ஸ்ரீ சங்கரரின் ஞானம் 7

மற்ற சாதனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஞானம் தான் மோக்ஷத்திற்கு நேரான சாதனம் என்பது தெளிவாகின்றது. நெருப்பில்லாமல் எப்படிச் சமையல் இயலாதோ அப்படி ஞானமில்லாமல் மோக்ஷம் இயலாது. தேத்தாங்கொட்டைப் பொடியானது தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டுக் கீழே படிந்து விடுவது போல் ஞானமானது அஞ்ஞானத்தால் அழுக்கடைந்த ஜீவனை அப்பியாசத்தால் அழுக்கற்றவனாக்கி விட்டுத் தன்னையும் மறைத்துக் கொள்ளுகிறது.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 17

சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு   8

ஆத்மா அறிவு மயமானது, பரிசுத்தமானது, உடல் மாம்ஸமயமானது. அழுக்கடைந்தது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறலாம்? ஸத்ரூபமாகிய ஆத்மா அழிவற்றது, அஸத்ரூபமாகிய உடல் தோன்றி மறைவது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக் கூறலாம்? மண்ணாலான குடம் முழுதும் எப்படி மண்ணாகவே இருக்கிறதோ அப்படி பிரம்மத்தாலான உடல் பிரம்மமே. ஆகையால் ஆத்மா என்றும் அனாத்மா என்றும் அஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவது…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு  7

பாம்பு என்ற மதிமயக்கம் பழுதை என்ற அறிவால் எங்ஙனம் நீங்குமோ அவ்வாறு பரிசுத்தமான இரண்டற்ற பிரம்ம ஞானத்தால் மாயையானது அழிவுறும். பிரசித்தமான தத்தம் செயல்களால் ரஜஸ், தமஸ், ஸத்துவம் என்று நன்குணரப்பட்ட குணங்கள் அந்த மாயையைச் சார்ந்தவை. அவித்தை என்பது மனதிற்குப் புறம்பானதன்று. பிறவித் தளைக்கும் பிறவிச் சுழலுக்கும் காரணமான அவித்தை மனதேயாகும். அது (மனது) அழிந்தால் அவித்தை அனைத்தும் அழியும். ஆத்மா உடலை ஆள்வதாய் அதனுள் உறைவது, உடல் ஆளப்படுவதாய் வெளியே இருப்பது, அப்படியிருந்தும் மனிதர்கள்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுரசு.6

மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2

கருமத்தால் அஞ்ஞானத்தை அழிக்க இயலாது, ஏனெனில் அது அஞ்ஞானத்திற்கு விரோதியன்று எப்படி ஒளியால் மட்டும் இருளைப் போக்க இயலுமோ அப்படி ஞானம் ஒன்றினால்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இயலும். ஆத்மா அளவிற்குட்பட்டதாயும் கட்டுப்பட்டதாயும் தோன்றவதற்கு காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் அழியும் பொழுது வேற்றுமையைக் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கியதும் சூரியன் பிரகாசிப்பதுபோல் தன்னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளக்கிக் காட்டும். உலகம் விருப்பு, வெறுப்புக்களால்நிறைந்துள்ளது. அது ஒரு கனவுக்கொப்பாகும். அஞ்ஞான நிலையில் அது உண்மைபோல் தோன்றினாலும், ஞான விழிப்பு ஏற்பட்டதும்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.

அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற…