மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது.. முடிவுகளை தான் கவனிக்கும்.. சிந்தித்து செயல்படு..!
காரணமின்றி காயங்கள் பல.. காரணமானவர்கள் தேவையா; காயங்கள் தேவையா.. இவற்றை விரும்பி பெற்றோமா? இல்லை விதியென கடந்து போவதா?!
ஆசை..யார் மீது வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால், ஏக்கம்.. நமக்காக வாழும் ஒருவர் மீதுதான் வரும்!
எத்தனை தர்மங்கள் செய்தாலும் பூஜைகள் செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்… உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டும்.
வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது – விவேகானந்தர் நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான் உலகை அறிந்தவன் கோவபட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பபடமாட்டான்
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை புத்தர் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை!!! – காரல் மாக்ஸ் வெற்றி இல்லாமல் வாழ்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை,
நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!
கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!! பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!! பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…
நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..! எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
தடுக்கி விழுந்தால் அ ஆ. சிரிக்கும் பொழுது இ.. ஈ. தீ புண்பட்டால் உ.. ஊ. அதிகாரம் செய்யும் போது.…
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி. துன்பங்களைப் பொறுப்பவனே தவசி. விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான். அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன். கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.
யாருடனும் சண்டையிடாதே எதிர்வினையாற்ற வேண்டாம்.. உங்களைப் புரிந்துகொள்ள விரும்பாத ஒருவருக்கு உங்களை விளக்க முயற்சிக்காதீர்கள்..
உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.. ஏனென்றால்.. நடக்கப்போவது உங்கள் கால்கள் தான்.. அடுத்தவர்களது அல்ல! விருப்பங்களுக்கே விலை அதிகம்.. மகிழ்ச்சிக்கு அல்ல!
உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன்.. ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது.. தோற்றுவிடுகிறேன்!
நாற்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் தைரியம் என்பது.. கையில் இருக்கும் பணத்தை பொருத்தே அமைகிறது!
மன்னிக்கப் பழகிவிட்ட எவரும் பிறரின் குற்றங்களை சுமந்து திரிவதில்லை… அத்தனையும் அடங்கியதே வாழ்வு என்ற பக்குவம் வரும் நேரம் வாழ்வை தொலைத்திருப்போம் என்பதே நிதர்சனம்.
எல்லா வார்த்தைகளுக்கும் மறு வார்த்தை தேவையில்லை எல்லா கேள்விகளுக்கும் விடைகள் தேடாதே.. சிலது மறைவாக இருப்பதே நல்லது!
உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு உங்களைக் காட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.. உங்கள் தூரத்தை வைத்து பின்வாங்கவும்.. ஏனெனில், தூரம் தான் சிறந்த பதில்!
யாரோ ஒருவராக இருந்து முக்கியமானவராக மாறி.. மீண்டும் யாரோவாகி போவது தான்.. இந்த கால உறவுகள்
எந்த அர்த்தமும் தராத வார்த்தையும் இருக்கிறது.. எல்லா அர்த்தங்களையும் தருகின்ற மௌனமும் இருக்கிறது! மகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது.. இரவலாக வாங்குகின்ற எதுவும் மகிழ்ச்சியை தராது!
எப்போது யாரைப் பிரிவோம் என்று சொல்ல முடியாது.. ஆனால்.. யாரையும் பிரியாமலும் இருந்துவிட முடியாது! நாம் விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம் கிடைப்பதில்லை.. வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு விட போவதில்லை..
உலகத்தை யாரால் வெல்ல முடியும் ? சத்தியமும், பொறுமையும் உள்ளவரால். யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ? எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை. செவிடன் யார் ? நல்லதைக் கேட்காதவன். ஊமை யார் ? சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன். நண்பன் யார் ? பாவ வழியில் போகாமல் தடுப்பவன். யாரை விபத்துகள் அணுகாது ? மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்
எது மரணத்துக்கு இணையானது ? அசட்டுத்தனம். விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ? காலமறிந்து செய்யும் உதவி. இறக்கும் வரை உறுத்துவது எது ? ரகசியமாகச் செய்த பாவம். எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ? துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் ! சாது என்பவர் யார் ? ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது.
எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். எதிரி யார் ? சோம்பல்.
எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே. உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா……??? நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும். காத்திருக்கப் பழகினால்…….. வாழப் பழகுவாய். இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்ப காத்திருப்பதை உணர்வாய் எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய் … !!!
