்பிக்கை வை.