Athma

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82

தூது சகுனம் …..  ரோகியின் குணங்கள் தெரியக்காட்டி வைத்தியரிடத்தில் சென்று வைத்தியரை அழைக்க வருந்தூதனது லக்ஷணங்கள் மருத்துவர்கள் அநுசரித்து  சாத்தியா சாத்தியங்கள் அறிந்து ரோகியினிடத்திற்கு ஏகுகிறதற்கு லக்ஷணங்களை பூர்வருஷி சிரேஷ்டர்களால் சொல்லியதை இவ்விடத்தில் விவரத்து எழுதுகிறேன். ஏழு தினத்தில் மரணமடையும் தூத லக்ஷணம் …..  எந்த அழைக்கப்போகிறவன் கையில் மதுரமான பண்டங்களைக் கொண்டு வைத்தியனை அழைக்க ஏகுவானாகில், அந்த ரோகி ஏழு தினங்களில் மரணமடைவானென்று அறியவேண்டியது. நாலு நாழிகையில் மரணகுறி தூத லக்ஷணம் ……  ஒரு தூதன்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  81

மரண லக்கின திதிகள் …..  விருச்சிகம், மேஷம் லக்கினத்தின் நந்தாதி திதியிலும், மிதுனம், கன்னிகை இந்த லக்னித்தின் பத்திராதிதியிலும், கர்க்கடகலக்கினத்தின் ஜயாதிதியிலும், கும்பம், சிங்கலக்கினங்களின், ரிக்த திதியிலும், தனுசு லக்கினத்தின் பத்திராதிதியிலும், மிதுன லக்கின ஜய திதியிலும், மகர லக்கின பூரண திதியிலும் இந்த லக்கின திதிகளில் ரோகங்கள் உண்டாகிறதினால் ரோகியானவன் மரணமடைகின்றான். திதிகளின் விவரணம் …..  செவ்வாய்க்கிழமை கிருத்திகை நக்ஷத்திரம் நந்தாதிதி, புதன் கிழமை, ஆயில்ய நக்ஷத்திரம் பத்திராதிதி வியாழக்கிழமை, மக நக்ஷத்திரம், ஜயா திதி…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  80

மரண லக்ஷணம் …..  இரவில் சந்திர பிம்பத்தைக் காட்டினால் இரண்டு சந்திர பிம்பங்கள் இருக்கிறதென்றும் அல்லது பகலில் சந்திரி, சூரியர்கள் இருக்கிறார்கள் என்றும் இரவில் நக்ஷத்திரங்கள் தென்பட வில்லை என்றும் சிவப்பெருமான் தென்படுகிறறென்றும் மலையின் மேல் கந்தருவர்கள் பாடுகிறார்களென்றும் நாகலோகம் அதோயிருக்கிறதென்றம் சொல்லுவான் இவ்விகாரங்கள் பஞ்சதத்துவங்களின் ( பஞ்ச பூதம் ) கெடுதலினால் உண்டானது இவன் சீவிக்கமாட்டான் என்று அறியவும். ஒரு வாரத்தில் நோய் நிவர்த்தி குறி …..  மனிதர்களுக்கு புரட்டாசி மாதத்தில் உத்திர நக்ஷத்திரத்தில், தைமாத…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  79

நாலாவது விதம் ……  சிரத்தில் வியர்வைஉண்டாகிக் கொண்டு வாயிநிடமாகத்தானே மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதால் எட்டு நாடிகள் பலஹீனப்பட்டு சீதளமடைதலினால் அந்த ரோகி சீவிக்க மாட்டான் ( உயிரோடு இருக்கமாட்டான் ). ஐந்தாவது விதம் …..  மரணமடையும் ரோகிக்கு நாக்கு, மூக்குநுனி, இரண்டு புருவங்கள் தாலுதேசம் இவைகள் தென்படாது இவைகளுக்கு அருந்தததி என்றும் துருவம் என்றும் விட்சு திரிபாதி மாத்ரு மண்டலமென்றும் வேறு நாமதேயங்கள் ஆரியர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாவது விதம் …..  மனதானது பிரமித்தால் அவர்களது வார்த்தைகள் பிதற்றவாய்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  78

அசாத்திய லக்ஷணம் …..  வாதமானது பித்த ஸ்தானத்திலும், பித்தமானது கபஸ்தானத்திலும், கபமானது கண்டஸ்தானத்திலும் இருக்குமாகில் அகத்தியம் மரணம் சம்பவிக்கும்.  மேலும் இரவில் அதிகதாஹமும், பகலில் சீதளமும் கண்டத்தில் ( தொண்டையில் ) கோழை கட்டுதலும் ஹீனசுரமும் அதிகபேதியும் சுவாசத்துடன் கூடிய இருமலும், விக்கலும், பக்கசூலையும், உதரசூலையும் முதலிய துர் ரோகங்கள் இருந்தால் அவன் பிழைக்கமாட்டான். இரண்டாவது விதம் …….   மார்பு, கால், கைகள், நாசிகை முதலியது சீதலமாயும், சிரசு மாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தால் அந்த ரோகி ஜீவிக்கமாட்டான்.…

வியாழன் 10

குரு லக்னத்தில் உள்ளவர்கள், ஆசிரியராக, கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகராக, பெற்ற பிள்ளைகளிடம், மிகுந்த பாசமுள்ளவராக திகழ்வர். வியாழன் எந்த லக்னமானாலும், பொதுவாக, 1,2,5,7,9,11ல் இடங்களில் இருப்பின் குரு பலம் உடைய ஜாதகமென கொள்ளவேண்டும். குரு பெண்களுக்கு 2ம் இடம், குடும்பஸ்தானம், 5ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம், புத்திர ஸ்தானம் 9ம் இடம் பாக்கியஸ்தானம், புகுந்த வீடு பாக்கியத்தை குறிப்பிடுவதாகும். இந்த அமைப்பு அதிர்ஷ்ட இடமாகும்.

வியாழன் 9

குரு, சுக்ரன், சுக்ல பட்சத்து சந்திரன், புதன் ஆகியோர் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலேயே இருந்தால், அதிர்ஷ்டசாலியாக, நற்குணவதியாக இருப்பர். குரு பலம் என்றால் குறிப்பிட்ட ராசிக்கு கோசார ரீதியாக குருவானவர் 2,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் ஆகும். குரு உச்சமாக கடகத்தில் நின்றவருக்கு ஒரு தொழிலில் நிச்சயம் இருப்பர், அல்லது தனியார் துறை பள்ளியில் ஆசிரியராகவாவது தொழில் செய்வர்.

வியாழன் 8

குரு மகரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் பலவீனமாக இருப்பார்கள். அறிவாற்றல் குறைந்திருப்பார்கள், அளவோடு செல்வமும், மகிழ்ச்சி ஏற்படும். குரு கடகத்தில் இருந்தால் சரீர நலம் ஏற்படும்.  தோற்றப்பொலிவிருக்கும், கல்விஅறிவு, இனிய சுபாவம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குரு 5, 9ல் இருந்தால் ஜாதகர் பிள்ளைகளை அதிகம் விரும்புவார்.

வியாழன் 7

குரு 9ம் இடத்தில் இருப்பின் நிர்வாக படிப்பில் நாட்டம் ஏற்படும். வேதம், சாஸ்திரம் போன்ற கல்வி துறைகளிலும் தேர்ச்சி உண்டாகும். குரு பலமாக 5ல் இருந்தால் அறிவாளியாகவும், நல்ல கல்வியும், உன்னதமான ஸ்தானத்தை வகிப்பர். குருவும், சந்திரனும் கூடி 2ம் இடத்தில் இருக்க 9ம் வீட்டோன் அவர்களைப் பார்க்க, இந்த அமைப்புடைய ஜாதகர், சீரும், சிறப்பும் பெற்று வாழ்வர். குரு,சனி, கேது மூவருமே வேத, வேதாந்தங்களை சத்தியத்தின் தத்துவத்திற்கு ஆதார பூர்வமாகத்திகழ்கின்றனர்.

வியாழன் 6

குரு மேஷத்தில் இருந்தால் குடும்பநலமுண்டாகும், உடல்வலு இருக்கும் ராணுவத்தலைமை தாங்கக்கூடும், ஒரு ஸ்தாபனத்தில் தலைமை தாங்ககூடும். குரு தனபாவத்தின் அதிபதி இருவரும் 1,2,4,7,10 ஆகிய ஸ்தானத்தை அடைந்திருந்தால் சகல சம்பத்தும் நிறைந்தவராவர். குரு தனுசில் அல்லது மீனத்தினருக்காகவும் அது லக்னமாக அமையவும் அங்கு செவ்வாயும் சந்திரனும் கூடி இருக்கும் பொழுது பிறந்தவர் சிறந்த செல்வம் பெற்றவர். குருவும் சூரியனும் இணைந்து இருப்பின் குறிப்பிட்ட ஜாதகர் பெற்றோரை விட சீரும் சிறப்புமாக இருப்பர். பொருட் சேர்க்கை பாராட்டு புகழும்…

வியாழன் 5

குரு உச்சம் பெற்று வர்க்கோத்தமாக இருப்பின் சகல பாக்யங்கள் பெற்று வாழ்வர். குரு ஆட்சி பெற்ற தனுர் லக்னக்காரகர்கள், சூரியனும், செவ்வாயும் 5ல் உள்ளவர்கள்.  உலகளவில் சாதனையும், ஆன்மீகத்துறையில் சேவைசெய்வர். குரு 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் வேதாந்தியாகவும், பேராசிரியராகவும், ஞானவழியில் வாழ்க்கை அமைப்பர். குரு மகர ராசியில் நீச நிலையை பெறுவர்.  அவர் மகரராசியில் வக்கிரகதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால் நீசப்பங்கம் ஏற்படும். குருவுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் அரசாங்கப்பதவி கிடைக்கும்.

வியாழன் 4

வியாழன் ரிஷபத்தில் இருந்தால் நல்லசுகம் வாழ்வில் அமையும்.  இனிமையாக பேசுவார். பொதுமக்களிடையே செல்வாக்கு இருக்கும்.  தியாக குணம் இருக்கும். குரு 9ம் வீட்டோனுடன் இணைந்தோ 9ம் வீட்டோனை பார்க்கும் போது தியானம், யோகத்தில் ஈடுபாடும், தந்தை பெரும் பணக்காரராகவும் அறப்பணியில் நாட்டமும், ஞானவானாக இருப்பார். குருவானவர் நீசம்பெற்று லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் கவலைப்படுபவராக இருப்பார். குரு 5ல், 5ம் அதிபதி பலம்பெற்ற சுபர்பார்வை பெற்றால் மகன் உண்டு.

வியாழன் 3

வியாழன் 5லும், 5ம்பாவாதிபதி உச்சம், ஆட்சியில் நின்றிடில் புத்திர பாக்கியம் ஏற்படும். குரு பார்வை 5ம் பாவாதிபதியை கேந்திர, திரிகோணத்தில் நின்றிடில் புத்ர பாக்யம் ஏற்படும். குரு ஒற்றைப்படை ராசியில் 5 அல்லது 9ல் இருந்தால் சாதனையாளராகவும், தலைவராகவும் விளங்குவார். குரு பலமுடன் இருந்தால் வேத விற்பன்னராகி ஞானஒளி பெறுவார். குரு சிம்மத்தில் இருப்பின் கீர்த்தி பெற்றவர்கள், பலசாலிகள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தலைமை தாங்குகிற தகுதி உடையவர்கள்.

