ஓளவையார் முருகனுக்கு கூறிய பதில்களில் பெரியது எது?என்பதற்கு பதில்

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்; கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்; இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!