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால், உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது. உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது
உணவு தயாராகும் வரை காத்திரு போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு பிறர் கோபம் தணியும் வரை காத்திரு
செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு காய் கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு
சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்… !!! நான் அழைக்கும் வரை காத்திரு’. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு
பெருக்கல்: மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை மனிதன் × கவலை = தற்கொலை மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி மனிதன் × இயலாமை = அவதி மனிதன் × அன்பு = மனிதாபிமானம் மனிதன் × ஆசை = வக்கிரம்
மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி மனிதன் – கவலை = உற்சாகம் மனிதன் – ஆனந்தம் = சோம்பல் மனிதன் – இயலாமை = முயற்சி மனிதன் – அன்பு = குரோதம் மனிதன் – ஆசை = அமைதி
கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்
கேட்டால் தவிர யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள் புத்தகங்களை எரிப்பது பாவம் ! அதைவிடப்பாவம் அதைப் படிக்காமல் இருப்பது!!
இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில் தான்.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும். எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன் சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது
எவ்வளவு சொற்கள் தீர்த்தாலும் எப்படியாவது பிழைத்துக்கொள்ளும்.. கவிதைகளே சாட்சி!
எவ்வளவு உயிர்கள் மாண்டிருக்கும் மீண்டும் இயங்குகிறது பூமி.. மழலையின் புன்னகையே சாட்சி!
எவ்வளவு முறை நிறம் மாறினாலும் மீண்டும் ரசிக்கப்படும்.. வானமே சாட்சி!
எவ்வளவு பேர் வெறுத்தாலும் மீண்டும் நேசிக்கப்படலாம்.. மழையே சாட்சி!
எவ்வளவு இறகுகளை இழந்தாலும் போகுமிடம் தொலையாது.. பறவைகளே சாட்சி!
எவ்வளவு தூரம் பாதையை விட்டு விலகிச் சென்றாலும் தாய்மடி சேரலாம்.. நதிகளே சாட்சி!
பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம் பூசி பலமாக மாற்ற வேண்டாம்.. மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின் அவைகள் தானாகவே பலமாகிவிடும்!
மனித இனத்திடம் உள்ள ஒரு உண்மையான பயனுள்ள ஆயுதம், சிரிப்பு. சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகும்
அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான் கால்கள் இடறிக் கீழே விழுந்து விடுகிறோம்.. கொசு மாதிரி சாப்பாட்டுக் அலையக் கூடாது. சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வரவைக்கனும்..
மௌனமென்பது சில நேரங்களில் பதிலாக இல்லாமல் கேள்வியாக உள்ளது.. புரிதலென்பது சில நேரங்களில் எதையுமே புரிந்து கொள்ள வேண்டாம் என்று புரிந்து கொள்வது..
பயணமென்பது சில நேரங்களில் தேங்கி நின்று ஓய்வெடுப்பது.. விடைபெறுதல் என்பது சில நேரங்களில் அருகிலேயே கொஞ்சம் தூரமாக வாழ்வது..
காதலென்பது சில நேரங்களில் சிறகுகளை கடன் தருவது.. நட்பென்பது சில நேரங்களில் சொல்லாமலே அவமானங்களை புரிந்து கொள்வது..
அன்பென்பது சில நேரங்களில் விலகி நின்று ஆதரவு தருவது.. ஆறுதலென்பது சில நேரங்களில் அவர்களாக மீளட்டும் என்று ஓர் இடைவெளி தருவது..
அவர்களே வருவார்கள் அவர்களே பிடிக்குமென்பார்கள்.. அவர்களே சலித்துவிடுவார்கள்; அவர்களே காணாமல் போய்விடுவார்கள்! அவர்கள் அவர்களாக இருக்கட்டும்; நீங்கள் அவர்களாக இருக்காதீர்கள்.. அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஏராளம் பூமியில்!
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து வருகிறது.. அந்த அனுபவம் மோசமான முடிவுகளிலிருந்து வருகிறது!
எப்படிப் பழகவேண்டும் என்பதை விட.. எந்த அளவுக்குப் பழகவேண்டும் என்பது தான்.. உறவுகளில் முக்கியமானது!
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதைவிட நம் காதுகளை மூடிக்கொள்வது சிறந்தது……
பேரின்பம் வேண்டாம்… சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க………
சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம் சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்
விலகியது விலகியதாகவே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.. மீண்டும் வந்தால் யார் விரிசல்கள் யாருடையது என்ற போர்கள் எழலாம்! பேசாமல் போன சொற்கள் பேசாமலே தீர்ந்து போகட்டும்.. காலம் தாழ்ந்து வந்த வார்த்தைகள் வெறும் நீராவிகள் நீண்ட நேரம் நிற்காது! சொல்லாமல் கொள்ளாமல் போனவர்கள் உண்மையில் தொலையவில்லை ஒளிந்து கொண்டனர்.. தேட வேண்டாம் அவர்களை வேண்டுமெனில் வந்துவிடுவார்கள்!