வியாழன் 2

நீச வியாழனுடன் சூரியன் நின்றிடில் மித்திரர்களை பழிகாரர்களாக ஆக்கிவிடும். வியாழன் நின்ற இராசிக்கு அடுத்த ராசியில் சுக்கிரன் தனியே இருந்தால் மணவாழ்வு மகிழ்வுறும். குரு 12ல் இருந்தால் அவருக்கு அவரது குலதருமத்திற்கு மாறாக திருமணம் நடக்கும். வியாழனும், லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் கேந்திர, திரிகோணத்தில் இருப்பின் புத்ரபாக்யம் ஏற்படும்.

வியாழன் 1

கிரகங்கள் நம் விதியைப் பிரதிபலிப்பவர்கள். வியாழன் லக்னத்தில் நின்றிடில் எவருக்கும் நலம் செய்யும் நாட்டம் உண்டு.  சாஸ்திர சம்பிரதாயம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். வியாழன், சனி, செவ்வாய் சேர்ந்திடில் குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும். வியாழன் லக்னத்தில் அமர்ந்தாலோ, அல்லது லக்னாதிபதியோடு குரு சேர்ந்தாலோ குரு நட்பு பாவத்திலமர்ந்து பார்த்தாலோ ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும். குரு 2வது பாவத்தில் இருந்தாலும், முதல் திருமணம் ஆகி, சில கால கட்டத்தில் 2வது மனைவியும் அமையும்.

புதன் 5

புதனும், சந்திரனும் பரிவர்த்தனமாகிவிடில் அவர் நினைத்த படிப்பை படிக்க முடியாது.  பட்டப்படிப்பும் ஏற்படாது. புதனுக்கு புதன் 6,க்கு8ல் நின்றிடில் ஆண் குடும்பத்தினரை பெண்ணுக்கு பிடிக்காது. அதேபோல் பெண் குடும்பத்தினரை ஆணுக்கு பிடிக்காது. புதன் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ, அதுவும் கேந்திரத்தில் இருப்பின் புத்திரயோகம் ஏற்படும். அதனால் செல்வந்தராகவும், சிறந்த பேச்சாளராகவும், பொதுமக்களிடையே பேரும், புகழும் அடைவர். புதன் நீச்சனாக இருந்தால் வேறு மதம், வேறு இனம், வேறு மொழியைச் சேர்ந்தவர் வாழ்க்கைத் துணையாக அமையும். புதனும், குருவும்…

புதன் 4

புதன் மீனத்தில் நீசம் அடைந்திருந்தால் கல்வித்தடை, தாமதக்கல்வி படிப்பை பாதியில் நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டமேற்படும். புதன் நீசமாகி, சந்திரனோடு தொடர்பு இருக்குமானால் தாயை பகையாளியாக்கிக்கொள்வார்கள். புதன் நீசப்பட்ட ஜாதகர், பெண் சபலம் ஏற்படு நீர்த்துப்போன விந்து பலத்தால் புத்திர பாக்யம் ஏற்படாது.  சுய இன்பம் அனுபவிப்பவர். புதன் ( நீசம் பெற்றால் ) ஒரு அலி கிரகமென்பதால் சிலருக்கு திருமணத்தின்மீது பற்று இருக்காது சில ஆண்கள் பெண் குரலில் பேசுவது பெண்கள் போல் நடந்து கொள்வார்கள்.

புதன் 3

புதன் 9ம் இடத்தில் இருந்தால் அறிவாளியாக முடியும், பேச்சுவன்மை உண்டாகும், வர்த்தகத்துறை கல்வியில் தேர்ச்சிபெறக்கூடும். புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகி மகிழ்ச்சியோடு வாழ்வதுடன் அடக்கமுள்ளவளாகவும், சுமுகமாகப் பழகுகிறவளாகவும் விளங்குவார். புதன் பொதுவாக சிம்ம லக்கினக்காரகர்களுக்கு தனுசில் இருந்தால் தனயோகம் வரும். புதன், செவ்வாய் ஆகியோர் ஒருவருக்கொருவர் சமசப்தமாக இருந்தால் உயர்ந்த பெரிய சரீரம் அமைந்திருப்பர்.

புதன் 2

புதனுக்கு 1,2,5,6,9,10ல் கேது நின்றிடில் காதல் வரும், குரு, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி பெறும்.  செவ்வாய் பார்க்கில் தோல்வியுறும். புதன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் எழுத்து, சொந்த தொழில், கலைகளில் ஆர்வம் ஏற்படும். புதன் மீன லக்னக்காரகர்களுக்குக்கேந்திராதிபத்திய தோஷம் உடையவரானாலும் கெடுதலை பண்ணமாட்டார். புதன் பலம் கூடிய ரிஷப லக்னத்தாருக்கு விஷயஞானம், பேச்சில் கெட்டிக்காரத்தனம், பொருளாதார தட்டுப்பாடு இராது.

புதன்

ஜோதிட விதிமுறைகள் வாழ்க்கைக்கே வழிகாட்டியாக விளங்குகின்றன.   புதன் லக்னத்தில் நின்றிடில் படிப்பில் நாட்டம், கலையார்வம், பந்த பாசம் உள்ளவராய் திகழ்வர். புதனுடன் சூரியன் சங்கமித்தால் தாய் மாமனுக்கு கெடுதி விளைவிக்கும். புதன் பலமுடன் இருப்பின் விஷ்ணு பூஜை வாயிலாக சித்தி பெறுவர்.  புதன் 10ல் இருந்தால் கணிதம், ஜோதிடம், மனைவியிடம் அன்பு, வியாபாரம், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பும் உண்டாகும். புதனுக்கு 1,5,9,2,6,10ல் கேது இருப்பின் காதல் வரும். செவ்வாய் பார்க்கின் தோல்வி, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி…

செவ்வாய் 12

செவ்வாய் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ அந்த வீடும் கேந்திர வீடாக அமைந்தால் ருசிகரயோகம் ஏற்படும்.  இதனால் தைரியம், சாகஸம், வெற்றி மேல் வெற்றி பெருவர். செவ்வாய் 2ம் வீட்டிலோ, 4ம் வீட்டிலோ, 12ம் வீட்டிலோ இருப்பின் அவர் வீட்டுக்கு மூத்த பிள்ளையாவார். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலோ, கடகம், சிம்மத்தில் நின்றாலோ குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது இவர்களால் பார்க்கப்பட்டாலாவது செவ்வாய் தோஷம் ஏற்படாது.

செவ்வாய் 11

செவ்வாய் கிரகத்திற்கு 7ல் சூரியன் நின்றால், அங்காரகன் வக்ரம் பெற்று உள்ளார் என்று கொள்ளவேண்டும். செவ்வாய் 12ல் நிற்பது தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் பாதிக்கப்படும் ஆயுள் பங்கமும் ஏற்படும். செவ்வாய் பெண் ஜாதகத்திலும், ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரனும் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெற்று இருந்தால் தாம்பத்திய உறவு பலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய்7ல் இருந்தால் இருதாரம் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு 8ல் இருந்தால் மனைவியை இழந்து வாழ்வார், பின்னர் பல மாதர்கள் தொடர்பு ஏற்படும்,…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  76

வாதாதி சர பேதங்கள்  சிலேஷ்ம தேஹிக்கு கம்பீரமாக சரம், பித்தேஹிக்கி சீக்கிர சவரம் வாததேகிக்கு சமசரம், பித்ததில் துரிதகதி, சிலேஷ்மத்தில் ஸ்திரகதி, வாதத்தில் மந்தகதி சேஷ்டை உண்டாகி இருக்கும். வாதாதி பிரகிருதி தேஹ லக்ஷணம்  பித்த ரோகி தேகம் உஷ்ணமாயும், வாதரோகத்தால் சீதலமாயும் சிலேஷ்ம ரோகியின் தேகம் சலமயமாயும் இருக்கும் இவைகளைத்தான் தேகத்தின் சேஷ்டைகள் என்று சொல்லப்படுகின்றது. ரோகமானது சாத்தியமென்று, அசாத்தியமென்றும் இரண்டு விதமாயிருக்கிறது கால சம்பிராப்தியால் சகலமும் நிஷ்பலமாகி ஜீவியின் இருப்பு மரணமானது நிச்சயமாகின்றது காலஞானமில்லாததினால்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  75

காலசங்கிய பிரமாணானி இருபத்தோராயிரத்தி  அறு நூறு( 21,600) சுவாசமானது இரவும், பகலும் ஒடுகின்றது இதற்குதான் பிராணன் என்று பேர், இதுகாலபிராப்தியால் நாசம் சம்பவிக்கின்றது. சரீரம் என்கிற வீட்டில் ரக்ஷகப்படுகின்றது, உள்புரமாக மூச்சானது பத்து அங்குலமும் மூச்சு வெளியில் விடும்போது பனிரெண்டு அங்குலமும், போகின்றது ஆகையால் மனது நிறுத்தி வருதலும், போதலும் சமானமாயிருந்தால் காலதரிசனமாகா.  சிரஞ்சீவியாயிருப்பான். காலபேதத்தால் வாத பித்த சிலேஷமென்கிற தாதுவினால் தேகத்தின் சகல குணங்களும் நிச்சயப்படுகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  74

இடகலை நாடி .; நாசிகையின் இடது பாரிசமாக ( வழி ) வரும் காற்றை இடகலை என்றும், சந்திரனென்றும், பித்துரியானமென்றும் பதினாறுகலைகளை உடையதென்றும் சொல்லப்படுகின்றது. இனி சுழிமுனையென்னும் நாடியை குறித்து இது வைத்திய சாஸ்திரமாதலால் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.  ஓ பார்வதி, சர லக்ஷணங்கள் முதலியது சர சாஸ்திரத்தில் புகட்டி இருக்கிறேன் இது வைத்திய கிரந்தம் ஆதலால் அவ்விஷயங்களை விவரமாய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது சரம் பலதென்று தெரியக் காட்டினேன் இனி அதுகளின் மாறுதலால் உண்டாகும்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  73

சூரிய சந்திராதி சுர லக்ஷணம் ..  இடாசலாம நிஸ்வாச சோம மண்டல கோசரா  பித்ருயான மிதிஞேயம் வாமமாசிரித்யதிஷ்டதி  தக்ஷிணே பிங்களா நாடி வஹ்ணி மண்டலகோசரா தேவயானமிதிஞேயம் புண்யகர்மானுகாரணி. வலது பக்கத்து நாசிகை துவாரமாய்வரும் உஸ்வாச நிஸ்வாச ரூபமாய் இருக்கும் காற்றை பிங்களை என்றும், சூரியனென்றும், தேவயானமென்றும், புனராவிருத்தி ரஹிதமென்றும் புண்ணிய கருமங்கள் செய்யும்படியானதென்றும் பன்னிரெண்டு அங்குலம் பாயுமென்றும் அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  72

ஸ்வர பேதம் …..  சூரிய சுரத்தில் உதயமாகி அஸ்தமானத்தில் சந்திரன் இருந்தால் மிகவும் சுபமாகும்.  இது தவிர்த்து சந்திரனுக்கு பதில் சூரியனும், சூரியனுக்கு பதில் சந்திரனும் உதயமானால் அசுபம் ஹானி பீடை முதலியது உண்டாகும். கிரம சுர லக்ஷணம் .. கிரமமான சுரம் உதயமாகிலும் சுபம் வாய்க்கும் என்றும் வினவ தேவியார் சுவாமியைப் பார்த்து ஓ நாயகா, தாங்கள் கூறியது ஒன்றும் எனக்கு தெரியவில்லை. பார்வதி பிரசனை ..   சூரியனென்னறால் யார், சந்திரனென்றால் யார் அவைகளின் ரூப…

இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்

இஞ்சியின் இயல்பு இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில்சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருகவேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்துசாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலேதாஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும் தொண்டை வலி ஆஸ்துமா போன்ற…

செவ்வாய் 10

செவ்வாய், சனி ஒன்றுக்கொன்று சமசப்தமாக இருந்தாலும், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளே வாழ்க்கையாக அமைந்துவிடும். செவ்வாய் பலம் பெற்ற இடங்களில் மகரம், மேஷம், விருச்சிகம் அகிய இடங்களில் சூரியனோடு இணைந்து, இருப்பின், பொடி, புகையிலை போடுபவராக இருப்பர். செவ்வாய் லக்கினத்தோடு அமைந்து அதுவே மேஷம், விருச்சிகம், மகரமாக அமைந்து ஆணாய்இருப்பினும் பெண்ணாய் இருப்பினும் வாழ்க்கை துணைவரை இழப்பர். செவ்வாயும், லக்னமும் மகரத்தில் நின்றுவிடில், அநீதி வழிசெல்வார், நீதி வழியில் பொருள் ஈட்டமாட்டார்.

செவ்வாய் 9

செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றவர்கள், பாதுகாப்பு படையில், காவல் துறையில் பணியாற்றுவார்கள். செவ்வாய் சுக்கிரன் சனி இவர்களுக்குள் ஏதாவது ஒரு தொடர்பு ஜாதகத்தில் இருப்பின் அந்த ஜாதகர் மறைக்கப்பட்ட பொருளை அறிவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பர். செவ்வாய்க்கு மகரத்தில் உச்சநிலை காரணமாக நிலம், மனை, வீடு வாகனம் பொறியியல் துறைகள் மூலம் நன்மைகள் ஏற்படும். செவ்வாய்க்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, புதன், ராகு நின்றால் யோகமேற்படும். செவ்வாய் நீசம்பெற்று பலமுற்று பாபகிரகங்களுடன் சேர்ந்து 12ல் இருப்பின் இடது…

செவ்வாய் 8

செவ்வாய் ஆட்சி உச்சம் வீட்டில் இருப்பது ருசிகர யோகம்.  இது போன்ற யோகம் அமைவது காவல்துறை, இராணுவம், கப்பல் துறைக்கு அதிகம் பயன்படும். செவ்வாயும், சுக்கிரனும் 1,4,7,10ல் கூடி இருக்குமாயின் இல்லாளை இழந்தவராய் அல்லது விவாகரத்து செய்தவராய் இருப்பர். செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் தன் பந்துதுக்களிடத்தில் எப்போதும் விரோதித்துக் கொள்வர். செவ்வாய் கடகத்தில் நீச்சம்பெற்று அதில் லக்னம் அமையப்பெற்றவர்கள் படிப்பு குறைவாக இருப்பினும், சிறு தொழில் செய்து ஜீவிப்பர்.

செவ்வாய் 7

செவ்வாய் கும்பத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் செல்வம் குறையும், கவலைகள் சூழும், கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டி வரும்.  சூதாட்டத்தில் பொருள் இழக்க நேரிடும். செவ்வாய் தசையில் சனி புத்தியில் பகைவர்களின் கொடுமை, துன்பம், துயரம் அதிகரிக்கும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் தொடர்பு இருந்து செவ்வாய் பலம் பெற்றால் பொறியியல் கல்வி ஏற்படும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் புதன், சனி கூடி இருப்பின் இன்சினீயரிங் கல்வி பெறக்கூடும். செவ்வாய், குரு பலமாக இருந்து வித்யாஸ்தானத்தோடும் தொடர்பு இருப்பின் சட்டம்…

செவ்வாய் 6

செவ்வாயுடன் தொடர்பு கொண்ட சனி பலம் பெற்றிருந்தால் ஒருவர் தொழில் நுட்பக்கலை வல்லுநராகவும், மெகானிக்கல் இன்சினியராகவும் முடியும். செவ்வாய் துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் லாகிரி வஸ்துக்களில் நாட்டம் செலுத்துவர்.  சிற்றின்பத்து செலவு செய்வார்கள், கடுமையாக பேசுவார்கள். செவ்வாய் மீனத்தில் இருக்க பிறந்தவர்கள், நல்ல பதவி வகிப்பார்கள், முன்னேற்றம் திருப்தியாக இராது.  வெளிநாட்டு வாசமிருக்கும். செவ்வாய் கடகத்தில் இருக்க பிறந்தவர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பர், உடல் நலம் குறைந்திருக்கும், விவசாயத்துறை லாபம் அளிக்கும்.

செவ்வாய் 5

செவ்வாய் எங்கிருந்தாலும், கடகம்,சிம்மம் ஆகிய லக்ன\ ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை. செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் பலமுடன் விளங்கினால் சக்தி, முருகன் பூஜை வாயிலாக சித்தியை பெறுவார். செவ்வாயும் 12ம் வீட்டோனும் கூடி பலம் இழந்தால்சகோதரரிடையே சக்கரவு ஏற்படும். செவ்வாயுடன் 12ம் வீட்டோன் கூடி இருந்தால் சிறைப்பீதி ஏற்படக்கூடும்.  செவ்வாய், புதனுடன் சேர்ந்தால் மருந்துகள் சம்பந்தப்பட்ட கடைகளிலும் மருத்துவராகவும், திறமை ஏற்படும். செவ்வாய் 10…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  71  

ஒரு பக்ஷத்தில் மிருத்தியு லக்ஷணம் …..  பிரகிருதி ரூபமான சீவன் விகுருதம் அடைதலினால் காலசம்பிராப்தியால், பார்வையானது மட்டமாகிறது.  அப்பொழுது சந்திர நாடியில்லாமல்  சூரிய நாடி தானே இரவும், பகலும் ஒடிக்கொண்டு இருக்கும். அப்படி இருக்கும்படியான புருஷன் ஒரு பக்ஷத்தில் மரணம் அடைவான். வேறு வித குறி  எந்த புருஷனது வஸ்திரத்திலும், கண்டகசுரத்திலும், தேகத்திலும், முகத்திலும், துர்நாற்றம் வீசுமாகில் அவன் யோகியாயிருந்தாலும் தடையின்றி ப க்ஷதினத்தில் மரணமடைவான் இது நிச்சயம். வருஷம், அயனம், ருது, மாதம், பக்ஷம் இவைகளெல்லாம்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  70

ஆத்தும நிலை  சுருதி யுக்தி அனுபவம் என்னும் மூவிதங்களினால், சரீரம் ஆத்மாவென்றும், மனது அந்தராத்மாவென்றும், பிராணன் பரமாத்துமா என்றும், இதுதான் பஞ்சத்துவங்களை தாரணை செய்து இருக்கிறதென்றும் தெரியவருகிறது. ஆகையால் ஆத்மாவுக்கும், மனதுக்கும் விகுருமமுண்டாகில் தடை இன்றி மனிதன் இந்தலோகத்தில் சீவிக்கமாட்டான். காலமென்கிறவனால் பார்க்கப்பட்டான்.  அதாவது அந்த சீவிக்கி காலபிராப்தி ஆய்விட்டது என்று ( முடிந்து ) அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  69

நாலு வித வாஞ்சை  காலமென்கிற அக்கினியானது ஜடாக்கினியில் சேருவதினால் நான்கு விதமான வாஞ்சை உண்டாகின்றது.  அவையாவன 1.  ஆகாரம், 2. சலம், 3. நித்திரை, 4. காமம், இவைகளின் ஆகார மென்கிற அன்னம் இல்லாமற்போனால் தாது நஷ்டமாகின்றது சலம் இல்லாமல் போனால் ரத்தம் சுஷ்கித்துப் போகின்றது காமத்தினால் நேத்திரேந்திரியம் கெட்டுப் போகின்றது தூக்கமில்லாமையால்  சகல வியாதிகளும் தொடர்கின்றன.

மனித உடலைப்பற்றி அறிவோம் 10

மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட் மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட் அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல் வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்

மனித உடலைப்பற்றி அறிவோம் 9

மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது) குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி) பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306 இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5 உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ  உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி

மனித உடலைப்பற்றி அறிவோம் 8

கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27 மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல் மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur

மனித உடலைப்பற்றி அறிவோம் 7

வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள் வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள் கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்) மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33 ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8

மனித உடலைப்பற்றி அறிவோம் 6

பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °) சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்

மனித உடலைப்பற்றி அறிவோம் 5

மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை மிகச்சிறிய செல்: விந்து மிகச்சிறிய எலும்பு:  காது குருத்தெலும்பு முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம் சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ

செவ்வாய் 3

செவ்வாய் துலாத்தில் இருக்கப்பிறந்தவர்கள் லாகிரிவஸ்த்துக்களில் நாட்டம் செலுத்துவர். செவ்வாய் மீனத்தில் உள்ளவர்கள் நல்லபதவி வகிப்பார்கள், வெளிநாட்டு வாஸம் கூடும். செவ்வாய் கடகத்தில் உள்ளவர்கள் கடல் கடந்து செல்வர், சொந்த வீடு இராது. செவ்வாய் 2, 4, 7, 8, 12 இந்த பாவங்களில் இருந்தால் களத்ர தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 2

செவ்வாய், சூரியன் 7,8 ல் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே அந்த பெண் விதவையாகிவிடுவாள். செவ்வாயுடன், சூரியன் சங்கமித்தால் உடன் பிறப்பிற்கு தீங்கிழைப்பார். செவ்வாய் சிம்மத்தில் இருக்கப் பிறந்தவர்களுக்கு உடல் உறுதி தைரியம் இருக்கும்.

செவ்வாய் 1

ஆட்சி மன்றத்தில் உள்ள அமைச்சர்களைப் போன்றவர்களே ஜாதகத்தில்உள்ள கிரகங்கள். செவ்வாய் லக்கினத்தில் நின்றிடில் கோபகுணம், விரோதம் கொண்ட இதயத்தினராய் இருப்பர். செவ்வாய் ஆண்கிரகம், சகோதர காரகன், உத்தியோக காரகன், பூமி காரகன், கர்மக்காரகன், மூளைக்காரகன் ஆகிறார். செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகம் ஆட்சிவீடுகள், மேஷம் மூலத்திரிகோண வீடு, மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்ச வீடாகும் கொண்டுள்ளார். செவ்வாய் மகரத்தில் இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு புத்திர பாக்கியம் செல்வம், அரசு அந்தஸ்து ஏற்படும்.  வெற்றி, புகழ் ஏற்படும்.

சந்திரன்20

சந்திரனுக்கு 8லும், லக்னத்திற்கு 8லும் 3 கிரகங்கள் இருந்து அவை பாப கிரகங்களாக இருப்பின் குழந்தைக்கு ஆயுள் குறைவு. சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை எந்த லக்னமானாலும் முறைகேடான வாழ்க்கை தருகிறது.  சிற்றின்ப பிரியராக செய்கிறது.  முரணான திருமண வாழ்க்கை ஏற்படுத்துகிறது.

மனித உடலைப்பற்றி அறிவோம் 4

16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72 18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2 19: மிகப்பெரிய உறுப்பு: தோல் 20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்

மனித உடலைப்பற்றி அறிவோம் 3

11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7 12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14 14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22 15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25

மனித உடலைப்பற்றி அறிவோம் 2

6: இதய அறை எண்: 4 7: மிகப்பெரிய தமனி: பெருநாடி 8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg 9: இரத்தம் Ph: 7.4 10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33

மனித உடலைப்பற்றி அறிவோம் 1

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206 2: தசைகளின் எண்ணிக்கை: 639 3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2 4: பால் பற்களின் எண்ணிக்கை: 20 5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)

உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம்

உடலில் ரத்தம்  ஒரு சுழற்சியில் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். எப்படிப்பட்ட அதிசயமான தொழில் நுட்பம் இயற்கை எப்படியெல்லாம் சிந்தித்து நம்மை வடிவமைத்திரிக்கிறது

பிளாஸ்மா’ என்றால்

பிளாஸ்மா’ என்றால் ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும். சூரிய ஒளியில் இருந்து நமக்கு இது முழுமையாகக் கிடைக்கிறது. ரத்த அழுத்தம் என்றால்  உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், ‘பம்ப்’…

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை  ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் ஆற்றல் சேமிப்பு, ரத்த வெள்ளை அணுக்களே. அவை ஆரோக்கிய சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்லெட்’ அணுக்களின் வேலை  உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, ‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.

