உரையாடலின் ஒரு பகுதி 35

மனிதன் தான் அறிந்தவற்றை அனுபவித்து சிரிப்பதோ, அழுவதோ, சுகப்படுவதோ, துக்கப்படுவதோ ஆசை, கோபம், சந்தேகம் குழப்பம் போன்றவற்றை மனிதன் அனுபவிப்பது மனதின் மூலமே அன்பு, பாசம், பரிவு, நட்பு, தியாகம் பெருமை பொறுமை போன்றவற்றின் நிலைகளமும் இந்த மனமே.

உரையாடலின் ஒரு பகுதி 34

மனம் என்ற ஒன்றை கொண்டதாலேயே  அவன் மனிதன் என்ற பெயர் பெற்றான் மனம், அறிவு ஆகும், மனம் புத்தியாகும் எது எல்லாம் எப்படியெல்லாம் ஆனாலும் அதனடியில் மனம் இருக்கும், அதற்க்கும் அடியில் பிராணன் இருக்கும் இதை புரிந்து கொண்டால் நமக்கு கொஞ்சம் வசதியாய் இருக்கும் நம் செயல்கள் சிந்தனைகளை அறிய  –

உரையாடலின் ஒரு பகுதி 33

ஐம் பூதமென்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். ஐம் பொறிகள் என்பது கண், காது, மூக்க, நாக்கு, மனம். ஐம் புலன்கள் என்பது பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், சிந்தித்தல் மேலே சொல்லிய விஷயங்களில் மனிதன் ஈடுபட ஆதாரமாய் இருப்பது பிராணன், இந்த பிராணன் இல்லையேல் அவன் சவமாகி விடுவான்.  சவமானவனிடம் ஆனந்தத்தை அனுபவிக்கும் ஆற்றல் இல்லை எத்தனை பொறிகள் – புலன்கள் இருந்தாலும் அனுபவிக்க பிராணன் மட்டுமே முக்கியம் அதுவே ஜீவ சக்தி, அதுவே…

உரையாடலின் ஒரு பகுதி 32

மனிதனிடம் இருக்கும் கருவிகளில் மனம் எனும் கருவியே மிக பலமானதும் எல்லாவற்றிற்க்கும் ஆதாரமாயும் உள்ளது. ஆனால் இந்த மனம் எனும் கருவி இயங்க பிராணன் எனும் சக்தியே அடிப்படையானது. அதாவது, இப்படி வைத்துக் கொள்ளலாம் மனிதன் என்பவன் உடல், மனம், பிராணன் என்ற முக்கிய மூன்று விஷயத்தால் ஆனவன் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இதில், உடல் – 5புலன்கள், 5 பொறிகள், 72 ஆயிரம் நாடி நரம்புகள் என்று அமைந்தாலும் இவைகள் ஐம் பூதத்தின் அடிப்படையிலேயே…

உரையாடலின் ஒரு பகுதி 31 மனிதனின் தேடல்கள்

நித்திய ஆனந்தத்திற்கான வழி முறைகளையும், சூத்திரங்களையும் கொண்டவையே வேதோ உபநிஷத்துகள் அதில் மனிதனைப் பற்றி அறிய அவன் யார் என்ற அறிய ஆசை கொண்டு கேள்வி எழுப்பி விடை தேட தொடங்கினார்கள் உண்மையில் மனிதன் என்பவன் யார் அவனிடம் என்ன உள்ளது அவனிடம் உள்ளதால் அவனுக்கும் இயற்கைக்கும் என்ன நன்மை, அல்லது தீமை என்று தேடி, தேடி முடிவில் கண்டு கொண்டார்கள் அது பற்றி கொஞ்சம் விரிவாகவும், விளக்கமாகவும் அறிய நாம் ஆசைப்பட்டு முயற்சிப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி 30 மனிதனின் தேடல்கள்

வாழ்வை பற்றி நம் முன்னோர்களின் பார்வை மனிதன் அவன் இருப்பில் செய்யப்படும் செயல்கள் வாழ்க்கை என பெயர் பெறுகிறது. வாழ்க்கையில் மனிதனின் பங்கை அதாவது எப்படி வாழ்ந்தால் ஆனந்தமாக இருக்கலாம் அல்லது ஆனந்தத்தை அடையலாம் என்பதே முன்னோர்களின் தேடல்கள் ஆக இருந்தது.  அந்த தேடுதலின் விளைவாக உண்டான விஷயங்களை உள்ளடக்கியதே நமது வேதம், உபநிஷத புராண – இதிகாசங்கள் போன்றவை,

எந்த ஒருவரையும் 2

பாராட்டுக்கும், விமர்சனத்திற்கும்  நிலையான மதிப்பு என்று எதுவும் இல்லை.  இது புரிந்து கொண்டாலே கடவுளைப் பற்றியும், மதங்களை பற்றியும் இன்னும் இது போல் உள்ள எத்தனையோ விமர்சனங்கள் பாராட்டுதல்கள் பற்றியும் நாம் காதிலும், மனதிலும் இடாமல் சகஜமாய் நம் வாழ்க்கையை நாம் சந்தோஷத்தோடு வாழ்ந்து விடலாம்.  ஆனால் இது நிச்சயமாய் தெரிய வேண்டும். (முக்கியமாக அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு, அதனை சார்ந்து இருக்கும் , மக்களுக்கு)

எந்த ஒருவரையும் 1

எந்த ஒருவரையும் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவது, விமர்சிப்பது என்பது அவரவரின் மனநிலை பொறுத்த விஷயம்.  காரணம் பாராட்டபடும் நபரே சில பல நேரங்களில் பாராட்டுக்கு தகுதியில்லாதவர் ஆகிறார். அதனாலேயே நாம் பாராட்டுக்கோ விமர்சனத்திற்கோ, அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.  

உள்ளே ஒன்று வைத்து

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு, ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம் தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது அழிந்து போயிருக்கலாம் பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.

 தனிப்பட்ட கொள்கைகள்

எவனொருவனுக்கு தீவிரமான தனிப்பட்ட கொள்கைகள் உள்ளதோ அவன் எப்போதும் யாருக்காவது எதிரியாகவே இருப்பான். உண்மையில் தீவிரமான கொள்கைகள் அது எந்த கொள்கைகளாக இருந்தாலும் சரி மனிதனை பிரித்து கூறு போட்டுவிடுகின்றன. கூடி இருக்கவும் கூட்டத்தை பிரிக்கவும் பிடிவாதமான சில கொள்கைகளே காரணமாய் இருக்கின்றன.  எல்லோராலும் வான் பிறையின் வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன என்ற பட்டினத்தாரின் மன நிலையில் இருக்க முடிவதில்லை. இலக்கில்லாத கொள்கையில்லாத பயணம் சுகம் ஆனால் அது எவருக்கும் எப்போதும் வாய்ப்பது இல்லை. அதனால்…

விளையாட்டு என்றால் என்ன 3

செயலுக்கு பலன் என்பதை மனதில் ஊன்றி நிலைக்க விட்ட பின் பலனை எதிர்பாராமல் செயலை செய் எனும் வாக்கியத்தை உணருவது எங்ஙனம் அதோடு அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் என்ற வாக்கியத்தின் பொருளை உணர்வது எப்படி செயலில் இருக்கும் கவனம் பலனில் சென்று விட செயலின் முழுமையை எப்படி அனுபவிப்பது? எப்படி ஆனந்திப்பது?

விளையாட்டு என்றால் என்ன 2

எப்போது விளையாட்டில் இலக்கு தீர்மானிக்கப்பட்டதோ அப்போது அந்த விளையாட்டு சுமையாகிவிடும் அதாவது விளையாட்டு வினையாகும் இடம் அது நம்மில் எத்தனை பேர் விளையாட்டை விளையாட்டாய் பார்க்கும் பக்குவம் பெற்றுள்ளோம்.  பிறந்து மூன்று, நான்கு  வயதிற்குள்ளேயே இலக்கு நோக்கம் என்று எல்லா செயல்களையும் வடிவமைத்து நம் இயல்பை தொலைத்துவிட்டோமே

விளையாட்டு என்றால் என்ன 1

எந்த நோக்கமும் இல்லாமல் எந்த பயனையும் எதிர்பாராமல் உடலை வருத்திக் கொள்வது அப்படி வருத்தி கொள்வதின் மூலம் மகிழ்ச்சியில் திளைப்பது இலக்கில்லாமல் ஓடி, ஓடி மூச்சு இளைக்க, இளைக்க நிற்கும் போது உண்டாகும் சுகம், சந்தோஷம் நமது சிறு பிராயத்திலேயே முடிந்து விடுகிறது.  மூச்சு இளைக்கிறதே என்று விளையாடமல் இருக்க முடியுமா? எந்த குழந்தைகள் தான் அப்படி இருக்கிறது விளையாடி, விளையாடி இளைக்கிற மூச்சு ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் விளையாடாமலே சும்மா இருக்கும் போது இளைத்தால் அது வியாதி.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 19

அந்த குழந்தையிடம் தயை, இரக்கம், பாசம், நேசம் போன்றவை இருக்குமா?  இவையெல்லாம் அன்பின் ஆணி வேர்கள் அல்லவா இப்போதைய சமுதாய ஆட்சியாளர்கள் இதை விரும்புவது இல்லை முன்னதை மட்டுமே விரும்புவதால் சமுதாயம் எப்போதும் மாறப்போவதில்லை.   