புன்னகை பிரச்சனைகள் “வருவதை தள்ளி போடும்..!! மெளனம் “பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா “பிரச்சனைகளுக்கும் இந்த வாய் காரணம்..!!!
ட்ராஃபிக் போலீஸ் நமக்குக் கற்றுத் தரும் பாடம், நாலு பேருக்கு நல்வழி காட்டுறவன் நடுத்தெருவில் தான் நிற்பான்.
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிகும் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..
உனக்காக… தன் மீதான நியாயமான வாதத்தைக் கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..
அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை…. பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
முன் பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பதை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..
இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம். .
நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள் தான்..
தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம் கடமையில் வழுவாத நேரம் அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்
பொறாமைப்படும் நேரம் புறம் கூறும் நேரம் கோள்சொல்லும் நேரம் சதி செய்யும் நேரம்
கவலைப்படும் நேரம் பயப்படும் நேரம் கலங்கும் நேரம் முயலாத நேரம்
அகங்காரம் கொள்ளும் நேரம் பாசம் கண்களை மறைக்கும் நேரம் ஆசைகள் எல்லையை மீறும் நேரம் கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம் தேக கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
நல்லதை நினைக்கும் போது நல்லதை பார்க்கும் போது நல்லதை கேட்கும் போது நல்லதை பேசும் போது நல்லதை செய்யும் போது
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!
அலைகளில் கால்களை நனைக்கும் சுகம், கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது கிடைப்பதில்லை…
உண்மையான அன்பு உள்ளவர்கள் விலகி செல்ல விரும்புவதில்லை விட்டு கொடுத்தே செல்ல விரும்புவார்கள்
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை. வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும் கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்
ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்…. சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது … 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா
ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?” அதற்கு சாவி சொன்னது. “நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.
நாம் சாப்பிடும் போது தலைக்குனிந்து சாப்பிடுகிறோம்.. காரணம் : இந்த உணவைத் தந்த பூமிக்கு நன்றி தெரிவிக்க. தண்ணீர் குடிக்கும் போது மேல் நோக்கி தண்ணீர் குடிக்கின்றோம்.. காரணம் : தண்ணீரை தந்த ஆகாயத்திற்க்கு நன்றி தெரிவிக்க. ஆனால் சரக்குஅடிக்கும் போது மட்டும் கண்களை மூடிக்கொள்கிறோமே ஏன்??? காரணம் : ஒருநாள் அதனால்தான் கண்கள் இரண்டும் மூட போகின்றது என்பதை தெரிவிக்க
இனி எதற்கும் ஏன்”என கேள்வி கேக்காதே என்று சொன்னால் …. அதற்கும் … ஏன் என்று தான் கேட்பாள் இந்த பெண் .
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் … மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை
உங்களை மற்றவர்களுடன் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்பது, உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.
இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தையம் அல்ல ஒடாதே நில் யோசி பார் ரசி சுவை உணர் பேசு பழகு விரும்பு
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …, இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே … இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்
கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன. நாங்கள் சொல்லட்டுமா? எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன். மின் விசிறி சொன்னது “Be cool,,, கூரை சொன்னது “Aim high “ ஜன்னல் சொன்னது “See the world “ கடிகாரம் சொன்னது “Every minute is precious “ கண்ணாடி சொன்னது “reflect before you act” காலண்டர் சொன்னது “be up to…
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை நாளும் நமக்கு அது புரிவதில்லை நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான் நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வ லித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்… ஆனால் எத்தனை வயது ஆனாலும், எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.
ஒ௫ ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இ௫ந்தது அந்த வழியாக வந்த ஒ௫ சிட்டு கு௫வி மரத்திடம் கேட்டது… மழை காலம் தொடங்க இ௫ப்பதால் நானும் ௭ன் குஞ்சுகளும் வசிக்க கூடு ௧ட்ட அனுமதிக்க முடியுமா ௭ன்றது முதலில் இ௫ந்த மரம் முடியாது என்றது அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது கு௫வி கூடு கட்டி சந்தோசமா௧ வாழ்ந்து கொண்டு இ௫ந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது…
பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட
உங்களின் தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடுகள்.
மனதில் இறங்காமல் வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும் தத்துவங்களும் நூலகங்களில் படிக்காமல் விடப்படும் புத்தகங்களும் ஒன்றுதான்.