சந்திரன்19

சந்திரன் ( அல்லது ) குரு 5ம் அல்லது 9ம் வீட்டில் இருந்து குரு,  லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் அமர்ந்து அவர் சந்திரனை 9 ம் பார்வையாக பார்த்தால் ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி கட்டுரை எழுதுபவராகவும் கவிதை எழுதுபவராகவும் சிறந்த ஆய்வாளராக விளங்குவார். சந்திர லக்னத்திற்கு 10ம் இடத்தில் புதன், சனி சேர்க்கைபெற்றால் கவிதை, கட்டுரை, கதை எழுதி சிறந்து விளங்குவார்.

சந்திரன்18

சந்திரனிலிருந்து 5,11ல் ராகு-கேது இருந்தால் விவாஹபாக்கியமே இல்லாமல் அமைந்து வருகிறது. சந்திரன் சுக்ரன், சனி ஒருவருக்கொருவர் ஏதோவகையில் தொடர்புடையவராக இருந்தால் காதல் திருமணம் ஏற்படும்.

சந்திரன்17

சந்திரனுக்கு 4,7,10ல் குரு இருப்பின் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது.  ஜாதகருக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அடையச்செய்யும். சந்திரன், சனி, சேர்க்கை, அல்லது பார்வை ஏற்படின் சன்யாச யோகம் அமையும். சந்திரன் லக்னம், சுக்ரன் இவர்களுக்கு 7ல் சனி இருந்தாலும், பார்த்தாலும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சந்திரன்16

சந்திரன், கடக லக்னத்தில் இருந்தால் சொந்த, பந்தங்கள்மீது அதிக பாசமாக இருப்பர். அவர்களை ஆதரித்து மகிழ்வோடு வைத்திருப்பர். சந்திரன், 1,4,5,7,9,10ல் இருந்து குரு அல்லது சுக்ரன் பார்வை ஏற்படின் சிறந்த நாடாளும் பலன் ஏற்படும். சந்திரனுக்கு 4க்குடையவன் கேதுவுடன் இணைந்தாலும் அல்லது சுக்கிரனுடன் எந்த வீட்டில் இருந்லும் அந்த ஜாதகர் தெய்வாம்சம் பெற்று ஞானமார்க்கத்தில் ஈடுபடுவர்.

சந்திரன்15

சந்திரன், சுக்ரன் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தாலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறும். சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புடவை, அழகு பொருட்கள், வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பர். சந்திரன், ரிஷப ராசியில் இருந்து, குருவின் பார்வைபெறீன் பேரும் புகழும் கல்வி, கேள்விகளில் சிறந்தும் பலபேர் மெச்சும் வண்ணம் புகழ் பெற்று வாழ்வர்.

சந்திரன் 14

சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுக்கிரன், சனி, சேர்க்கை, மருத்துவ தொழில் செய்வர், சூரியன் அல்லது செவ்வாய், ராகு சேர்க்கை டாக்டராக வாய்ப்பு உண்டு, லக்னத்திற்கு 10ல் சந்திரன், சுக்கிரன் இருந்து சுபகிரஹபார்வை ஏற்படின் டாக்டராக இருப்பர். சந்திரன் கேந்திரத்தில் இருந்து பாபகிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இருப்பின் பாலாரிஷ்டம் ஏற்படும். சந்திர மங்களயோகம், மனைவி வந்தபின் அதிர்ஷ்டசாலியோகம் பூமி, புகழ், வாகனம் போன்ற செல்வத்தை அடைவர்.

சந்திரன் 13

சந்திரா லக்னத்தின் அதிபதி உச்சமுற்றிருந்தாலோ, அல்லது நீச்சமுற்ற கிரகங்களின் இல்லத்தில் இருந்தாலும் ஜாதகர் செல்வம், செல்வாக்குடையவராக இருப்பர். சந்திரன், சூரியன் சேர்ந்து 9,5 லக்ன வீட்டில் இருந்தால் பிற்காலத்தில் கண் பார்வை இழப்பர். சந்திரன், சூரியன், சனி 12, 2, 8ல் முறையே இருப்பின் கண்பார்வை அற்றவராக இருப்பர். சந்திரன், சுக்கிரன் 6,8,12ல் இருப்பின் கண்  பார்வை இரவு நேரத்தில் தெரியாது. சந்திரன் 7ம் வீடாக சிம்மராசியில் அமர்ந்து அதை செவ்வாய் பார்வை செய்யின் அந்த ஜாதகருக்கு…

சந்திரன் 12

சந்திரனுடன் ராகுவோ, கேதுவோ கூடி இருப்பின் ஜாதகரின் பேச்சுக்கு மதிப்பு இராது. சந்திரனுக்கு கேந்திர திரகோணங்களில் குரு, சுக்கிரன், சனி நின்றால் யோகங்கள் ஏற்படும். சந்திரன், சுக்கிரன் சமசப்தமாக இருப்பின், திருமணம் காலதாமதமாவதோ, மணவாழ்வும் சிறப்பாக அமையாது. சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சந்திரா லக்னம், லக்னத்திற்கு, ஐந்து, ஏழாம் அதிபதிகள் இணைந்து இருப்பினும் ஒன்றுக்கொன்று பார்வைபெறினும், அம்சத்தில் இணைந்தாலும் திருமண வாழ்வில் பிரிவினைத்தரும், பாவிகளின் பார்வை ஏற்படில் விவகாரத்தைத்…

சந்திரன் 11

சந்திரன் தனஸ்தானத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அந்த ஜாதகி ஏழ்மையானவள். சந்திரன் பெண்ணின் ஜாதகத்தில் 3,4,5,7,8,9,10ல் இருந்து குரு பார்வை பெற்றால் சகல மங்களங்களையும் பெற்று சுபிட்சம் அடைவாள். சந்திரனும், சனியும் கூடி 7மிடத்திலிருந்தால் இரண்டாம் தாரம் அல்லது இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடும். சந்திரனுக்கு பத்தில் குரு இருந்தால் அமலாயோகம் என்று பெயர்.  இவர் மத்திய வயதில் பாக்கியம் அடைவார்.  நித்திய தர்மத்துடன் கூடியவராக இருப்பார்.  பல தேசங்களில் பிரசித்தி அடைவார்.

சந்திரன் 10

சந்திரன் 9ம் வீட்டில் இருந்தால் அறிவாற்றல், கல்விமான், படிப்பில் ஆர்வம் இருந்த வண்ணம் இருக்கும். சந்திரன் 12ல் இருந்தால் அயல்நாட்டுக்குச் சென்று படிக்கும் தகுதி ஏற்படும் பேச்சு மென்மையாக இருக்கும். சந்திரன் லக்னத்திற்கு 11ம் இடத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் 7ல் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஐஸ்வர்யத்தையும் சுகபோகங்களையும் அடைவர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து சுக்கிரனும், புதனும், 3,4,5,7,8,9,10ல் இருந்து பலமும் பெற்றால் அந்த ஜாதகி மிகவும் சுபிட்சமாக அந்தஸ்து உடையவளாவாள். சந்திரன் நீசமாக விருச்சிகத்தில் உதித்தவர்களுக்கு…

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை  சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்.

ரத்தம் பற்றிய தகவல்கள் 1

 ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது⁉️ ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபினின் பணி என்ன⁉ ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை + சக்தி எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை ஏற்படும். ரத்த சிவப்பு அணுக்களின் பயன் என்ன  ? ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின்…

ரத்தத்தில் உள்ள பொருட்கள்

1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை⁉️ ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. 2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது⁉️ எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் ஏற்படும். எலும்பு மஜ்ஜை தேவைக்கு உணவிலிருந்து கல்லீரல் வழியாக சத்துக்களை ஏற்ப மண்ணீரலும் கிட்னியும் சேர்ந்து ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் .

சந்திரன் 9

சந்திரனுக்கு 5க்குடையவன் கன்னியில் சுக்கிரனுடன் இணைந்து பாவிகள் சம்பந்தம் பெற்றாலும் குழந்தையோகம் ஏற்படும். சந்திரன் 6ல் (ஸ்திரி சூதகத்தில்) வியாதியால் பீடிக்கப்படுவாள்., மரியாதை, பணிவு இராது, பகைவர்கள் அதிகம் இருப்பார்கள் அற்பமானப் பணமே சேரும். சந்திர பலம், ஜன்ம ராசியில் இருந்து, சந்திரன் உலவுகிற 2,5,9 ஆம் ராசியானால் மத்திமம் 4,8,12ஆம் ராசியானால் அசுபம், 1,3,6,7,10, 11 ராசிகளில் இருந்தால் சுபம்.

சந்திரன் 8

சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கப்பெற்றால் மனிதாபிமானம் குறைந்திருக்கும், உறவினரை விட்டுப் பிரிந்திருப்பார்.  பொருளாதார நெருக்கடி இருக்கும். சந்திரன் கன்னியில் இருப்பாரானால் கல்வித்திறன் கூடும் இனிமையாக பேசுவர்.  சத்தியத்தை காப்பர், பெண்குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திரன் கடகத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல வீடு அமையும். ஜோதிட புலமை ஏற்படும்.  கடல் கடந்த பயணங்களும், வெளிநாட்டு தொடர்பு உண்டாகும்.  ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள். சந்திரன் பெண் ஜாதகத்தில் 6 அல்லது 8லோ  இருக்கக்கூடாது.

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதியோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

சந்திரன் 6

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.  பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.  இச்சுழற்சியில் பூமியைச் சுற்றுகிற சந்திரன், சூரிய பாதையில் குறிக்கிடும்.  இடம் வடபாகத்தில் அமைவது ராகு, தென்பாகத்தில் அமைவது கேது என அழைக்கபபடுகிறது. சந்திரனுக்கு 12ல் சனி இருந்தால் தமது வாழ்க்கைத் துணையினை பிரிந்து வாழ்வர். சந்திரன் பலமுடன் இருந்தால் சிவ வழிபாட்டின் மூலம் ஞானஒளி பெறுவர். சந்திரன் சிம்மத்தில் நின்று குரு பார்வை பெற்றால் அரசியலில் முன்னோடியாக திகழ்வார். சந்திரனும், சுக்கிரனும் பலம் பெற்றால் மக்கள்…

சந்திரன் 5

சந்திரன் புதனுடன் சேரும்போது மனநிலை பாதிப்பு, சித்த பிரமை ஏற்படுத்துகிறது. சந்திரன், செவ்வாயுடன் சேரும்போது ரத்த அழுத்த நோயை தருகிறது.  சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது உணர்ச்சிவேகம் செய்து மனநிலை பாதிப்பை தருகிறது. சந்திரன் ராகு, கேது கிரகங்களுடன் சேரும்போது கிரஹணதோஷம் ஏற்படுகிறது. சந்திரன் ஒரு தினக்கோளாகும், சந்திரனது நக்ஷத்திரம் ரோஹிணி, அஸ்தம், திருவோணம்.