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 18

மூன்று வயது வரை அன்பாய் வளர்த்துவிட்டு அவர்களை தூக்கி யாருக்கோ உழைக்க தேவையான கருவியாக மாற்றும் பணியாளர்களிடம்(அதாவது பள்ளி கூடங்களில் ) தூக்கி போட்டு விடுகிறீர்கள் இதைத்தான் நீங்கள் அன்பு என்கிறீர்கள். வேகமும், போட்டியும் இருந்தால் அங்கு வெறுப்பும் விரோதமும், வன்முறையும் இருக்கும். இவையெல்லாம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா? இந்த சூழலில் பயிற்றுவிக்கப் பட்டு, வளர்ந்த குழந்தை அன்போடு இருக்குமா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 17

உயர்திரு. J.K. அன்பைப் பற்றி பேசும் போது இப்படி ஒரு வினாவை நம் முன் வைக்கிறார்.  அதாவது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தினால் செலுத்தியிருந்தால் அவர்களை போருக்கு அனுப்புவீர்களா இது மட்டுமல்ல அவர் கேட்பது தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுக்கொண்டு பொருளாதாரத்திற்காக ஒரு பணியில் அமரவும் ஒரு சில பரிட்சைகளில் தேறவும் மாத்திரம் கற்பித்து விட்டு இந்த அருமையான வாழ்க்கையின் மீதி பகுதிகளை கவனிக்காமல் விட்டு விடும் கல்வியை அவர்களுக்கு தருவீர்களா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 16

அது உங்களுக்கு தரும் இன்பத்தினால் அதனுடன் தோழமை உணர்வு ஏற்படுகின்றது அந்த தோழமை உணர்வில் சிறிது மாற்றம் ஏற்படும் போது கூட உங்களால் தாங்க முடிவதில்லை உடனே அந்த இடத்தில் கோபம், வெறுப்பு வன்மம், பொறாமை போன்றவை வந்து விடுகிறது. அப்போது நாம் நினைத்துக் கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது. அன்பிற்கு இத்தனை முகங்களா என்றுதான்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 15

அன்பு செலுத்துவது என்றால் என்னவென்று நாம் அறிந்துள்ளோமா நமது அகாரதியின் படி அன்பு செலுத்துதல் என்பது அன்பாயிருத்தல் என்பது இன்பம், விருப்பு, அக்கறை இதன் கலவையையே அன்பு என்று புரிந்து கொண்டிருக்கிறோம்.   உண்மைநிலை என்வென்றால் ஒவ்வொருவரும் தன்னுள் பிளவு பட்ட தனிமையில் இருப்பதால், தனிமை தரும் வலியில், வேதனையில், துக்கத்தில், துயரத்தில், இருந்து தப்பிக்க நாம் ஒன்றை சார்ந்து நிற்கின்றோம். அப்படி சார்ந்து நிற்கும் போது அது தனி‍மையை விரட்டி விடுகிறது அதனால் நீங்கள் இன்பம் காணுகிறீர்கள்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 14

நம் கடவுளிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் கடவுளை வெறுப்போம் நம் நாட்டிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் நாட்டை வெறுப்போம் அது மட்டுமல்ல உச்சபட்ச அன்பின் வெளிப்பாடே காமத்தின் தலைவாசல் சரி இது இதோடு நிற்கட்டும்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 13

இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது, விசித்திரமானது உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை. நாம் அன்பை புரிந்து கொண்டதில் தான் இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 12

உண்மையில் அன்பு என்றால் என்ன கடவுள் மீது அன்பு, பெற்றோர் மீது அன்பு, உறவினர், நண்பர்கள் மீது அன்பு, கணவன், மனைவி, காதலன், காதலி , நாடு, தேசம் இவற்றின் மீதெல்லாம் அன்பு என்று பேசுவோம். பேசிக்கொண்டிருப்போம் ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக அந்த அன்போடு கூட வெறுப்பும் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்களா அப்படி கண்டுபிடித்திருந்தீர்களானால் நீங்கள் உங்களை அறிய, உணர தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 11

எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா கொஞ்சம் உங்களை உற்றுப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்.  நாம் நிறைய அன்பைப் பற்றி பேசுகிறோம். போதிக்கிறோம் அது நல்லது என்றும் இறைவனுக்கு பிடித்தது என்றெல்லாம் நாம் போசுகிறோம்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 10

நிலை இப்படி இருக்க சமுதாய மாறுதல், சமுதாய புரட்சி வேண்டும் என்று கேட்பதிலோ, கூக்குரல் இடுவதிலோ என்ன பயன் விளையகூடும் அதனால் தனிமனித மாறுதல் நிலையே சமுதாய மாறுதல் ஆகும். உறவை உறவாக புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம் மற்ற எந்த வழியும் இல்லை.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 9

சில பல தேவைகள் ஆசைகளுக்காக உறவு என்ற ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு புரியும்.  எந்தவித உறவும் இல்லாமல் உறவோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது தான் மனித குலத்தின் அறியாமை அல்லது மனித குலத்தின் சாபம் எதார்த்தமான அன்பும் இய்லபான நேசமும் இல்லாத நிலைகளில் உறவுகளை ஒவ்வொருவரும் கையாண்டு கொண்டிருக்கிறோம் இது தனிமனிதனில் தொடங்கி சமுதாயம் வரை பரவிவிட்டது

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 8

எப்படியென்றால் அவரவர்களுக்கு உண்டான குறிக்கோள்கள் பயங்கள், ஆசைகள் என்று தனிமைப்பட்டே வாழ்கின்றனர். அந்த தனிமையே ஒவ்வொருவருக்கும் பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது.  ஒரே வீட்டில் 10 பேர்  உறவின் அடிப்படையில் இணைந்து இருந்தாலும் ஒவ்வொருவரும் தனி தனியே தான் வாழ்கின்றனர்.  இதில் உள்ள அர்த்தம் புரியும் போது நமக்கே நம் மேல் வெறுப்பு வரும்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 7

நாம் இங்கு முக்கியமாய் கவனித்து அறிந்து கொள்ளவேண்டியது. ஒவ்வொருவரும் குடும்பங்களாக அதாவது தாய், தந்தை, குழந்தைகள் அண்ணன், தம்பி, கணவன், மனைவி, காதலன், காதலி என்று சார்ந்து இருந்து நாங்கள் ஒன்று என்று சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 6

 சார்ந்திருத்தலால் எதைப்பற்றியும் சுயமாக பார்க்கும் தன்மையிழந்து விடுகிறது. அதன் மூலம் ஒரு சார்பாகவே சிந்திக்க தோன்றுகிறது அதனால் உண்மைநிலையை உணர முடிவதில்லை. இதுவே வாழ்வின் எல்லா சோகங்களுக்கும், திருப்தியின்மைக்கும், அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 5

ஒருவரை சார்ந்திருக்கும் போது அது உறவுகளால் பலப்படுத்தப்படுகிறது.  அங்கு உண்மையில் நிகழ்வது என்ன என்று கவனித்தால் தெரியும் விஷயம் இதுதான் அதாவது சார்ந்திருத்தல் பாதுகாப்பு உணர்வை தருவது போல் தோன்றினாலும் அதன் அடியில் பயமே உள்ளது பயம் எப்போதும் நன்மையை செய்யாது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 4

 தலையீடு அல்லது பங்களிப்பு என்பது உறவுகளினால் உண்டாகும், கோபம், வெறுப்பு, பயம், ஆசை, வேதனை, வருத்தம் போன்றவைகளே நாம் எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கின்றோம். தனியே நம்மால் இருக்க முடியாது. அதனால் நம்மை பொறுத்தவரை உறவு என்பது இன்றியமையாதது. ஆனால் அது ஒரு விதத்தில் அர்த்தமில்லாதது.  காரணம் நம் மனம் துவள்வதும், கலங்குவதும், உறவுகளினாலேயே அதனாலேயே நம்முடைய வாழ்நாளில் சோகமான பகுதி என்பது அதிக அளவு ஆக்கிரமித்து கொண்டுள்ளது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 3

இந்த சோகங்களில் இருந்து விடுபட மனிதர்கள் ஒவ்வொரு வரும் தனது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டும் அப்படி பார்க்கும் போது வாழ்க்கை என்றால் என்ன என்ற வினாவையும் அதனுடன் நாம் வாழும் தினசரி வாழ்க்கை, பயம், கோபம், இன்பம், இரக்கம், அன்பு மகிழ்ச்சி போன்ற விஷயங்களையும் கவனித்து சிந்திக்க வேண்டும். நாம் சற்று கவனித்தோமானால் நம்முடைய  தினசரி வாழ்க்கையில் உறவுகளின் பங்களிப்பு, அல்லது தலையீடு அதிகமாய் இருப்பதை காணலாம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 2

இதனுடைய அடி வேரை கண்டு தெளிய வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு ஏனோ தோன்றுவது இல்லை எல்லாவற்றிலும் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்ற நினைவில், நிலையில், மனிதன் ஏனோ தன் வாழ்க்கையை வாழும் நியதியை அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை எத்தனையோ வெற்றிகளை, வளர்ச்சிகளை உருவாக்கி கொண்டோம் என்ற ஆணவத்தின் பிடியில் சிக்கியுள்ள மனித குலம், பயம், ஆசை, இன்பம் போன்ற நிலைகளை புரிந்து கொள்ளாமல் அதனுடனேயே தன்னுடைய வாழ்நாட்களை கழிப்பது சோகத்திலும் சோகம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 1

மனிதன் இன்றைய கால கட்டத்தில் அவனுடைய வாழ்வில் எத்தனையோ விதமான, விநோதமான கஷ்டங்கள், போராட்டங்கள், சோகங்கள், குழப்பங்கள், இன்பங்கள், வெற்றிகள், தீர்வுகள், நியதிகள் என்ற பல பொறிகளில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை நாம் பார்க்கின்றோம் இது ஏன்? எதனால்? இப்படி என்று சிந்தித்து ஆராய மனமில்லா மனநிலையில் வாழ்ந்து பழகிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்

ஜெயகாந்தன் பார்வையில் கல்வி,2

பாரதியின் வாக்கான, பள்ளிதலமனதைத்தும் கோயில் செய்வோம் என்பதன் பொருளே இதுதான், கல்வி அறிவின் வாயிலாக ஞானத்தை அடைய வேண்டும் என்பதே நியாயம் என்பது முத்திரை இடப்பட்ட ஒரே மாதிரியான அளவு கோலல்ல. அது மனிதருக்கு மனிதர் காலத்திற்கு காலம் விஷயங்களுக்கு விஷயம் மாறுபடுகிறது.  இதை புரியாமல் ஒரே முத்திரை கொண்ட அளவு கோலை கொண்டு அளக்கும் போது நியாயமே சில சமயங்களில் அநியாயமாகிவிடுகிறது. அப்போது ஊன்றி கவனித்தால், அநியாயம், நியாயமாக உலா வருவதை காணலாம்.