சுத்த அறிவு இராமனாகவும் அறிவின் சத்தி சீதையாகவும் பத்து திசைகளிலும் அலையக்கூடிய மனமே இராவணனாகவும் மாரீசன் என்பது வஞ்சகமாகிய உலக வாழ்வாகவும் அறிவு மாரீசன் பின் செல்ல மனமாகிய இராவணன் அறிவின் சத்தியாகிய சீதையை கவர்ந்து சோகம் என்னுமிடத்தில் பிரணவத்தில் சிறை வைத்து விடுகின்றது அறிவானது ” வாசி” யாகிய அனுமன் துணை கொண்டு பிரணவத்தை அடைந்து கோதண்டமாகிய பிரணவத்தை வளைத்து அதிலிருந்து சிவவொளியை வீசச் செய்து மனதை அழித்து அறிவின் சத்தியை மீட்டது என்பதையே இராமாயணமாகச்…
மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்… செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை
எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*
இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
தொலைத்ததை தேடி கிடைத்ததை அடைந்து சில நேரம் விரும்பியும் சில நேரம் விருப்பமின்றியும் தொடருகிறது பலரது வாழ்க்கை
வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…
கொடுப்பது சிறிது என்று தயங்காதே. வாங்குபவர்க்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே. இழப்பவர்க்கு அது பெரிது.
நல்லவராக இருப்பது சிறந்தது தான்.. ஆனால், நல்லது கெட்டது தெரியாத நல்லவராக இருப்பது ஆபத்தானது
ஏதாவது வரம் வேண்டும் என்று. கேட்டு கொண்டே இருக்கிறோம் இறைவனிடம் அவர் தந்த மனிதபிறவியே வரம் தான் என்று உணராமல்…!
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக் கொள்.. அதற்காகவே உன்னை தயார்படுத்து.. அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!
ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது செய்யவும். ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள் அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..
“நீ அந்த வீட்டுல 2 லட்ச ரூபாயும், 50 பவுன் நகையும் திருடுனது உறுதியாயிருச்சு… நீ உண்மைய ஒத்துக்கறியா?” “ஐயா ஒத்துக்கறேன்யா!” “அப்போ உனக்கான தண்டனைய அறிவிச்சுடலாமா?” “ஐயா, அதுக்கு முன்னால நம்ம மத்திய அரசாங்கத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்கய்யா!” “உனக்கு தண்டனை கொடுக்க மத்திய அரசுக்கிட்ட நான் ஏன் கேக்கணும்?” “ஐயா, கிரிப்டோகரன்ஸிய மோசடின்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்போ அந்த வருமானத்துக்கு 30% ஜி.எஸ்.டி. கட்டுனா போதும்னு சொல்லிட்டாங்க… ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 மாதிரி…
இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை ஒரு பயணம்.. நல்லதோ கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்! இன்பம் வந்தால் ரசித்துக்கொண்டே செல்லுங்கள்.. துன்பம் வந்தால் சகித்துக்கொண்டே செல்லுங்கள்.. தேங்கி விடாதீர்கள்! உழைத்து ஓய்ந்தாலும் பலருக்கும் வாழ்வில் விடியல் ஏற்படுவதில்லை.. கனவுச் சுமைகளின் பாரம் குறைவதும் இல்லை..!
வலிகளுக்கு இணையத்தில் மருந்து தேடும் பலருக்கு புரிவதில்லை.. பக்க விளைவுகள் (Side Effects) அதிகம் என்று!
இயற்கை இயற்கை ஒவ்வொரு பறவைக்கும் உணவளிக்கிறது.. ஆனால்.. அதை அதன் கூட்டில் கொண்டுபோய் வைப்பதில்லை!
முன்பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..
சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில் உள்ளது! நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்.. நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!
வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!
அறிவதைவிட புரிதல் ஆழமானது நம்மை அறிந்தவர்கள் இருக்கலாம் ஆனால் புரிந்தவர்கள் ?
.எப்போதும் கூடவே இருந்தால்.. அது பொக்கிஷம் அல்ல; பொருளாகிவிடும்.. காதலாக இருந்தாலும்! இது நிஜமா ? அனுபவத்தை சொல்லுங்கள்
புத்தகங்கள் யாரோ நமக்கு வேண்டி செய்த தவம் அல்லவா
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது
கத்தி இல்லாமல் குத்தி விட்டு ரத்தம் இல்லாமல் நெஞ்சை கிழிக்கும் ஒரே ஆயுதம் நாக்கு
ஒரு வட்டம் போட்டு வாழ்வது தப்பில்லை ஆனால் அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று பிடிவாதம் பிடிப்பதுதான் தப்பு