சந்திரன் 4

சந்திரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருக்கும் போது சந்திர மங்கள யோகம். சந்திரனுக்கு 1,4,7,10ல் சுக்கிரன் இருக்கும்போது மாளவ யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 1,4,7,10ல் புதன் இருக்கும்போது பத்திர யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 6,7,8 சுபகிரகம் இருக்கும்போது அதியோகத்தை தருகிறது.  சந்திரன் சனியுடன் சேரும்போதும், பார்க்கும்போதும் நரம்புதளர்ச்சி, வாத நோயை தருகிறது.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகட யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது சுனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  68

இதுவுமது …..  சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள்.  அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் …..  மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  67

சரீர ரக்ஷண உபதேசம் முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது.  அவசியமாக இருக்கிறது சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும். சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது.  சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று காலமென்கிற பராக்கிற உச்சாஹம் இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  66

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர்.  இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது. மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.

சந்திரன் 2

சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு. சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர். சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர். சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க.  ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு. சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.

சந்திரன் 1

                     கோள் செய்வதை நல்லவரும் செய்யார் சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார். சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது. சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன் நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  65

காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை.  அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள்  சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.  

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  64

மேலும் காலமானது  வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி  பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது  நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது.  இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர  வேறு கிடையாது.  ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.

தனஞ்சேருவது

ஒன்பதாமிடத்தோன் திசையில், பத்தாமிடத்தோன் புத்தியில் அப்போது நடக்கும் கோட்சாரத்தில் நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க, பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும் அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க, பிறந்தோனுக்கு புராதனமான பூமி மனை இவைகளில் பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில் தனம் பொருள்  இவைகள் கிடைக்கும்.  

சூரியன் 8

சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின் கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது. சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால் மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர். சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால் சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,…

சூரியன் 7

சூரியன் மிதுனராசியில் இருப்பின் ஜோதிடத்தில் நாட்டம் ஏற்படும். சந்திரன் சிம்மத்தில் இருந்து புதன் பார்த்தால் அவர் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பர், புதன் கன்னிராசியில் இருப்பின் கவிஞராகவோ, ஜோதிடராகவோ திகழ்வார். சூரியன் 1,4, 7, 10 கேந்திரத்தில் அல்லது 10ம் வீட்டதிபதி கேந்திரத்தில் அல்லது குரு லக்னத்தில் அல்லது 4ம் இடத்தில் இருந்தால் சிறந்த மந்திரியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பர். சூரியனுக்கு 12ல் சனி இருப்பின் நாஸ்திக வாதம்புரிவர். சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தோர் அல்லது 10மிடத்தில் இருப்போர் பலர்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  63

பிர்மாவுக்கு கல்பகாலம் பிராப்தமாகிற்து.  காலத்தை தவிர வேறுவித தெய்வங்கள் கிடையாது. அயன் மால் ருத்திரன் என்கிற மூன்று உருவமே காலத்தின் உண்டாக்கல், ரக்ஷித்தல், சம்மரித்தல் என்ற தொழில்களுக்கு நாமங்களாம் (பெயர்கள்). (சத மாயுர்பவ) நூறு வருடங்கள் மனிதர்களின் ஆயுட் நாட்களென்று வேதங்கள் முறையிடுகின்றது. வேதவாக்கியத்தின் பிரகாரம் சீவிக்காமல் சுவல்பகாலத்தில் அதாவது இளந்தை பருவத்தில் கௌமார பருவத்தில் யவ்வன பருவத்தில் வார்த்தீக திசையில் அல்லது பிரக்கச்சே தானே மரணம் அடைவதற்கு காரணம் அவர்கள் செய்யும் பாவகர்மங்களேயாம்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  62 

காலமானது வருங்காலம், நிகழ்காலம், சென்ற காலம் என மூன்று விதமாக உழலுகின்றது. இந்த காலத்தை தான் பிரம்மா என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் சொல்லுகிறார்கள். பிபீலிகாதி பிரம்மபரியந்தம் காலசக்கிரத்தில் சிக்கிக்கொண்டு பஞ்சருத்தியங்களுக்கு அடங்கி இருக்கின்றன. ஆகையால் தான் திரிமூர்த்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். காலத்தினால் விருக்ஷங்கள் பலபிராப்தி உண்டாகின்றது.  தானியங்கள் பலிக்கின்றது. ஸ்திரீகளும் ருதுமதி ஆகிறார்கள், காலத்தினால் தான் சகலவித நிறங்களும் மாறுகின்றது. குணசுபாவங்களும் மாறுகின்றது. ஜனனமரணாதிகளும் உண்டாகின்றது. அயனுக்கு ஒருநாள் ஆகும்போது பதினாறும் தேவேந்திரர்கள் பிறந்து…

சூரியன் 6

சூரியன், புதன், குரு, செவ்வாய், சனி ஆகியோர்கள் சுப பலம் பெற்றும் ஒங்கி இருந்தால், சிறந்த வழக்கறிஞர்கள் ஆவார்கள். சூரியன் பலமுற்று நீசம் பெற்று பாபருடன் சம்பந்தப்பட்டு 12ல் இருந்தால் வலது கண் பழுதுறும். சூரியன் நீச்சமாகவோ, உச்சமாகவோ இருப்பின் மனைவிக்கு அடங்கி வாழ்வர், மனைவி வார்த்தைக்கு கட்டுபடுவார்.  மனைவியின் மனம் கோணாமல் வாழ்வர். சூரியன், சந்திரன் இருவரும் 12 அல்லது 6 வது வீட்டில் இருப்பின் அவருக்கு ஒரு கண் தான் தெரியும் அதேபோல் மனவிக்கும்…

சூரியன் 5

சூரியன் 9ம் வீட்டில் இருந்தால் பட்டப்படிப்பில் வெற்றி, வாழ்க்கை வசதிகள் ஏற்படும். சூரியன் 12ம் வீட்டில் இருந்தால் எதிலும் தடை என்று ஒன்றை ஏற்படச்செய்வார்.  வெற்றி அடையும் தருணத்தில் தோல்வி ஏற்படும். சூரியன் 9ல் இருந்தால் செல்வ சீமானாவார், உறவினர்களை வெறுப்பார்,கடவுள் பக்தி இருக்கம், பெற்றோருக்கு அதிக நலமிராது. சூரியன் நீசமாக பிறந்தவர்களுக்கு, எத்தொழில் செய்யினும், எதிர்பாராத பாதிப்புகள்,விளைவுகள், உருவாகும். சூரிய உதயத்திலிருந்து 12.30 நாழிகை முதல் 15 நாழிகை வரையிலுள்ள காலகட்டத்தை அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.…

சூரியன் 4

சூரியன் சிம்மத்திலிருந்து சிம்ம நவாம்சத்திலேயே இருக்கப்பெற்றால் துணிவுள்ளவராகவும், கீர்த்திமானாகவும், செல்வச்சீமானாகவும் விளங்குவார். சூரியனும், சந்திரனும் 3ல் ஒன்று கூடி இருந்தால் சகோதர, சகோதரிகளால் அனுகூலம் பெற வாய்ப்பிராது. சூரியன் மகர ராசியில் இருக்கப்பெற்றால் நிரந்தரமான தொழில் அமையாது, வாழ்க்கையில் சந்தோஷம் இராது.  மனதில் உறுதி இராது. 1ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தாரதோஷத்தை உண்டாக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஒரு ஜாதகத்துக்கு அதேபோல் சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஜாதகத்தை சேர்த்துக்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  61

கால பிரசம்ஸை …..  காலமானது  சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும், அழிக்கவும் செய்கின்றது.  தூக்கம் ஜாகரணை இவைகளை செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது. கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  60

கால ஞானம்              இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால் தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.  சிவனார் கால ஞானத்தை முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  59

சப்த  பரீக்ஷ வாத தோஷ குறி …..  வாதத்தில் சமானமான வார்த்தைகள் உண்டாகும். பித்த தோஷ குறி ……  பித்த தோஷத்தில் சிரிப்பும் பிதற்றலுமான வார்த்தைகளுமாக இருக்கும். கப தோஷ குறி …..  கபதோஷத்தில் ஹீனசுரமான வார்த்தைகளுமாயிருக்கும். துவந்த தோஷ குறி …..  துவந்ததத்தில் (சார்ந்து ) மிசிரமமான வார்த்தைகள் உண்டாகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  58          

ரூப பரீக்ஷ வாத ரூப பரீக்ஷ …..  வாத தோஷத்தில் தேகத்தைப்  பார்த்தால் கருநிறமாக தோணும். பித்த ரூப பரீக்ஷ …..  பித்த தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் மஞ்சள்  நிறமாயும் அல்லது  சிகப்பு  நிறமாயும் தோணும். கப ரூப பரீக்ஷ …..  கபதோஷத்தில் தேகமானது வெளுத்த நிறமாய் காணப்படும். துவந்த ரூப பரீக்ஷ …..  துவந்த தோஷத்தில் தேகமானது இரண்டு தோஷ நிறம் கலந்து சார்ந்து காணும். சந்நிபாத தோஷ ரூபம் …..  சந்நிபாத தோஷத்தில் தேகமானது…

இரண்டாம் பாவம்

இரண்டாம் பாவம் தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

லக்கின பாவம்

லக்கின பாவம் உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 57

நேத்திர பரீக்ஷ திரிதோஷ  நேத்திரம் …..  திரிதோஷத்தில் மூன்று  தோஷ  குறிகள் ஒன்றாயும் மேகவர்ணமாயும் புகனநேத்திரமாயும் இருக்கும். திரிதின மரண நேத்திர  லக்ஷணம் …..  சந்நிபாத லக்ஷணங்களுடன் எந்த ரோகயின் ஒர நேத்திரமானது பயங்கர   ரூபத்துடன்  கலந்து  இருக்கிறதோ அந்த மனுஷன் மூன்று நாளையில் மரணமடைவான். மரண நேத்திரக் குறி …..  கண்கள் கறுப்பு  நிறமாயும் சோதி ஹீனமாயும்  கண் உள்ளாகியும் மந்த திருஷ்டியாயும் எவனுக்கு  இருக்குமோ அவனும்  எமனை தரிசனம் பண்ணுவான். ஏக தின…

அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாவது காண்டம் 56

நேத்திர  பரீக்ஷ வாதாதிக்க நேத்திரம் …..  வாததிக்கத்தில் நேத்திரங்கள் சலத்துடன் கூடி கண்ணீர் வடிந்துக் கொண்டு புகை  நிறமாயும், மஞ்சள்  நிறமாயும் இருக்கிறது. பித்தாதிக்க நேத்திரம் …..  பித்தாதிக்கத்தில் நீலநிறம் அல்லது கறுப்பு, சிகப்பு கலந்த  நிறம், தீபதுவேஷியாயும், வெப்பமாயும் இருக்கும். கபாதிக்க நேத்திரம் …..  கபாதிக்கத்தில் மந்தமந்த பார்வை, வெண்மை நிறம், ஜலத்துடன் கலந்து பார்வை ஹீனமாயும் இருக்கும். துவந்த தோஷ நேத்திரம் …..  துவந்தத்தில் இரண்டு தோஷ லக்ஷணம் ஒன்றாயிருக்கும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  55 

நேத்திர  பரீக்ஷ வாத தோஷ நேத்திரம் …..  வாயு தோஷத்தில் கண்களானது  சிகப்பு  நிறமாயும், புகை நிறமாயும், ரவுத்திர  நிறமாயும், கண்களில்  நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண் ……  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண் ….. கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை  மட்டாயும் இருக்கும்.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகல யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது தனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபாயோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

சூரியன் 3  

சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம். சூரியன் புதனுடன் மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால் ஞானியாகவும், தலைவராகவும் திகழ்வார்.  நான்கு கிரகங்கள் ஒரு ராசியில் நிற்க, அதில் ஒரு கிரகம் உச்சம் அடைந்தால் சிறந்த ஞானியாக திகழ்வார். சூரியன், செவ்வாய் சேர்க்கை 10 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் அரசியலில் கொடிகட்டி பறப்பார். சூரியனுக்கு 10ல் செவ்வாய் இருந்தால் மதுபானம் அருந்துவதிலும், மாதர் சுகத்தில் ஆர்வம் கொள்வார்.  சூரியனுக்கு 10ல் குரு…