ஜெயகாந்தன் பார்வையில் கல்வி, 1

கல்வியின் இலட்சியம், ஞானம் ஆகும் அதற்கு அறிவு உபகரணமாகும் நமது கல்வி கூடங்கள் வெறும் அறிவு அபிவிருத்திக் கூடங்கள் ஆகிவிட்டன ஞானத்திற்கும், அவற்றிக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது.  இவற்றிற்கு காரணம் நாம் கொண்டுள்ள அந்நிய மோகம் அதனால் நிகழ்ந்த பயன் கல்வி கூடங்கள் மனிதர்களை உருவாக்காமல் எழுத்தறிவு பெற்ற மந்தைகளை உருவாக்குகின்றன.

ஒரு முக்கியமான விஷயத்தை 11

 எவனொருவன் எப்போதும் எல்லா விஷயங்களிலும் தனக்குள்ளாகவே எதிரும், புதிருமாக நின்று விவாதித்து பழகியிருக்கின்றானோ அவன் எந்த நியாயமான கருத்துக்கும், நியாயமான உணர்வுக்கும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தோள் கொடுப்பான் அந்த உரம் அவனுக்கு அவனுள் நடக்கும் விவாதமே தருகிறது. அது விவேகமாக அவனில் வெளிப்படும்.  இதை கல்வி தராது தர்மத்திலும், சத்தியத்திலும் உள்ள தீவிர நம்பிக்கையே தரும்.

ஒரு முக்கியமான விஷயத்தை 10

நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி ஒரு மனிதனை மயங்க செய்து அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமை தருவதே போதை அது கடவுள் பக்தியானாலும் சரி, கள்ளின் போதையானாலும் சரி இரண்டும் தவறே. கடவுள் பக்தியையும் கள்ளையும் ஒப்பிடலாமோ என்ற வினா வரலாம் அதற்கு பதில் போதை எது தந்தாலும் தவறுதான் என்பதே பதில்.

ஒரு முக்கியமான விஷயத்தை 9

இறைவனின் திருவிளையாடல்களை என்னவென்று சொல்லுவது அதை சாதாரண மதிகொண்டு அறிய முடியுமா இல்லை அளக்கத்தான் முடியுமா?  கடவுள் மனிதனாக அவதாரமாகலாம் என்றால் மனிதன் கடவுளாக முடியாதா என்ன? சரியாக அல்லது ஒரு மாதிரி சிந்தித்து பார்த்தால் அந்த காலத்தில் அரசர்கள் தெய்வத்திற்கு சமம், அரசன் தெய்வமே எனும் கொள்கை இருந்தது இப்போது அதிபர்கள், முதல் பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள் வரை உலகில் உள்ள மனிதன் கடவுளாய் ஆனவன் தான் என்றே தோன்றுகிறது.

ஒரு முக்கியமான விஷயத்தை 8

நம்முடைய மக்களிடம் உள்ள ஒரு விஷயம் அதாவது ஆஸ்திகர்களிடம் அதிகமாய் உள்ளது என்னவென்றால் தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை  அலங்கார, ஆடம்பரத்தோடு காட்டி பகிரங்கப்படுத்திக் கொள்ளும் பக்த சிகாமணிகளுக்கு அடி பணிந்து, அடிபணிந்து அடிமையாய் இருக்க எத்தனை மக்கள் நினைத்தாலே வியப்பாயும், ஆச்சர்யமாயும் இருக்கிறது.  பக்தி இவர்களுக்கு தெளிவை தருவதற்கு பதில் மயக்கத்தை அல்லவா தந்திருக்கிறது. அதனால் தானே இறைவனை அறிய முடியாத அடைய முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு முக்கியமான விஷயத்தை 7

 இந்த மனம் தான் உள்ளதை உள்ளபடி எற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தரும் அந்த பக்குவ நிலையே ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டிய சொத்து.  அந்த சொத்தை அடையவே அவனுடைய கல்வி அவனுக்கு பயன்பட வேண்டும். அந்த பக்குவத்தை தர முடியாத கல்வியினால் பயன் இல்லை.

ஒரு முக்கியமான விஷயத்தை 6

அமைதி அடைந்த மனம் கோபம் கொள்ளாது கோபமில்லாத மனம், சாந்தமாய் இருக்கும் சாந்தம் கொண்ட மனம் திருப்தி உடையதாய் இருக்கும் எதிலும் திருப்தி அடைந்த மனம் தான் புரிந்து கொண்டதை பிறர் புரிந்து கொள்ளாவில்லையென்றாலும் கோபப்படாது.

ஒரு முக்கியமான விஷயத்தை 5

ஆதிக்கத்திற்கு காரணம் உரிமை அந்த உரிமைக்கு காரணம் நம்முடையது என்ற ஆழமான எண்ணத்தினால் உண்டானது.  நம்முடையது அல்ல எதுவும் இந்த உலகில் என்கிற எண்ணம் வந்துவிட்டாலே மனம் அமைதி அடைந்து விடும்

ஒரு முக்கியமான விஷயத்தை 4

புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல் என்பது பொருள்களைப் பற்றிய விஷயங்கள் மட்டுமல்ல அதையும் தாண்டி உள்ள மனித மனதின் தன்மைகளை, எண்ணங்களை புரிந்து கொள்ளுதலே உண்மையில் புரிந்து கொள்ளுதல் ஆகும் அது சாத்தியப்பட்டுவிட்டால் நாம் பிறரிடம் செலுத்தும் ஆதிக்கம் அற்று போய்விடும்

ஒரு முக்கியமான விஷயத்தை 3

கோபம் நிறைந்த இடம் ஒரு காலத்தில் வன்முறையாய் ஏதாவது ஷணத்தில் மாறும் அது மனிதனின் சுகத்தை, அமைதியை, சந்தோஷத்தை, திருப்தியை அழித்து விடும் அப்படியான பின்னால் மனித குலத்திற்க்கு என்ன பெருமை கிட்டிவிட போகிறது மனித குலம் வளர்ந்து இருக்கிறது என்று சொல்வதில் என்ன உண்மை இருக்க போகிறது.

ஒரு முக்கியமான விஷயத்தை 2

 இப்படி விஷயத்தை புரிந்து கொள்ளாவிட்டால் என்ன ஆகும்.  முதலில், புரிந்து கொண்டவனுக்கு புரிந்து கொள்ளாதவன் மீது கோபம் வரும்.  இது தந்தை, மகன், கணவன், மனைவி முதல் பணி செய்யும் இடங்கள், கல்வி சாலைகள், அரசியல் போன்ற எல்லாவற்றிலும் இது நுழையும்

ஒரு முக்கியமான விஷயத்தை 1

மனிதர்களாகிய நாம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.  அது என்னவென்றால், நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டதற்க்கு எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அவ்வளவு நியாயம் அந்த விஷயத்தை புரிந்து கொள்ளாதவனுக்கும் உண்டு என்பதைத் தான் நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியது.

காதல் என்பது

பல சமயங்களில் காதல் என்பது தண்ணீர் இல்லாத குளத்தில் குளித்து வருபவருக்கு தலை துவட்ட துண்டு கொடுக்க காதலனிடம் சொல்லும் இதை புரிந்து கொள்ள நிச்சயம் காதலித்திருக்க வேண்டும்.

இயல்பு என்பது

இயல்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எதற்கு வேண்டியும் மாறாது எப்போதும் மாறாதது எதுவோ அதுவே இயல்பு.  விதிகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்களுக்கு தகுந்தபடி அதிகாரத்திற்கு தகுந்தபடி, காரியங்களுக்கு தகுந்தபடி, காலங்களுக்கு தகுந்தபடி மாறிக்கொண்டே இருப்பது தான் விதி. இயல்பு மாறாது, விதி மாறும்.

எரிந்து மறைதலும்,

எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு.  இருளை விலக்கத்தான் முடியும் அழிக்க முடியாது இது ஒளி கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மை, மரணமும் அப்படிதான் விலக்கவோ, மறுக்கவோ முடியாது.

பெண் மனதை

பெண் மனதை ஆண் கணிக்க முடியாதா நிச்சயம் முடியாது உண்மையை சொன்னால் ஆண்களுக்கு அதில் அக்கறையோ, கவனமோ இல்லை நதியின் ஆழத்தை படகு அறியாது நீரின் போக்கில் செல்வதே அதற்கு சுலபம் அதன் பயனும் அதுதான். பெண் மிக புத்திசாலி எப்போதும் அவள் ஆண்களிடம் சிக்குவதே இல்லை சிக்கியது போலிருப்பாள் அதுதான் அவளுக்கு வசதியும் கூட.