சூரியன் 2

 சூரியனுனும்  செவ்வாயும் கூடி எங்கிருந்தாலும் ஜாதகி இளம் விதவையாகும் அவலநிலை.  குருபார்வை ஏற்படின் இதற்கு விதிவிலக்கு உண்டாகும். சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பூர்வீகச்சொத்து  நிலைப்பதில்லை.   தந்தை காலத்திற்குள் பூர்வீகச் சொத்து விரையமாகிவிடும். சூரியனுன்  புதன் சேரும்போது, புதாத்தியயோகம், நிபுணத்துவயோகம் தரும்.  பட்டப்படிப்பு ஏற்படும்.  படிக்காத  மேதையாக திகழ்வார்கள். சூரியனுடன்  சனி சேர்ந்து இருந்தால் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒற்றுமை இருக்காது கருத்து வேறுபாடு ஏற்படும். சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்தால் மனைவி வழியில் பிரச்சனை…

சூரியன் 1

சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டுப்பட்டுத்தான் உலகம் இயங்குகிறது.  ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் ஆத்மகாரகன், சந்திரன் மனோகாகரகன் தாய், தந்தையர் ஆவார். சூரியனும், சந்திரனும் 0 டிகிரியில் சேரும்போது அமாவாசை ஏற்படுகிறது. சூரியனும், சந்திரனும் 180 டிகிரியில் இருக்கும் போது பெளர்ணமி ஏற்படுகிறது.   சூரியன் 5ம் பாவத்தை அடைந்தால் சந்தானம் தங்காது.  சூரியன் ஒரு ஆண் கிரகம்.  பகலில் பிறந்த ஜாதகருக்க சூரியன் பிதுர்கிரகம் சிம்மம் ஆட்சி வீடு, மேஷம் உச்சவீடு, துலாம் நீசவீடாகும். சூரியன் & செவ்வாய்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம்  இரண்டாவது காண்டம்    54

வாத தோஷம் …..  வாத தோஷத்தில் தேகமானது தொட்டால் அளவாய் இருக்கும். பித்த தோஷம் …..  பித்த தோஷத்தில் தேகமானது தொட்டால் அதிக உஷ்ணமாயாவது அல்லது சீதளமாயாவது இருக்கும். கப தோஷ குணம் …..  கபரோகத்தில் தேகம் தொட்டால் குளிர்ச்சியாயும் சில்லிட்டு இருக்கும். துவந்த தோஷ குணம் …..  துவந்த தோஷத்தில் தேகமானது தொட்டால் இரண்டு தோஷ  குணங்களை அல்லது சகல தோஷ  குணங்களை பெற்று இருக்கும்.  

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  53

ம ல ப ரி க்ஷ வாத தோஷ  மலம் …..  வாத தோஷத்தில் மலமானது  கருப்பு  நிறத்துடனும் பந்தகித்து  இருக்கும். பித்த தோஷ மலம் …..  பித்த தோஷத்தில் மலமானது, மஞ்சள்  நிறம்  அல்லது சிகப்பு  நிறமாயாவது விசர்ஜனமாகும். கப தோஷ மலம் ……  கபத்தில் மலமானது  வெண்மை நிறத்துடன் ஆமத்துடன் கலந்து நுறை நுறையாக வெளியாகும். துவந்த தோஷ மலம் …..  துவந்த தோஷத்தில் இரண்டு தோஷ குணங்கள் கூடி மலம் வெளியாகும். சந்நிபாத…

குருசந்திர யோகம் 1

குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும் “குருசந்திர யோகத்தை “வாரி வழங்குகிறார் “கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன் குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும் ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும் கூரப்பா கோதையரால் பொருளும் சேரும் குவலயத்தில் பேர் விளங்கோன் கடாட்ச முள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே” பாடல் விளக்கம்:- குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும். மனைவி வழியில் தனலாபம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ  52

சந்நிபாத தோஷ ஜிம்மை ….. நாக்கானது சந்நிபாதத்தில் கறுப்பு  நிறமாயும் சுக்கிற வர்ணமாயும் இருக்கும். துவந்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது துவந்தத்தில் இரண்டு தோஷ குறிகளை மிசிரமமாய் கலந்து தோணும். அசாத்திய ரோக ஜிம்மை குறி …..  நாக்கு நீண்டும் சகல வர்ணங்கள் கலந்தும் சொள்ளு வடிந்து கொண்டு நாக்கு பிரண்டும் பேச முடியாமல் செய்யும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ 51

    வாத தோஷ ஜிம்மை …..  நாக்கானது வாயு தோஷத்தில் மஞ்சள் நிறத்துடன் கறகறப்புமாயிருக்கும். பித்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது பித்த தோஷத்தில் ரத்த வர்ணத்துடன் கலந்த நீலவர்ணம் போல் தோணும். கப தோஷ ஜிம்மை ……  நாக்கானது கபதோஷத்தில் வெண்மையும் திரவமுடன் கனத்தும் இருக்கும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 50

மரண குறி …..  தெற்கு திசையாய் தைலபிந்து பரவினால் சிலநாளில் மரணம் சம்பவிக்கும் அல்லது மீளான் என்று அறியவும். சுக குறி ……  மேற்கு, வடக்கு திசையில் தயிலபிந்து பரவினால் ஆரோக்கியம், என்று அறியவும். மாத மரண குறி ……  ஈசான்ய மூலையாய் தயிலபிந்து பரவினால் ஒருமாதத்தில் எமனைப் பார்ப்பான் என்று அறியவும். மரண குறி ……  நிருருதி மூலைலும், வாயுமூலையிலும் தயில பிந்து பரவுதலால் மரணம் சம்பவிக்கும் என்று அறியவும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  நேத்திர பரீக்ஷ.,  55

வாத தோஷ நேத்திரம்   வாயு தோஷத்தில் கண்களானது சிகப்பு நிறமாயும், புகை நிறமாயும் ரவுத்திர  நிறமாயும், கண்களில் நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண்  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண்  கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை மட்டாயும் இருக்கும்.

யாருக்கு எங்கே பலம்? 6

கேந்திர பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும்.  கேந்திரத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்த பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைமுறையில் வரும் போது அந்தந்த கிரங்களின் ஆதிபத்திய பலத்தில் கேந்திர பலம் பெற்ற கிரகத்தின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் மாறுதல்கள் ஏற்படும்.

யாருக்கு எங்கே பலம்? 5

 சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,4,7ல் அமர்ந்து சனி 1,4,10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட…

யாருக்கு எங்கே பலம்? 4

 அணியான ஜென்மம், உயிரான நாதன், அழகான கேந்திரமத்திலே -விரிவான ஆயுள் வெகுவாய் உயர்ந்து கெம்பீரனாவன் குயிலே! மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் எந்த ராசி ஜென்ம லக்கினமாக அமைந்த போதிலும் லக்கினாதிபதி லக்கின கேந்திரத்தில் அமர்ந்திருப்பது எல்லா வகையிலான யோகங்களுக்கும் சூட்டிய யோக லட்சணமாகும்.  இவர்களுக்கு ஆயுளுக்கு குறைவில்லை. விரிவான ஆயுள் ஏற்படுவதுடன் கெம்பீரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்பது விதியாகும். ஆதிபத்தியத்தில் பாதகாதிபத்தியம் பெற்று பாபக்கிரகங்கள் பகை நீச்சம் வீடுகளில் அமர்ந்து கேந்திரம் பெற்று அல்லது…

யாருக்கு எங்கே பலம்? 3

 உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும், தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிகமிக உத்தமம்.  சாயா கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும் கேது 10ம்  இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம் ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.  இதற்கு மாறுபட்ட வகையில் கேந்திரங்களில் பாபக் கிரகங்களும், திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும் வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன. லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக கேந்திர திரிகோணங்களில்…

யாருக்கு எங்கே பலம்? 2

 கொடுப்பதிலும் கெடுப்பதிலும் நிகரற்ற பலசாலியான சனி பகவான் ஜென்ம லக்கினத்திற்கு 7மிடத்தில் பூரண பலம் பெறுகிறார். 7மிடத்தில் சனி இருக்கும் போது பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைகிறார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.  களத்திர காரகனான சுக்கிரன் சுகஸ்தானமாகிய 4மிடத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் மிக்க பலசாலிகள் பாக்கியங்களோடு வாழும் பாக்கியம் அமையும். புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் (முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.

யாருக்கு எங்கே பலம்? 1

கொடியோர்கள் கேந்திரத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களைத் தருவார்கள் என்பதும்  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் அமர்ந்திருந்தால் சுப யோகத்தைச் செய்வார்கள் என்பதும் பொது விதி. கேந்திரம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,4,7,10. திரிகோணம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,5,9.ஆகும். சூரியன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தசம கேந்திரத்தில் பூரண பலம் பெறுகிறார்கள். இப்படியாக பத்தாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். இவர்களுக்கு படிப்பும் நல்ல விதமாக…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 49

குல தேவதை தோஷ தயில பிந்து லக்ஷணம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் தன்குல தேவதைகளின் பிரகோபத்தினால் வியாதி சம்பவித்ததென்று அறியவேண்டியது. சுகதயில பிந்து லக்ஷணம் ….. தயில பிந்துவில் மண்டபம் போல் தோணுமாகில் வியாதி கிடையாதென்று அறியவேண்டியது. வியாதி நிவர்த்தி குறி ….. பூர்வ திசையாக தயிலபிந்து பாய்ந்து பரவினால் வியாதி நீங்கிவிட்டதென்று அறியவும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 48

பூத தோஷ நிவார தயிலபிந்து ரூபம் ….. மண்டலாகாரமாய் தோன்றுமாகில் கிரஹபீடை ஒழிந்தததென்று ஓளஷத சிகிச்சை செய்தல் வேண்டும். சாகினி கிரஹ தேவதா தோஷ லக்ஷணம் ….. தயிலபிந்து திரிகோணகாரமாய் தோணுமாகில் சாகினிதேவதை வீட்டு தேவதைகளால் நோய் உண்டானதென்று அறியவேண்டியது. பூத பிரேத தோஷ குறி ….. தைல பிந்துவில் சாலனி உருவம் தோன்றினால் பூத பிதேங்களினால் நோய் உண்டானதென்று அறிய வேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 47

சிராயுதயில பிந்து ரூபம் ….. அன்னபக்ஷிகள் வாத்துக்கள் முதலியது சம்பூரணமாயும் தாமரைக்காய் பூ முதலியது நிறைந்த தடாகத்தை போலும், சத்திரம், சாமரம், தோரணம் இவைகளைப்போல் தோணினாலும் அந்த ரோகி சிராயுவாயிருப்பான். பூததோஷ தயில பிந்து ரூபம் ….. தயிதலபிந்துவில் எருக்கன் செடிப்போல் தோன்றினால் அந்த புருஷனுக்கு சாகினிமோகினி முதலியவைகளால் தோஷம் சம்பவித்ததென்று அறியவேண்டியது. கிரஹதேவதா தோஷ ரூபம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் வீட்டின் தேவதைகளால் தோஷம் உண்டானதென்று அறியவேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 46