அற்பம் என

அற்பம் என எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் புல்லும் வைரமும் ஒன்றுதான். இரண்டுக்கும் ஒரே மூலக்கூறு கார்பன் தான். இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இதை புரிந்துகொண்டால்  நாம் பக்குவப்பட்டு விடலாம் பக்குவப்பட்டுவிட்டால் துன்பம் நம்மை அணுகுவதில் இருந்து தப்பிவிடலாம்  

எல்லா கேள்விகளுக்கும்

எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் தேவையில்லை எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தேவையில்லை எல்லா விமர்சனங்களுக்கும் வியாக்கியானம் தேவையில்லை அவற்றை விளக்க முயற்சிக்கையில் நாம் தர்க்கவாதியென முத்திரை குத்தப்படுவோம் பதில் கூறுகையில் நாம் எதையும் ஏற்றுக்கொள்ளாதவராகி விடுவோம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும் நம்மை பிறர் கேட்கும் கேள்விகளுக்கும் என்றும் வித்தியாசம் உண்டு ! வினா என்றுமே ஒன்று   விடை என்றுமே வேறு   கேட்பவரை பொறுத்து அது தன்னை உருமாற்றிக்கொள்ளும் ! சொல்லியும் விளக்கியும் அறிந்து கொள்ளமுடியாத நிறைய உணர்வுகள்…

இயற்கைதானே

காலம் எப்போதும்சொல்லிக்கொண்டிருக்கும் பாடங்களில் ஒன்று வலிமையைவிட நுட்பமே பலமும் பயனும் நிறைந்தது என்பது. ஒன்றை நீங்கள் அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை அடுத்தவர்கள் அறிந்த கொள்வது இயற்கைதானே.

ஆசை, பகை

ஆசை, பகை இரண்டும் காட்டினில் விளையும் நெருப்பைப் போல பரவிக்கொண்டே ஆற்றலை பெருக்கிக்கொண்டே இருக்கும் முடிவு என்னவென்று பார்த்தால் அவை அழித்துக்கொண்டே இருக்கும் இங்கு வரும் வினா எல்லாவிதத்திலும் அழித்தல் தவறா என்பதுதான் அதற்கு பதில் அழித்து பழகியது ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் எனென்னறால் அழிக்க வேண்டியது எதை என்பதை பற்றி சிந்திக்கும் அறிவு போய்விடும் அங்கு அகங்காரமும், ஆணவமும் குடிகொள்ளும் பிறகென்ன எல்லாம் அழியும். ஒரு விதத்தில் பார்த்தால் பகை வளர்க்காத அரசும் பலம்…

இயற்கையை அழிப்பவரை

இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.  இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து  வாழ முடியாது.  காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.

அரசில் இருப்பவர்கள்

அரசில் இருப்பவர்கள் எதை செய்தாலும் அது அவர்களின் சொந்த நலனுக்காக தான் இருக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் அன்றைய அரசர்கள் முதற்கொண்டு இன்றைய அரசாங்கம் வரை அப்படிதான் நடந்த கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி 29

ஆற்றலை அறிவதும் அறிந்த ஆற்றலை பயன்படுத்தி வெல்லுதற்க்கு முடியாதவனாக மாறுவதும் மனிதனின் ஆசை.  உண்மையில் இயற்கை எப்போதும் மனிதனுக்கு அதை அளிப்பதில்லை. மனிதன் வெல்லுவதற்க்கு முடியாதவனாக மாறுவதற்க்கு இயற்கை அனுமதிப்பது இல்லை. அணு சக்தியை அறிந்து அணுகுண்டுகள்  மூலம் பிற நாடுகளுக்கு தான் வெல்லமுடியாதவன் எனும் அறிவிப்பை செய்பவனின் வாழ்வும், நீர் மேல் குமிழி இக்காயம் அது நில்லாது போய்விடும் நீயறிமாயம். என்பதுதான்

மனிதனின் குணம்

மனிதனின் குணம் எப்போதுமே இப்படிதான் இருக்கும் அதாவது அழிவுகளின் நியாயத்தை சிந்தித்துக்கொண்டு அழித்தலின் அவசியத்தை கற்பிப்பான். பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் வளர்ச்சி நியதி விதி  எல்லாம்.

உரையாடலின் ஒரு பகுதி 28

ஒரு பொருளினால் நமக்கு ஏற்படும் பயன் அந்த பொருளுக்கு இல்லை என்பதை எந்த மனிதன் அறிகிறானோ அல்லது அந்த வித கல்வியை கற்கிறானோ அவன் அறத்தின் வழியாக இயல்பாகவே இயங்குவான் அதைத்தான் பட்டினத்தார் இப்படி சொல்கிறார் போலும், பொன்னால் பயன் நமக்கு அநேகமுண்டு,  நம்மாள் பயன் பொன்னுக்கு ஏது உண்டு என்று

உரையாடலின் ஒரு பகுதி 27

ஓசைகளில் எத்தனையோ வகைகள் உண்டு.  அவற்றில் வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை உள்ளே சுழன்று தன் நிலையையே மறக்க வைக்கும் ஓசை உள்ளே நுழைந்து அடி ஆழம் வரை சென்று ஆழ் மனதில் இருக்கின்ற அச்ச உணர்வை பெருக்க செய்யும் ஓசை என பல வகைகள் உண்டு.

உரையாடலின் ஒரு பகுதி 26

மனித குலத்தின் முதல் முயற்சி இயற்கையின் நுட்பத்தை அறிய பயிரிடுதலின் நுட்பம் தான் அது தலைமுறை, தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுக்கும், விண்ணுக்கும் தாவரத்திற்க்கும், பயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதே ஆகும் அது தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அது மனிதன் வரை வந்துவிட்டது. தற்போதய சூழ்நிலையில் மனிதனும் பயிரிட முடிகிற ஒரு பொருள் எனும் அளவிற்க்கு அவன் வந்திருக்கிறான். இதனால் அவன் இயற்கையை மறுக்கிறான் அது மட்டுமல்லாது இயற்கையை வெற்றி கொண்டதாகவும்…

உரையாடலின் ஒரு பகுதி 25

பொறுப்பு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. கடமை என்பது அறிவு சம்பந்தப்பட்டது. இயற்கையின் உள் நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே புலப்படும்.

உரையாடலின் ஒரு பகுதி 24

தியானத்தில் ஏதோ ஒரு வினாடியில் உங்களை காணும் நீங்கள் அதிர்ச்சி மேலோங்கி மூர்ச்சை அடைகிறீர்கள் அதன் பின் இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்கும். 1. தியானத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் அல்லது உங்களை சுற்றியுள்ளவற்றிடம் இருந்து வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் இதில் எது நடக்கிறது என்பதை நீங்கள், நீங்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் உங்களை நீங்கள் காணும் அந்த வினாடி எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கிறீர்கள் என்பது தெரியும் போது ஒரு சிலர் அதிர்ச்சியும், ஒரு…

உரையாடலின் ஒரு பகுதி 23

உங்களையே நீங்கள் அறிய முற்படும் போது முதலில் குழப்பமும் அதை தொடர்ந்து பயமும் தான் ஏற்படும்.    உங்களை நீங்கள் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அது இல்லாததைக் கண்டு கலவரப்படுவீர்கள். நீங்கள் பெருமையாயும், உன்னதமாயும் சத்தியம் என்று ஊருக்கு, உறவுக்கு, நட்புக்கு சொல்லியதெல்லாம் உங்களிடம் சில சந்தர்ப்பங்களில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைவீர்கள் சில நபர்கள் தியானத்தில் மூர்ச்சையடைவது இதனால்தான். 

உரையாடலின் ஒரு பகுதி 22

இயற்கையை அதன் இயல்பை எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது. மனிதனால், மனிதன் வெற்றியடைந்ததாக சிலசமயங்கள் நினைத்து சந்தோஷப்படலாம், கர்வப்படலாம் ஆனால் மனிதன் வரையறைக்குட் பட்ட சக்தி கொண்டவன் இயற்கையோ வரம்பில்லாத சக்தி கொண்டது சின்ன உதாரணம் மனிதனுக்கு உண்டாகும் இறப்பு.

கடவுளை அறிய அல்லது அடைய  11

பாய் விரித்து படுத்தவனோ வாய்திறந்து தூங்குகிறான். பஞ்சணையில் படுத்தவன் நெஞ்சில் ஏனோ அமைதியில்லை என்ன காரணமாய் இருக்கும் இப்படி பஞ்சனையில் படுக்க எத்தனைபேரை வஞ்சித்தானோ, ஏமாற்றினானோ அந்த நினைவுகளே அவனை நிம்மதியற்றவனாக ஆக்கியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.  அது மட்டுமல்ல பஞ்சணையை யாராவது பிடுங்கி கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம் இந்த இடத்தில் அரசு அதிகாரம் பதவி போன்றவையும் பஞ்சணைகளே. எப்போதுமே தவறுகளை உணர்ந்து கொள்வது மட்டுமே தவறுகளுக்கு பிராயசித்தம் ஆகாது. தண்டைனை கூட…

கடவுளை அறிய அல்லது அடைய  10

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஆயிரமாயிரம் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், துரோகங்கள் போன்ற எல்லாவற்றையும் சமாளித்துதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. அந்த கால மன்னராட்சி முதல் இந்த கால மந்திரிகள் ஆட்சி வரை இந்த நியதி மாறவேயில்லை அதிலும் அதிகாரம் கைபற்ற இத்தனை செய்யவேண்டியிருக்கிறது என்றால் கிடைத்த அதிகாரத்தை தக்க வைக்க இதை போல் பல மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது. அதிகார போதையில் மிதக்க ஆசைப்படுபவன் எல்லோரையும் ஏமாற்றவே நினைக்கிறான். அதில் கடவுளும் அடக்கம் ஏமாற்றியதற்கு கடவுளிடம் மன்னிப்பு…

கடவுளை அறிய அல்லது அடைய 9

ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனால் எதையும் முழுமையாய் அனுபவிக்க முடிவதில்லை எதையும் முழுமையாய் அனுபவிக்கும் வித்தை ஏனோ மனிதனுக்கு கைவர பெறவில்லை.  அது மண் ஆகட்டும், பெண் ஆகட்டும், பொன் ஆகட்டும் எதையும் முழுமையாய் அனுபவிக்காததால் அவனுக்கு எதுவும் முழுமையாய் தெரிவது இல்லை அதனாலேயே ஜனன மரணங்களைப் பற்றிய புதிர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் பிறவற்றை பற்றி அறியாமல் இருப்பது ஒன்றும் மிகப் பெரிய தவறோ, இழிவோ அல்ல ஆனால் தன்னை தான் அறியாமல் இருப்பத…