அசாத்திய தயிலபிந்து உருவம் ….. மூத்திரத்தில் விட்ட தயிலபிந்துவானது ஆமையைப் போலும், நகத்தடி கலப்பை, எருது, நரி, ஒட்டகம், பன்னி இவைகளின் உருவம் போலும் தோணுமாகில் ரோகமானது அசாத்தியமென்றும் அறிய வேண்டியது. மரண கால தயிலபிந்து ரூபம் …… ஆயுதங்கள், கத்தி, வில்லு, கேடயம், உலக்கை, சூலம், கதை முதலிய உருவமாக தோணுமாகில் சந்தேகமின்றி அந்த ரோகி எமபுரத்திற்கேகுவான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 45

சந்நிபாத குறி ….. கறுப்பு வன்னமாய் மூத்திரநிறமிருந்தால் சந்நிபாதமென்றும் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பிரசூதி தோஷ குறி ….. மஞ்சள் நிறமும் உபரிபாகத்தில் கிருஷ்ண வர்ணத்துடன் புத்புதாகாரமாய் மூத்திரம் விசர்ஜனமானால் பிரசூதி தோஷமென்றும் அறியவேண்டியது. பித்த வாத கப சுராதிக்க குறி ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறமும், வதாதிக்கத்தில் ரத்தநிறமும், கபாதிக்கத்தில் நுறை நுறையாயும், சுராதிக்கத்தில் புகை நிறமும் தோணுகின்றது. மேலும் தயிலபிந்துவை மூத்திரத்தில் விட்டு அதனால் தோணுகின்ற உருவங்களைத் தெரிந்து அதன் சுபாசுபங்களை அறிந்து சிகிச்சை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 44

ரசாதிக்ய மூத்திர குறி ….. மூத்திரமானது கரும்பு ரசத்தைப் போல் ஒத்து நேத்திரமானது பிஞ்சர வன்னமாயும் இருந்தால் சகாதிக்யத்தினால் உண்டானதென்று அறிந்து வங்கணம் செய்விக்கவேண்டியது. ஆமவாத ரோக குறி …… மூத்திரம் மஞ்சள் வன்னமாயும் அதிகமாயும் ஆனால் ஆமவாத ரோகம் என்று அறியவேண்டியது. அதிகசுர குறி ….. சிகப்பாயும் சுவச்சமாயும் தூமிரவன்னமாயும் மூத்திரமிருந்தால் அதிக சுரமென்று அறியவேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 43

வேறு விதம் ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறம் அல்லது நிர்மலமான மூத்திரம் ஆகும். அப்படியே சமதாதுவிலும் கிணற்று சலம்போல் மூத்திரம் இறங்கும் க்ஷயரோகத்தில் கறுப்புநிறம் மூத்திரம் ஆகும். மேலும் ஊர்த்துவபாகத்தில் மஞ்சள் நிறம் அதே பாகத்தில் சிகப்பு வர்ணம் மூத்திரத்தில் தோன்றினால் பித்த பிரகிருதி சந்நிபாதமென்று அறிய வேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 42

இதுவுமது ….. மூத்திரத்தை பார்க்கும்போது அடியில் ரத்தம் கலந்து போல் தோணுமாகில் அதிசார ரோக மென்றும், நெய்பிந்துக்களைப் போல் இருக்குமாகில் ஜலோதர ரோகமென்றும், வசும்பைப் போல் வாசனையும், தயிரைப்போல் நீர் இறங்குமாகில் ஆமவாதமென்றும், குங்கும நிறம் அல்லது மஞ்சள் நிறமூத்திரமும் அதே வன்னமான மலமும் ஆகுமாகில் வாதசுர மென்றும் அறிய வேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 41

மூத்திரதாரையின் நிறக்குறி ….. மூத்திரமானது வெண்மை தாரையாகவும், மஹா தாரையாகவும், மஞ்சள் வர்ணமாயும் இருந்தால் சுரரோகமென்றும், சிகப்பு நிற தாரையாயிருந்தால் தீர்க்கரோகமென்றும் கறுப்பு நிறதாரையாயிருந்தால் அவசியம் மரணமென்றும் சவ்வீரவரணமாகிலும் மாதுலங்க பல ஆகாரத்துடன் அதே வரணமாவது இருந்தால் சுபம். சலத்தைப்போல் இருந்தால் அசீரண மூத்திரமென்று அறியவேண்டியது.

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதி யோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

கல்வியும் வித்தையும்

கல்வி, வித்தை, பற்றி ஜோதிடம் நமக்கு எத்தனையோ விதிகளை கொடுத்திருக்கிறது. அந்த விதிகள் அனைத்தும் நம்மால் கை கொள்ள முடியாது. ஆனால் அதில் சில விதிகளையாவது அனுஷ்டிக்கலாம். அப்படி செய்வது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். வித்யாரம்பம் என்று சொல்லப்படும் கல்வி கற்க ஆரம்பிக்கும் முதல் நாள் திருவோணம், புனர்பூசம், பூசம், மிருகசீரிஷம், அவிட்டம், ஸ்வாதி, சதயம், அனுஷம், திருவாதிரை, அஸ்தம், சித்தரை நட்சத்திரங்கள் முதல் தரமானது. அஸ்வினி, ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 40

ரோக சாத்திய குறி ….. அந்த தைலபிந்துவானது தாமரை புஷ்பாகாரமாயும், சங்குசக்கிராகாரமாயும், வீணை ஆகாரத்தைப் போலும் சிம்மாசனத்தைப்போலும் மல்லிப் பூ மொக்கைப்போலும் தோன்றினால் அந்த ரோகம் சாத்தியமென்று அறிய வேண்டியது. மரண குறி ….. அந்த தயில பிந்துவானது பக்ஷியைப்போலவும், ஆமையைப்போலவும், எருதைப்போலவும், சிங்கத்தைப்போலவும், பன்றியைப்போலவும், சர்பத்தைப் ( பாம்பு ) போலவும், குரங்கைப்போலவும், விருச்சிகத்தைப் ( தேள் ) போலவும், குக்குடத்தைப்போலவும் தோணுமாகில் அந்தரோகி எமபுரத்திற் கேகுவானல்லது மீளான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 39

தோஷ குறி  பாத்திரத்தில் விட்ட தயில பிந்துவானது பரவினதுப்போல் இருந்தால் வாத ரோகமென்றும், குமிழி குமிழிப்போல் கிளம்பினால், பித்தரோகமென்றும் உருவமாய் தோணினால் கபரோகமென்றும் தயில பிந்து உண்ணாக முழுகிவிட்டால் அசாத்தியமென்றும் அறியவேண்டியது. சாத்தியா சாத்திய ரோக குறி …..  அந்த தையில பிந்துவானது வியாபித்தால் ரோகம் சாத்தியமென்றும் மேலாக முட்டை முட்டையாய் கிளம்பினால் கஷ்டசாத்தியமென்றும், மேல் எம்பாமல் முழுகிவிட்டால் அசாத்தியம் என்றும் அந்த ரோகி சீவிக்க ( மரணம் ) மாட்டானென்றும் அறியவேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 38

தோஷாதிகளின் மூத்திர நிறம் மூத்திரமானது வாதத்தில் சிகப்பாயும், பித்தத்தில் மஞ்சள் நிறமாயும், கபத்தில் வெண்மையாயும், சந்நிபாதத்தில் கருப்பு நிறமாயும் இறங்கும். துவந்த தோஷ மூத்திர நிறம் வாத பித்தத்தில் பொகை நிறமாயும் ( புகை ) வாத சிலேஷ்மத்தில் நுறை, நுறையாயும், பித்தசிலேத்துமத்தில் மிசிரமாயும் மூத்திரம் இறங்கும். மூத்திர பரீ¬க்ஷவிதி அதிகாலையில் துத்திநாகம் அல்லது வெங்கலபாத்திரத்தில் ரோகியை மூத்திரம் பெய்யச் செய்து அதில் முதல் தாரையும், அந்திய தாரையையும் நிலத்தில் பெய்யும்படி செய்து மத்திஸ தாரையைமாத்திரம் அந்த…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 37

சுராகம்ப கால வாதரோக நாடிகதி ….. சுர ஆரம்பத்திலும், வாதரோகத்திலும் நாடியானது அதிக உஷ்ணமாய் நடக்கும். பலஹீன சுர அதிசார கிரஹனி நாடி சலனம் ….. துர்பலரோகம், சுரம், அதிசாரம், கிரஹணிரோகம், இவைகளில் நாடியானது மிகவும் துர்பலமாயிருக்கும். அப்படியல்லாமல் பிரபலமாயிருந்தால் மரணமாகும். தீர நாடி லக்ஷணம். வெகு காலமாய் ரோக பீடி தனது நாடி தீர நாடி என்றுப் பேர். அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாம் காண்டத்தில் நாடி சாஸ்திரம் சம்பூர்ணம்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 36

பாலியம், கௌமாரம், யவ்வனம், வார்த்திகம் என்கிற அவஸ்தைகளுக்கு தக்கின பிரகாரம் நாடிகளின் சலனம் குறைந்து கொண்டே வரும். சுராதி ரோகங்கள் உண்டாகும் போது நாடிகளின் சலனமானது பேதப்படும். நாடிகள் வாயு சஞ்சாரத்தினால் சரீரத்தில் ரத்தத்தை வியாபிக்கச் செய்கின்றது. அந்த ரத்ததோஷத்தினால் அந்த நாடிகளில் ரத்தபரவல் பந்தகித்தால் அப்பொழுது நாடி சஞ்சரமாயும், வேகமாயும், துர்பலமாயும், க்ஷீணமாயும் நடக்கும். இரத்தத்தால் உஷ்ணமுண்டானால் நாடியானது அதிவேகத்துடன் சஞ்சலமாய் நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 35

நாலு முதல் ஏழு வருஷ சலனம் ….. நாலு வருஷம் முதல் ஏழு வருஷம் வரையிலும் ( 90 ) தகுதி மணி நேரத்தில் நாடி அடிக்கும். ஏழு வருடம் முதல் எண்பது வருடம் வரையிலும் நாடி சலனம் ….. ஏழு வருடம் முதல் பதினான்கு வருடம் வரையிலும் ( 85 ) தகுதியும், பதினாறு வருடம் முதல் முப்பது வருடம் வரையிலும் எண்பது தகுதியும், முப்பது முதல் ஐம்பது வருடம் வரையிலும் ( 75 )…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 34  

உத்பவதின நாடி சலனம் ….. மனிதன் பிறந்த உடன் அவனது நாடி ஒரு மணி நேரத்தில் நூற்றிநாற்பது தகுதி சலிக்கும் அல்லது அடிக்கும். பிரதம வருஷ சலனம் ….. பிறந்த நாள் முதல் ஒரு வருஷம் வரையிலும் ஒருமணி நேரத்தில் நாடியானது நூற்றி முப்பது தகுதி அடிக்கும். துவிதிய வருஷ சலனம் ….. பிறந்த காலம் முதல் இரண்டு வருஷம் வரையிலும் 110 – தகுதி அடிக்கும். திருதீய வருஷ சலனம் ….. இரண்டு வருஷம் முதல்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 34

கம்ப ரோக குன்மரோக நாடி லக்ஷணம்  குன்ம ரோகம், கம்பரோகம் இவைகளில் நாடியானது புறாவைப் போல் நடக்கும். விரண பகந்தரரோக நாடி லக்ஷணம் விரணம், பசுந்தரம், இந்த ரோகங்களில் நாடியானது பித்தநாடியைப் போல் நடக்கும். வமன ரோக அபிகாதரோக நாடி லக்ஷணம் வாந்தி செய்தவன், காயத்தை அடைந்தவன் வேகமாய் சஞ்சரிக்கிறவன் இவர்களின் நாடி மத்தித்தயானை, அன்னம், இவைகளின் நடையை ஒத்திருக்கும். சிலேஷ்மத்தில் அதிகமாய் பிரகோபித்திருக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 33