கடவுளை அறிய அல்லது அடைய 8

எல்லாவற்றையும் காலம் நினைவில் கொண்டுள்ளது.  காலம் வெற்றியடைந்தவன், தோல்வி பெற்றவன், பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் பண்டிதன், பாமரன், ஞானி, அஞ்ஞானி என்ற பேதத்தை கைகொள்வதில்லை அதனுடைய நினைவில் எல்லோருக்கும் இடம் உண்டு, அதனால் காலத்தை வென்றவன் காலத்தை வெல்லாதவன் என்ற பாகுபாடுகளை நாம் பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.  காலத்தில் கடந்த ,நிகழ், எதிர் காலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது அது காலமாக மட்டுமே இருக்கிறது.  நாம் தான் காலத்தை மூன்று கூறாக்கி வைத்திருக்கிறோம் எதையும்…

கடவுளை அறிய அல்லது அடைய 7

 இதை தான் பெரியவர்கள் எதை, எதை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைக்கவேண்டும் என்றார்கள் அவர்கள் சொன்னது புற பொருள்களை அல்ல நம்மிடம் கருவியாய் உள்ள மனதையே சொன்னார்கள் அது மட்டுமல்ல பெரியோர்கள் சொன்னது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றார்கள் இதில் உள்ள அர்த்தம் மனமது நமக்கு ஏவளாளியாய் அடிமையாய் இருந்தால் மந்திரம் ஜெபித்து நாம் பெற வேண்டியது எதுவும் இல்லை நமக்கு வேண்டியது எல்லாம் இயல்பாகவே கிடைக்கும் என்பது தான். இதை…

கடவுளை அறிய அல்லது அடைய 6

நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள் கை, கால்களை போலவே மனமும் ஒரு கருவியே நம்முடைய கை, கால்கள் நாம் சொல்லுவதற்கு அல்லது நினைப்பதற்கு முன்னால் அவை அசைந்தால் நமக்கு எத்தனை அசெளகரியமும், குழப்பமும் உண்டாகுமோ அதை விட பல கோடி மடங்கு அசெளகரியமும் குழப்பமும் நாம் கட்டளை இடும் முன் மனம் அசைந்தால் உண்டாகும்.

கடவுளை அறிய அல்லது அடைய 5

உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம். சிறிது கூட இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம் இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன் மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி. ஆ என்றால் பெரியது தலைவன் என்ற அர்த்தத்தோடு இறை என்ற அர்த்தமும் உள்ளது அதாவது நீ லயத்தில் இருந்தால் ஆ எனும் இறையை உடலில் காணலாம். இதில் முக்கியமானது லயத்தில் இருக்க வேண்டும் அதாவது உடல் லயத்தில் இருக்க…

கடவுளை அறிய அல்லது அடைய 4

மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை அதனால் தான் புத்தர் போன்றோர்   மனதை கடந்து சென்றுவிட்டனர் அப்படி மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால் அதை பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.   மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால் நாம் மறைந்து விடுவோம்.  மனம் மட்டுமே இருக்கும் நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால் நாம் இருப்போம் மனம் மறைந்து விடும் இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் மிக…

கடவுளை அறிய அல்லது அடைய 3

உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக பயன்படுத்த அறிந்திருக்கிறானோ அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான் அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான் இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள் ஊணுடம்பு ஆலயம் என்று.

கடவுளை அறிய அல்லது அடைய 2

உண்மையில் மனித வாழ்வில் அழிக்கப்பட வேண்டியது என்று எதுவும் இல்லை மாற்றி அமைத்து மேன்மைப்படுத்த வேண்டியவைகள் மட்டுமே உண்டு அப்படி மேன்மைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவரவரிடமே உள்ளது. கடவுளை அறிய அல்லது அடைய முக்கியமாக தேவையானது  இதயம் தலை அல்ல. அடுத்ததாக இதயம் மட்டும் பத்தாது அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.   தலையில் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும் அதனால் அதைக்கொண்டு இறைவனை அடைய முடியாது.

கடவுளை அறிய அல்லது அடைய 1

 ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால் அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான் கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது.  ஒருவன் தன்னை வெறுப்பதினால் தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான்.  அதன் பின் அவனால் பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள் போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான்.   கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?

ஆனந்தம் இல்லாதவன்

தனக்குள் ஆனந்தம் இல்லாதவன் ஆசை வயப்படுகிறான். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் அவன் ஆனந்தம் அடைய முயற்சி செய்கிறான், அதில் சில ஆனந்தங்களை மிக சிறிய அளவு அடைகிறான் மனிதன் இன்னமும் புரிந்து கொள்ளாத விஷயம் என்னவென்றால் ஆனந்தம் தனக்குள் இருப்பது அது எதை சார்ந்தும் இராது. ஆனால் ஆசை என்பது எப்போதும் பிறவற்றை சார்ந்தே இருக்கும் அதனால் ஆசையினால் அடையும் ஆனந்தம் மிக, மிக சிறிதாகவே இருக்கிறது.  எப்போது மனிதன் தனக்குள் ஆனந்தத்தை அறிய…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 2

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி இதனை நன்கு உணர்ந்த நோய்வாய்பட்டவர்கள் அல்லது உடல் பலவீனமுடையவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை செய்து கொண்டு உடலை ஆரோக்கிய முறையில் பேணுவார்கள் ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் உடலைப் பற்றி சிந்திக்காமல் அதற்க்கு முக்கியத்துவம் தராமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் உடல் நலம் சரியில்லாமல் ஆக அவர்களே காரணம் ஆவார்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 1

 தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள்.  உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.

ஆதி. 12

ஜீவனில் உயிர் உண்டு அஜீவனில் உயிர் இல்லை இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது பூரண அறிவுடன் விளங்குகிறது.  நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை புலன்களும், பொறிகளும் தான். அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால் பூரண அறிவு சித்திக்கும் அதாவது ஞானம் உண்டாகும் லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள்.  யூகத்தை ஏற்பதில்லை சமண வாதிகள், பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள்.  அனுபவ வாக்கை ஏற்பதில்லை. அதனால் இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.

தற்போது மத சந்தையில்

தற்போது மத சந்தையில் அழகிய புறத் தோற்றம் கொண்ட எதற்கும் பயன்படாத பொருட்கள் இப்போது துன்பத்தை கண்டு வேகமாக ஓடும் மக்களுக்கு பரிசு பொருட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை

பிரார்த்தனை இதயத்தால் நடைபெற வேண்டிய ஒன்று அறிவிலோ, புத்தியிலோ நடைபெற வேண்டிய செயல் அல்ல. கோயிலில் இருப்பது என்ன சிலையா? தெய்வமா கல் என்றால் பிரார்த்திக்க முடியாது. தெய்வம் என்றால் நெக்குருகி பிரார்த்திக்காமல் இருக்க முடியாது உண்மையில் பிரார்த்தனை என்பது அன்பில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கண்ணதாசன் சொன்னது போல, கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும் அன்பில்லாத பிரார்த்தனை உயிரற்ற உடல்,

துன்பத்தை கண்டு ஓடுபவன்

வாழ்க்கையில் துன்பத்தை கண்டு ஓடுபவன் குருட்டு நம்பிக்கைகளில் தன்னை இழக்கிறான். அந்த குருட்டு நம்பிக்கைகளில் புகலிடம் தேடுகிறான். இதை போலி மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி மதவாதிகள் என்றால் தன்னையும் அறியாமல் தன்னை அண்டி வருபவர்களையும் தன்னை அறிய விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள்.  

மனிதர்கள் தோன்றிய காலம் முதல்

ஒரு விஷயம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்றுதான் காதல். இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும் ஏனோ நாம் காதல் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்களால் காதல் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை  எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது… எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது. இது விபத்தா,  தெரியாது. விதியா?  தெரியாது

பயம் 8

எண்ணம் கடந்த காலத்தை பற்றி இருந்து நிகழ் கால நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் அது நுழைந்து நமக்கு பயம், பொறாமை, இன்பம், வருத்தம் போன்றவற்றை தந்து கொண்டேயிருக்கிறது. அதனால், நாம் நம் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. இதிலிருந்து விடுபட என்ன வழி, ஒரே வழி எதை நாம் அனுபவிக்கின்றோமோ அதை அப்போதே மறந்து விடுவது இது கடினமாக தோன்றும் விஷயம் ஆனால் நம்மை நாம் கவனிப்பதன் மூலம் மிக எளிதாக கைவரக்கூடிய விஷயம் இதை முயன்று…

பயம் 7

எண்ணத்தின் முழு செயல்பாடும் கடந்த காலத்திலேயே வேர் பரப்பி ஊன்றி நிற்கிறது அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது நம்மை ந ல்லது, கெட்டது சரி, தவறு என்று நம்மை ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திக்கிறது அதனால் நாம் நம் இயல்பு நிலையை இழக்கிறோம்

பயம் 6

நாம் வளர்ச்சி பாதையில் செல்ல திறமையாக திட்டமிடவும், செயல்படவும் வேண்டியுள்ளது.  இதை எண்ணமற்ற நிலையில் செய்யமுடியாது.  இப்போது நாம் எந்த முடிவுக்கு வருவது என்பது குழப்பமாகத்தான் இருக்கும்.  ஆனாலும், குழப்பம் தெளியவேண்டும் அதற்கு ஒரே வழி வினாவும், விசாரித்தலும்தான்.  நம் வாழ்க்கையில் எண்ணத்தின் இடம் என்ன என்ற விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும் அதில் நாம் எண்ணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும் எண்ணம் நமது இயல்பான வாழ்க்கையில் குறிக்கிடாமல் இருப்பதற்கும் உள்ள எல்லைக்கோடு எது என்பதை கவனமாக உற்றுப்…

பயம் 5

இந்த கடந்த காலம், எதிர்காலம் என்பது எண்ணங்களால் ஆட்சி செய்யப்படுகிறது இந்த எண்ணங்களே பயத்தை நம்முள் விடாமல் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது. இதை நாம் நன்றாக முதலில் புரிந்து கொள்வோம் அடுத்ததாக நமது வளர்ச்சிக்கும், இந்த எண்ணங்களே காரணமாயும் உதவி செய்வதாயும் இருக்கிறது. இந்த விஷயத்தை நன்கு கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  நன்றாக இதை புரிந்து கொண்டபின் எண்ணங்கள் என்பது என்ன என்ற வினாவை நாம் முன் வைத்து சிந்தித்தால் வரும் பதில் எண்ணம்…

பயம் 4

மரண பயத்தை விட்டு விட்டு வேறு சில பயங்கள் எது என்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் வெளியே தெரிந்து விடுமோ எனும் பயம், நம்முடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில கொண்டு எதிர் கால சிந்தனையில் ஏற்படும் பயம்.  இதில் நாம் கவனித்து பார்த்தால் பயம் என்ற விஷயம் கடந்த காலத்தையோ, அல்லது எதிர்காலத்தையோ மையமாக கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்

பயம் 3

ஒருவாறு சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு மரணமே மிக பெரிய பயமாய் இருந்திருக்கிறது இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.  உண்மையில் சொல்லப்போனால் மரணம் வரும் வினாடி வரை நீங்கள் வாழ்க்கையில் மரணத்தின் பயத்தை ஒத்தி வைத்திருக்கிறீர்கள் அதாவது மரண பயத்திலிருந்து தப்பித்து வந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம் நாம் நம்மிடம் உள்ள பல பயங்களில் இருந்து விடுபட அல்லது தற்காலிமாக வேணும் தப்பிக்க கோயில், மதம், கடவுள் போன்றவற்றின் துணையை கைக்கொண்டு வந்துள்ளோம் ஆனாலும் எத்தனையோ மதங்கள், கோயில்கள், கடவுள்கள், தத்துவங்களாலும்…

பயம் 2

இந்த பயம் பல சமயங்களில் மறைமுகமாகவும், சில சமயங்களில் மட்டுமே வெளிப்படையாகவும் உள்ளது.  பயம் ஏன் வருகிறது?  எப்படி  அந்த பயம் உருவாகிறது என்று நாம் சிந்தித்தால் மட்டுமே முழுமையாய் பயத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் அப்படி முழுமையாய் அறிந்து கொண்டபின் அந்த பயத்தை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம், வேண்டாமென்றால் அந்த பயத்தை தூக்கி போட்டு விடலாம்.

ஆதி. 11     சமணம்

இனி, சமணத்தைப் பற்றி பார்ப்போம்.  சமண மதத்தின் தத்துவங்களை உருவாக்கியவர் மகாவீரர் ஞானம் அடையும் முன் இவர் பெயர் வர்த்தமானர் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பதே சமண தத்துவத்தின் கருப்பொருள்  தத்துவங்களின் பயணம் உண்மையை தேடி அதாவது அறுதியான, இறுதியான உண்மையை தேடி இதில் அந்த உண்மையை சமண தத்துவம் எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்ற அடிப்படையில் உண்மையை நாடி பயணிக்கிறது. அதன், பார்வையில் கண்ணுக்கு, புலனுக்கு தெரியும் உலகமும் உண்டு.  கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத சூட்சமமான…

ஆதி. 10 லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4

லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4  நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று.  கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம் சுருக்கமாக சொன்னால் பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள் அந்த பொருள்களை காண முடியும் உணர முடியும் சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன இதில் மனிதனும் அடக்கம் அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான், அனுபவிக்கிறான்,…

பயம்.

பயம் இது எல்லோரிடமும் உள்ளது.  அனால் அது எற்படுவதற்குரிய சூழ்நிலைகளும் , பொருள்களும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. மற்றபடி பயம் என்பது பயம்தான். நீரை கண்டு பயப்படாதவன்  நெருப்பைக் கண்டு பயப்படலாம்.  பாம்பைக்கண்டு பயப்படாதவன் புலியைக் கண்டு பயப்படலாம். இதில் நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால் பயம் என்பது அதாவது பயம் எனும் உணர்வு தனியே நிற்பதில்லை.  அதாவது பயத்தால் தனியாக செயல்படமுடியாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேண்டும் அந்த பிடிமானம் என்பது இருட்டாய் இருக்கலாம்.  கொடிய…

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்

சந்தோஷம் என்பது 32

ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி நிறுவனங்களும், முறைபடுத்தப்பட்ட மதங்களும், பிரச்சாரங்களும், அரசியல் அமைப்புகளும் எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதற்க்கு உதாரணம் இப்போதைய மக்கள் நிலையே போதுமானது.  அதனால், மனிதனுக்கு தற்போது அவனை காப்பாற்ற எதுவுமில்லை என்பதே தெளிவாக இருக்கிறது. அவனை காப்பாற்ற அவனால் மட்டுமே முடியும் என்பதே தீர்வாக தெரிகிறது. 

சந்தோஷம் என்பது 31 

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் .

சந்தோஷம் என்பது 30

அரசியளார்கள், மதகுருமார்கள், தனிதிறமை பொருந்தியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று இருப்பவர்களாலும் இருந்தவர்களாலும் இது நாள் வரையில் உலகில் அமைதியையோ, மகிழ்ச்சியையோ, திருப்தியையோ மனிதனின் இயல்பான சுதந்திர நிலையினையோ கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை.

சந்தோஷம் என்பது 29

ஒரு விதத்தில் பார்த்தால் மனித இனம் ஒவ்வொரு விதத்தில் தேசிய, கலாசார, மத விஷயங்களில் பிளவு பட்டு இருக்கிறது.  பிளவுபட்டதை இணைந்து விடாமல் இருக்க தேசியமும், மதமும் தங்களால் முடிந்த அளவு போராடுகின்றது. இந்த குழப்பத்தை காணும் போது காணும் நபர் என்ன செய்வது, என்ன செய்வது என்று யாரை போய் கேட்பது இப்படிப்பட்ட பூனைகளுக்கு மணி கட்டுவது யார்  என்பதே வினாவாயும் தனக்குள் விவாதமாயும் இருக்கிறது.

சந்தோஷம் என்பது 28

எல்லா கோட்பாடுகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன எந்த விஷயத்திலும் எந்த தத்துவத்திற்க்கும் நீடித்த நிலையில் மதிப்போ, ஆதாரமோ, நம்பிக்கையோ இருப்பதில்லையென்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் இது, மதமாகட்டும், தத்துவமாகட்டும், நிறுவனமாகட்டும், தனிமனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் இந்த நிலையேதான் உள்ளது.  இந்த சூழ்நிலையில் இந்த குழப்பமும் சந்தேகமும், பதற்றமும் நிறைந்த உலகில் நாம் எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதே நம் எதிரில் இருக்கும் வினா.

சந்தோஷம் என்பது 27

உலகில் அதாவது மனிதர்கள் வாழுமிடங்கள் அனைத்திலும், குழப்பம், முறைகேடு, வன்முறை, கிளர்ச்சி, கொடூரத்தன்மை, போர், போன்றவையே நிறைந்துள்ளதை காணும் போது மனிதனுக்கு ஆறறிவு உண்டா அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் தானா?  அவன் சரி, தவறு, என்று அறியும் ஆற்றல் உடையவன் தானா எனும் ஐயப்பாடு எழுகிறது.  இதில் தனி மனித வாழ்க்கையும் கூட குழப்பமும், எதிர்மறை சிந்தனைகளும் எதிர்மறை செயல்களும், நிறைந்ததாகவே உள்ளது.

சந்தோஷம் என்பது 26

நமது வாழ்க்கை முறையில், வாழுதல் எனும் நிகழ்வில் பிரச்சனைக்குறியதாக வன்முறை உள்ளடங்கியுள்ளது.  அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயலிலும் வெகு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதே உண்மை அதனால் தான் தொழில் நுட்பங்களில் மனிதன் அசாதாரண பிரம்மிப்பூட்டும் வெற்றியடைந்த நிலையிலும் மனிதன் இன்னும் போர், பேராசை, பொறாமை, தாங்கற்கரிய சோகம் இவற்றால் கனமாக அழுத்தப்பட்டு இருக்கிறான்.

சந்தோஷம் என்பது  25

சிருஷ்டியின் ரகசியத்தை எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது.  ஒன்று அதை எப்படியாவது கஷ்டப்பட்டு அறிந்து கொள்ளலாம் அல்லது அறியாமல் விட்டுவிடலாம் இவ்வளவுதான் முடியும் அதை, வாத, விவாதங்கள் மூலம் நிரூபிக்க முடியாது.  அப்படி நிரூபிக்க முடியாதது தான் சிருஷ்டியின் அழகு, அதிசயம் இதை தான் நம் முன்னோர்கள் இறைவன் என்றும் கடவுள் என்றும் சொன்னார்கள்.

சந்தோஷம் என்பது  24

ஒரு சிறு குழந்தையை போல உடைகள் ஏதுமின்றி ,பொய் முகங்கள் ஏதுமின்றி அதாவது (பொய் முகங்கள் என்பது அறிவாளி, முட்டாள்,பணக்காரன், ஏழை, பண்டிதன், பாமரன், வேதாந்தி, அஞ்ஞானி, ஞானி, அப்பா, மகன், சகோதரன், கணவன், மனைவி, இது போல இன்னும் எத்தனையோ இருக்கின்ற அதிகார சின்னங்களும், உறவு சின்னங்கள் இன்றி.) அப்பட்டமாக நிர்வாணமாகி உண்மையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கடவுள் உன்னை பார்க்கும்படி நீ செய்தால் சந்தோஷம்  சாத்தியமே  எப்போதும் சந்தோஷமே இது சாத்தியமா?