பிரமேஹ ஆமதோஷ நாடி லக்ஷணம் பிரமேகத்தில் நாடி மிசிரமாயும், கிரந்திரூபமாயும், ஆமதோஷத்தில் விழித்தவன் போலும் நாடி நடக்கும். விஷ தோஷ குன்மரோகவாயு சமாப்தி கால நாடி லக்ஷணம் விஷ தோஷத்தில் நாடியானது ஊர்த்துவ கதியாயும், குன்மரோகத்தில் அதோ முகமாயும், வாயு சமாப்திகாலத்தில் ஊர்த்துவபாகத்தில் எழுந்து குதித்தாப் போலும் நாடி நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 32

மலமூத்திர பந்தன விஷ சிகாரோக நாடி லக்ஷணம் ….. மல மூத்திரத்தை அடக்குகிறவனது நாடி அதிவேகமாய் நடக்கும் விஷ சிகாரோகத்தில் தவக்களை நடையைப் போல் நடக்கும். காமிலா மூத்திரகிருச்சிரரோக நாடி லக்ஷணம் ….. காமிலா ரோகம், மூத்திரகிருச்சிரம் இவைகளில் நாடி கரிஷ்டமாய் நடக்கும். வாத ரோக சூலரோக நாடி லக்ஷணம் ….. வாத ரோகம், சூலரோகம், இவைகளில் நாடி வக்கிரமாய் நடக்கும். பித்த ரோக ஆமசூல நாடி லக்ஷணம் ….. பைத்திய ரோகத்தில் நாடி அதிக சுவாலையாயும்,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 31

கிரஹனி அக்கினிமாந்த தோஷ நாடி லக்ஷணம் ….. மந்தாக்கினி உடையவனது நாடி க்ஷீணித்து அன்னத்தைப் போல் நடக்கும். அக்கினி மாந்தியம், கிரஹனி ரோகம் இவைகளில் நாடியானது பாதத்தில் அன்னத்தைப் போலும், அஸ்தத்தில் மண்டூகத்தைப் போலவும் நடக்கும். விளம்பிகா ஆமாதிசார மலபேத கிரஹணி தோஷ நாடி லக்ஷணம் ….. நாடியானது மலபேதத்தில் சாந்தமாயும் கிரஹணிரோகம், அதிசாரம் இவைகளில் தேஜோவிஹீனமாயும், விளம்பிகை என்கிற ரோகத்தில் படகைப்போலவும், அமாதிசாரத்தில் தொங்குகிறதுப்போலும் நாடி நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 30

அன்ன பக்கவ ரத்த விருத்தி ஆமாசீரணகால நாடி லக்ஷணம் ….. அன்னபக்கவா சீரணகாலத்தில் நாடியானது புஷ்டி ரஹிதமாயும் மந்தமாயும் நடக்கும் சரீரத்தில் ரத்தமானது அதிகமாய் இருக்கும் போது நாடியானது கொஞ்சம் உஷ்ணமாய் நடக்கும். ஆமாசீரண யுக்தமான நாடி குருத்துவமுள்ளதாய் நடக்கும். சுக க்ஷ த்து மந்த பலஹீன நாடி லக்ஷணம் ….. சுகமாய் இருப்பவனுடைய நாடி ஸ்திரமாயும், பசியுடன் கூடி இருப்பவனது நாடி சபலமாயும், மந்தாக்கினி உடையவன் பலம் இல்லாதவன் இவர்களின் நாடி அதிமந்மாயும் நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 29

பூதசுர ஆஹிகசுர விஷசுர நாடி லக்ஷணம் …. . பூதாசுரத்தில் நாடி அதிவேகமாய் நடக்கும். மேலும், முறைகாச்சல், விஷசுரம், இவைகளில் நாடி கொஞ்ச நேரம் வேகமாயும் நின்றும் நடக்கும். துவாஹிக திரியாஹி கசாதுர்தாஹிக சுர நாடி …… இரண்டு நாள் மூன்று நாள், நாலு நாளுக்கொரு முறை வரும் சுரங்களுக்கு நாடியானது அதி உஷ்ணமாய் கொளவி நடை நடக்கும். குரோத காம சுர நாடி லக்ஷணம் ….. குரோத சுரத்தில் நாடி விருத்தமாயும், காமசுரத்தில் நாடியானது ஒன்றுக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 28

வாத பித்த, வாத சிலேஷ்ம நாடி லக்ஷணம் வாத பித்த தோஷத்தில் நாடியானது சாஞ்சலியமாயும், பிரகாசமாயும், ஸ்தூலமாயும் கடினமாயும் நடக்கும். சிலேஷ்ம வாத ரோகத்தில் நாடியானது உஷ்ணமாயும் மந்தமாயும் நடக்கும். சிலேஷ்ம தோஷ வாத தோஷ உஷ்ணவாத தோஷ நாடி லக்ஷணம் ….. சிலேஷ்ம தோஷத்திலும் பிரபலமான வாத தோஷத்தில் நாடியானது தீக்ஷணமாயும், உஷ்ணமாயும் நடக்கும். உஷ்ணவாதத்தில் நாடி பிண்டத்தைப் போல் பௌத்தாகாரமாய் நடக்கும். வாத நாடி ….. வாதத்தில் நாடி சூக்ஷ்மமாயும், ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும்.…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 27

இயற்கை நாடி லக்ஷணம் ….. நாடியானது அதிகாலையில் கோமளமாயும், பகலில் உஷ்ணமாயும் சாயங்காலம் வேகமாயும் இரவில் மந்தமாயும் நடக்கும். அதிக தாப சுர நாடி லக்ஷணம் …. அதிக தாபமுடன் கலந்த சுர ரோகிக்கு மிகவும் வியர்வையும் நாடியானது சந்நிபாத நாடியைப்போலும் நடக்கும். சுர நாடி ….. சுரத்தில் நாடியானது உஷ்ணமாயும், வேகமாயும் நடக்கும்.சுரம், வாத ரோகம், சையோக நாடி லக்ஷணம் ….. சுரம், வாத ரோகம் இவைகளில் நாடி குறுக்கியும் நடக்கும். மேலும் ஸ்திரி சம்போகம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 26,

இறைச்சி, பால், மதுபாண்டங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ….. இறைச்சிகளை அருந்தினவனது நாடி ஸ்திரமாயும், பாலைகுடித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், மதுரியமான பண்டங்கள் புசித்தவனது நாடி ஸ்திரமாயும், மந்தமந்தமாயும் நடக்கும். மதுர பதார்த்ததங்கள், உஷ்ண பதார்த்ததங்கள், உலர்ந்த பதார்த்தங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ——- வெல்லம், வாழப்பழம், மாமிசம், உஷ்ணபதார்த்தங்கள், உலர்ந்த பதார்த்ததங்கள், முதலியவைகளை புசித்தவனுடைய நாடி வாத பித்த ரோகநாடி கதியைப் போல் நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 25 

திரவ பதார்த்தம் புசித்தவனது நாடி ….. பசபசப்புள்ள பதார்த்தங்கள் புசித்தவனது நாடி கடினமாயும் கடின பதார்த்தங்களை புசித்தவனது நாடி கோமளமாயும் இரண்டும் கலந்தவனது நாடி இரண்டும் சார்ந்துமாய் நடக்கும். வேறு விதம் ….. புளிப்பாகிலும் அல்லது புளிப்பு மதுரம் இவை இரண்டும் கலந்த பதார்த்தங்களை புசித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், அவல், வறுத்த பதார்த்தங்கள் புசித்தவன் நாடி ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும். காய்கறிகள், கிழங்குகள் திண்பவனுக்கு நாடி லக்ஷணம் ….. பூசணிக்காய், முள்ளங்கி முதலிய கிழங்குகள் இவைகளை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 24

வாத பித்த சிலேஷ்மங்களில் எந்த தோஷத்தை நாடியானது நாடியிருக்குமோ அதன் செய்கையை தான் மற்றவைகளுக்கும்  உண்டாகும். நாடியானது வாத பித்த சிலேஷ்மத்தில் ஏதாவது ஒன்றில் சார்ந்திருக்கும் வாத பிரகோபத்தில் தீவிரம் ஆகும்போது தீவிரமாயும் சாந்தமாகும் போது சாந்தமாயும் நாடி நடக்கும். எண்ணெய், வெல்லம், உளுந்து, பால், தேன் இவைகளை தின்றவனுடைய நாடி ….. எண்ணை குடித்தவனுடைய நாடி வலிவாயும், வெல்லம், உளுந்து இவைகளை தின்றவனுடைய நாடி பெரிய தடியைப் போல் நீளமாயும், பால் குடித்தவனுடைய நாடி ஸ்திமிதமாயும்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 23

பூதாபிஷங்க சுர நாடி ….. பூத பிரதேங்களினால் பயப்பட்டவனுடைய நாடியானது திரிதோஷ நாடியைப் போல் வாதபித்த சிலேஷ்ம நாடிகள் ஒன்றாய் சேர்ந்து ஏற்றத்தாழ்வு அன்றி சமானமாய் நடக்கும். ரோகாஹி தாப மிருத்யு நாடி லக்ஷணம் ….. வியாதி ஒன்றும் அல்லாமல் அகாலமரணம் சம்பவிக்கும்படி ஆனவனுக்கு சந்நிபாத நாடி நடக்கும். வேறு விதம் ….. வியாகூலத்தை அடைந்தவனுக்கும் பனியில் திரிகிறவனுக்கும் நாடியானது தன் இடத்தை விட்டு மேல் நோக்கி இருக்கும். அப்படி இருந்தாலும் அவனுக்கு தோஷம் ஒன்றும் சம்பவிக்காது.…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 22

நாடிகளை மிகவும் நுட்பமான புத்தியுடன் அவைகளின் போக்கை அறிந்து வியாதிகளின் குணபேதங்களை தெரிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாடி ஞானத்தை செவ்வையாய் தேவர்களுக்கும் தெரிந்துக் கொள்வது கஷ்டமென்றால் மானிடர்கள் தெரிந்து சிகிச்சை செய்ய எவ்வளவு கஷ்டமாயிருக்கும்.   ஆகையால் நாடிகளையும் அதன் சப்தங்களையும் மிகவும் சூஷ்மபுத்தியுடன் தெரிந்துக்கெண்டு வியாதியின் குணத்தை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டியது. மருத்துவரின் கடமை ஆகும்.   அபிகாதாதி ரோகங்களின் நாடி லக்ஷணம் பளுவை எடுக்குதல், பிரவாகத்தில் அடித்துக்கொண்டு போகுதல் மூர்ச்சை சம்பவித்தல், பயமுண்டாகுதல்,…

இயற்கை மருத்துவம் — 5

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்  —  அன்னாசி பழம் 22) முடி நரைக்காமல் இருக்க —  கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட்,மல்லிகீரை, தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் —  தூதுவளை 25) முகம் அழகுபெற —  திராட்சை பழம் 26) அஜீரணத்தை போக்கும் — புதினா 27) மஞ்சள் காமாலை விரட்டும் —  கீழாநெல்லி 28) சிறுநீரக கற்களை தூள் தூளாக ஆக்கும் —  வாழைத்தண்டு

இயற்கை மருத்துவம் — 4

16) மார்பு சளி நீங்கும் — சுண்டைக்காய் 17) சளி, ஆஸ்துமாவுக்கு —  ஆடாதொடை 18) ஞாபக சக்தியை கொடுக்கும் —  வல்லாரை கீரை 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் —  பசலைக்கீரை 20) ரத்த சோகையை நீக்கும் —  பீட்ரூட்

இயற்கை மருத்துவம் — 3

11) மூளை வலிமைக்கு ஓர்   —  பப்பாளி பழம் 12) நீரிழிவு நோயை குணமாக்கும் — முள்ளங்கி 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட —  வெந்தயக் கீரை 14) நீரிழிவு நோயை குணமாக்க  —  வில்வம் 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் —  துளசி