சந்தோஷம் என்பது  23

இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது உன்னுடைய வாழ்க்கையை அதன் அழகை அதன் உன்னதத்தை சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு, ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி  இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும்.  பூரணம் அதில் நிரம்பி வழியும் அப்போது நீ உண்மையிலேயே, தாயை, தந்தையை,…

சந்தோஷம் என்பது  22

அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை.  மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக எதிர்கால சிந்தனையற்றவனாக பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான். உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால் ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நீ பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு மோகம் கொள்ளமாட்டாய்

சந்தோஷம் என்பது  21

அப்படி தியானத்தை பழகி கொண்டால் பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது.  அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய் பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம் நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது. பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.

சந்தோஷம் என்பது 20

நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு இன்னும் சொல்லப் போனால் உள்ளதை உள்ளபடி ஏற்று அந்தந்த கணங்களில் அப்படி அப்படியே வாழ்பவன் தனக்குள் உள்ள வெற்றிடத்தை அன்பு, சந்தோஷம் போன்றவற்றால் நிரப்பி கொள்கிறான். அது அவனிடம் முன்னமேயே உள்ளது அதை அவன் கண்டுகொள்கிறான், அதனால் அவனுக்கு மீண்டும் வெற்றிடம் உருவாதில்லை அவனள் இருக்கும் சந்தோஷம் இன்பம் போன்றவை வெளியில் இருந்த வந்தவையல்ல அவனுள்ளேயே எப்போதும் இருப்பவை அவன் அதை உருவாக்கவில்லை இருப்பதை உணரமட்டுமே செய்தான் இதற்கு தியானம் ஓர் அளவு…

சந்தோஷம் என்பது 19

பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம் சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம்.  விமானத்தில் பறக்கலாம் உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம். இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும் நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும்   ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள் அதன் பிறகு உனக்குள்  நீ ஒரு வெறுமையை உணருகிறாய் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே   ஏன் அப்படி உணருகிறாய் காரணம்…

ஆதி. 9 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம்

உண்மையில் அப்படி யாரும் இல்லை.   அதனதனின் குண இயல்புக்கு ஏற்ப இணைந்து விலகுகின்றன  அத்தனை தான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் மூன்று விதமான வர்ணத்தில் இருந்தாலும் ஒன்று இணையும் போது அதற்கு சம்பந்தமே இல்லாத நிறம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் கடவுள் என்று கூறுவது அறிவுடைமை  ஆகுமா இது போலவே பூதங்களின் இணைவும், விலகுதலுமே இந்த பிரபஞ்ச உற்பத்திற்கு கடவுள் தேவையில்லை காரணம் கடவுள் இல்லை பூதங்களின் கலப்பே பிரபஞ்சம் அப்படிப்பட்ட கலப்பை  நம்…

ஆ தி. 8 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 2

இந்த உலகை பிரத்யட்சமாக காணுவதை கொண்டு கிடைக்கும் அனுபவங்களே நிஜம். பிரத்யட்சமாக காணமுடியாத, அறிய முடியாத அனுபவத்தை ஒத்துக் கொள்ளாத தத்துவமே சார்வாக மதம் எனும் லோகாயதம். உலகை, பிரபஞ்சத்தை, உன்னை, என்னை, கடவுள் படைக்கவில்லை காரணம் கடவுளை காணமுடியாது. நம் புலன்களால் அறியமுடியாத வஸ்து இல்லை என்றே அர்த்தம் பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களின் சேர்க்கையுமே பிரிவுமே இந்த உலகம் இதை சேர்க்க, பிரிக்க என்று யாரும் தேவையில்லை

ஆதி.7  லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 1

கடவுள் உண்டு என்று நினைத்து சொன்ன காலத்திலிருந்தே கடவுள் இல்லை எனும் சிந்தனையும் அதன் செயல்பாடுகளும் இருந்திருக்கிறது.  எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கம் உண்டு என்ற விதிக்கு கடவுளும் தப்பவில்லை.   பிரதட்ஷணமான – தர்க ரீதியாய் கடவுளை நிருபிக்க முடியாமல் இருப்பதால் சார்வாகர்கள் எனும் மதமே தோன்றியது என்று கூட சொல்லலாம்.   சார்வார்களின் காலம் வேதகாலமே ஆகும்.  சார்வாகர்களின் ஆரம்ப கர்த்தா பிரகஸ்பதி என அறிகிறோம்.  லோகாயதவாதிகளின் தத்துவம் புலன்களை கொண்டு அறியும் அறிவும் அனுபவமுமே…

சந்தோஷம் என்பது  18

மனிதர்கள் பலத்திற்காகவும் உன்னைவிட நான் உயர்ந்தவன்  என்று காண்பிப்பதற்காகவும் பிறரை அதிகாரம் செய்வதற்காகவும் ஆசைப்படுகின்றனர் அதனாலேயே பணம் மனித சமுதாயத்தில் மிக முக்கிய ஒரு இடத்தில் அமைந்துவிட்டது அதனாலேயே கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் பணத்திற்க்கு வேண்டி என்று ஆகிவிட்டது மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த பணம் எனும் பூதம் முதலில் மனிதனக்கு அடியைாய் இருந்தது ஆனால் இப்போது மனிதன் அதற்கு அடிமையாகி விட்டான் இதில் வியப்பிற்குரிய  விஷயம் என்ன வென்றால் தான் அடிமையானதை மனிதன் உணராமல் தானே…

சந்தோஷம் என்பது 17

இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது. அது அவனுக்கு பலத்தை தருகிறது.  மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை.  அதனால் மனிதனும் பணம் மேலும்  பணம், மேலும், மேலும் பணம் என்று சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.

சந்தோஷம் என்பது 16

அவன் மனம் எதிர்காலத்தை சிந்திக்கும் போது அதனுடன் இணைந்து பணமும் வந்து விடுகிறது.  மனிதன் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலேயோ வாழ்ந்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறான். மனிதனைப் பொருத்தவரை பணம் ஒரு பாதுகாப்பு தன்னுடைய எதிர்காலத்திற்க்கு பணம் மட்டுமே பாதுகாப்பு எனும் எண்ணத்தில் இருக்கிறான். அதனால், மனிதனின் எண்ணம் எதைச் சுற்றி சென்றாலும் பணத்தின் ஊடேயே அவனது எண்ணம் பயனிக்கிறது. 

ஆதி.6        

உபநிடதம் உடல் உயிர் ஆன்மா பிரபஞ்சம் போன்ற பல்வேறு பொருள்களை ஆராய்கிறது அதன் தன்மைகளை இயக்கங்களை முழுவதும் நாம் உணர போதிக்கிறது. பிரம்மத்தைப் பற்றி அது முடிவாய் கூறுவது என்னவென்றால் அனைத்திற்க்கும் மூலமும், ஆதியும் அதுதான் அதை அறிவைக் கொண்டு விளக்க முடியாது உணரத்தான் முடியும் மேலும் அது கூறுவது அறிவால் எதை சிந்திக்க முடியாதோ ஆனால் எது அறிவை சிந்திக்க வைக்கிறதோ அதுவே பிரம்மம்.  இதோடு, உபநிடதத்துவத்தை  நிறுத்திவிட்டு மற்றொரு தத்துவமான லோகதாய தத்துவத்திற்க்குள் போய்…

ஆதி.5        

உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய  செய்யப்படும் பயணம் காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம்.  இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு ஆனாலும் பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம். அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி, இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய …

ஆதி.4        

என்னதான் வேதங்கள் அநாதியாய் இருந்தாலும் மனிதனால் தான் வெளியுலகத்திற்க்கு வந்தது.  இதில் மனிதனின் எண்ணங்களும் போக்கும் மாற, மாற மனிதனால் வெளியுலகிற்க்கு அறிமுகப் படுத்தப்பட்ட வேதங்களிலும் மாறுதல்கள் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நமக்கு அதை புலப்படுத்தும் முதலாவது தோன்றிய ரிக் வேதத்தில் இல்லாத யாகாதி கர்மாக்கள் அதர்வண வேதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். துதியும், பக்தியும் இருந்த காலம் போய் யாகமும், பூஜையும், பூஜை முறையும் வேதத்தைவிட முக்கியத்துவம் பெற்ற காலமும் வந்தது…

ஆதி.3

உபநிடந்தங்கள் பல இருந்தாலும் அவற்றுள் 108 மிக முக்கியமானது இந்த உபநிடந்தங்கள் வேதத்தின் கருப்பொருளை தன் உள்ளே கொண்டவை ஒரு விதத்தில் சொல்வதாய் இருந்தால் உபநிடதங்களில் உள்ள கருபொருளின் விளக்கவுரையே வேதம் என்று சொல்லலாம்.  இது முரண்பாடான கருத்தாக தோன்றும் காரணம் முதலில் தோன்றியது வேதம் என்று இருக்கும் போது பின் வந்த உபநிடதங்களுக்கு விளக்கவுரை வேதம் எப்படி ஆகும் என்று விஷயம் என்னவென்றால் வேதத்தின் சாரம், சூட்சமம் எதுவோ அது மட்டுமே கொண்டது உபநிடதம், உபநிடத்தில்…

சந்தோஷம் என்பது 15

மனிதர்கள்  சிந்தனையில் அதிக அளவு ஆக்கிரமித்துள்ள விஷயம் எது என்று சிந்தித்தோமானால் பணம் என்பது தான் விடையாக வரும் அதுவும் பணம், நிறைய, நிறைய பணம் என்று சிந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவே என்று உறுதியாக சொல்ல முடியும் இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் மனிதன் நிகழ்காலத்தில் வாழுவதில்லை.

சந்தோஷம் என்பது 14

ஆனால் வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒரு கட்டத்தில் நின்று திரும்பி பார்க்கும் போது அதாவது இந்த சூழ்நிலை சாதாரண மனிதரில் இருந்து மிக உயர்ந்த வெற்றி பெற்ற மனிதர் வரை அனைவருக்கும் ஒரு கணமாவது தோன்றியிருக்கும் என்னென்ன இழந்துவிட்டோம் என்றும் எதற்கு வேண்டி இத்தனை ஓட்டம் என்றும். இதை பட்டியல் இட வேண்டியது உங்கள் வேலை ஏனென்றால்  எதை, எதை இழந்தீர்கள்  எதை, எதை இழந்ததாக நினைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தானே தெரியும்.

சந்தோஷம் என்பது 13

நம்முடைய தவறால் நாம் நமக்கு வேண்டியவரை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டால்  எப்பாடுபட்டாவது அந்த தவறை சரி செய்து நமக்கு வேண்டியவரின் அன்பை, நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் அதிகமாக உழைப்பது, ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது, வெற்றிக்கு வேண்டி ஊண், உறக்கமின்றி செயல்படுவது, பணம் சம்பாதிப்பது , பதவியை அடைய முயற்சிப்பது  இது எல்லாம் எதற்கு என்று சிந்தித்தால் ஒரே ஒரு பதில்தான் சந்தோஷம், இன்பம் பெறுவதற்கு தான் வேறு எதுவாக இருக்க முடியும்.

சந்தோஷம் என்பது 12

 தாழ்வு மனப்பான்மைக்கு முதல் அறிகுறி தேவையில்லாததிற்க்கு கூட அனுசரித்து போதல் இரண்டாவது அறிகுறி நம்மை நாமே வெறுப்பது  நம்மைப்பற்றி நாம் கவனிப்தைப் போல் மற்றவர்கள் ஆராய மாட்டார்கள் மற்றவர்களுக்கு இதை தவிர எத்தனையோ முக்கியமான அவசரமான வேலைகள் இருக்கிறது.  நாம் செய்வது நமக்கு  தெளிவாக தெரிந்தால் போதும் அதில் நமக்கும், பிறருக்கும் தீங்கு நிச்சயமாய் இல்லை எனற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்.

சந்தோஷம் என்பது 11

உண்மையில் உறவு சிக்கல் என்பது நமக்கும் பிறருக்கும் உண்டான உறவு சிக்கல் அல்ல நமக்கும் – நமக்கும் உண்டான உறவு சிக்கலை இங்கு குறிப்பிடுகிறேன். நாமே நமக்குள் எத்தனை விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தால் மட்டுமே அதை சீர் செய்ய முடியும் செய்ய கூடாத விஷயத்தை  செய்ய நமக்குள் வரும் ஆர்வத்தைத்தான் நாமே நமக்குள்  முரண்படுதல் என்கிறேன்.

சந்தோஷம் என்பது 10

 இப்படி விஷயத்தை சிந்திக்கும்  போது அடித்தல் என்கிற விஷயமே வரவில்லை அதனால் நாம் புரிந்து கொள்ளலாம் அடித்தால் குழந்தை அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று இப்படி தர்க்க ரீதியாய் சிந்திக்கும் போது அடித்தல் எனும் செயல் நடைபெறாது அதற்கு மூலமாய் இருக்கிற கோபம் செயலற்றதாகிவிடும்.  கோபம் செயலற்றுவிட்டாலே அதிக பட்ச உறவு சிக்கல்களில் இருந்து விடுபட்டு விடுவோம்

சந்தோஷம் என்பது 9

உண்மையில் மார்க் வாங்குவது என்பது எது, எது சம்பந்தப்பட்ட விஷயம் என்று யோசித்தால் அதிக மார்க் வாங்க அதிகம் படிக்க வேண்டும், அதிகம் படித்ததை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும் நினைவில் வைத்ததை சரியாக நேரத்திற்கு நினைவுக்கு கொண்டு வரும் ஆற்றலும் வேண்டும் அது மட்டுமல்ல புரிந்துகொள்ளும் பக்குவமும் வேண்டும் எதையும் புரிந்து கொள்ளும் போது சுலபமாகிவிடும். அப்படி சுலபமானால் பரிட்சை சுலபமாகும் அதில் மார்க்கும் அதிகம் வரும்.

J கிருஷ்ணமூர்த்தி

வானொலி, தொலைகாட்சி, செய்தி தாள்கள், திரைப்படங்கள், மதங்கள், மற்றும் அதன் தலைவர்கள் அரசியல் அமைப்புகள் அனைத்தும் உங்கள் சிந்தனையையும் உணர்வையும் வடிவமைக்கின்றன நீங்களும் இணங்க விரும்புவதால் அவர்களின் வேலை எளிதாகிவிடுகிறது   J கிருஷ்ணமூர்த்தி   இது நிஜமா என்று அறியவேண்டுமானால் நாம் நம்மை சோதித்து பார்த்தால் தான் தெரியும் அப்படி சோதிக்கும் போது நடு நிலையில் இருந்து சோதிக்க வேண்டும் அப்படி எல்லோராலும் முடியுமா முடிந்தால் J. கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா தவறா என்பது தெரியவரும்

ஆதி.2

தத்துவங்களில் சில உபநிடதம், லோகாதாய தத்துவம், சமண தத்துவம், பெளத்த தத்துவம், சாங்கிய தத்துவம், யோக தத்துவம், நியாய தத்துவம், வைசேஷிக தத்துவம், மீமாம்ச தத்துவம், அத்வைதம், விஷிஷ்டாவைதம், துவைதம் இன்னும் இப்படி பல உண்டு.  இதில் நாம் செய்ய போவது, தத்துவங்களை ஒரளவாவது தெரிந்து கொண்டு நம் வாழ்கைக்கு தற்போதய சூழ்நிலையில் அது தேவையா? தேவையென்றால் எந்த அளவு என்பதை நமக்குள் நாம் சிந்திக்கவே இந்த முயற்சி பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள கோடானு கோடி விண்மீன்களும், கிரகங்களும்…

ஆதி.1

 மனிதனின் தேடல்கள் பலவற்றில் நான் யார் என்ற தேடலும் அடக்கம் அந்த தேடலின் விளைவாக தோன்றிய கருத்துக்களே தத்துவங்கள் எனப்படுகின்றன.  உலகின் எல்லா பாகங்களிலும் உள்ள மனிதர்களின் தேடு பொருளாகவே இந்த நான் யார் என்பது இருந்திருக்கிறது.  இந்தியாவில் இப்படி தேடியவர்களை மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள் என்று சொல்லுவார்கள் இவர்கள் நான் யார் என்பதுடன் இந்த உலகம், அதன் இயக்கம் இதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் அதன் செயல்பாடுகள் அந்த செயல்பாட்டிற்க்குண்டான சக்தி எது, எப்படி, அது…

சந்தோஷம் என்பது 8

அடுத்ததாக இப்படியும் சிந்திக்க வேண்டும் அடித்தால் மார்க் வருமா, வராது, வந்தாலும் வரலாம் இப்படி இரண்டு விடைகள் வரும் காரணம் அடிக்கு பயந்து தனக்குள் இறுகி  எதையும் புரிந்து கொள்ளும் நிலை இழந்து விட்டால் வராது என்பதே விடை அடுத்ததாக அடிவாங்க கூடாது எப்படியாவது முயற்சி எடுத்து ஊக்கமாய் செயலாற்றும் தன்மைக்கு நகர்ந்தால், வந்தாலும் வரலாம் எனும் விடை வரும்

சந்தோஷம் என்பது 7

எதையும் தர்கரீதியாய் சிந்தித்து பழகுங்கள் எப்படி தர்கரீதியாய் சிந்திப்பது என்று கேட்டால் கீழே உள்ள உதாரணம் அதை விளக்கும். தந்தை மகனை அடிக்கிறார் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் இங்கு தந்தை மகனை அடித்ததில்‍ வெளிப்படையாய் தெரியும் விஷயம் மகன் மதிப்பெண் குறைவாக பெற்றது காரணம் என்று. ஆனால், அது மட்டுமல்ல, காரணம் மகனின் எதிர்காலம் பாழாகி விடுமோ என்ற அச்சம் தான் அப்படி கோபமாக வந்திருக்கிறது.

சந்தோஷம் என்பது 6

கோபம் இதைபற்றி படிப்படியாய் சிந்திப்போம் யாரோ அறிஞன் சொன்னது கோபம் கையாலாகததனத்தின் வெளிப்பாடு என்று.  உண்மைதான் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம்  நிற்கும் போது அதுவும் நாம் நம்மைவிட தாழ்ந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களால் அந்த சூழ்நிலை உருவானது என்று நாம் நினைக்கும் போது நமக்கு வரும் உணர்வு கோபம்.  இந்த கோபம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களின் நிலையையும் அசிங்கப்படுத்தி அலங்ககோலப்படுத்தி விடுகிறது.  கோபம் கொண்டவனுக்கு புறக்கண்களும், அக கண்களும் தெரிவதில்லை.  இவை எல்லாம் மனிதனை…

சிந்திக்க   முக்கியமான விஷயம்.

உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும், வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை தயாராகவே இருக்கிறது.  ஆனால் நாம் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே சாத்தியம் இயற்கையின் ஆற்றலை பேணி காத்து இணைந்து வாழ்ந்தால் பூலோகம் சொர்கலோகமாகும், மாறாக இயற்கையை அழித்து நாம் விரும்பும் படி வாழ்ந்தால் இயற்கையும் நம்மை அழிக்கும் அப்போது பூலோகம் நரகமாகும்.

சந்தோஷம் என்பது 5

மனித உணர்வுகளில்,  உறவுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஓன்று ஆளுமை அதன் தொடர்ச்சியாய் அடக்குமுறை வருவதை காணலாம்.  அதுமட்டுமல்ல மனித உணர்வுகளில் இன்பத்தை பெற மனிதனுக்கு தடையாய் இருக்கும் உணர்வுகள் எவை, எவையென்று பட்டியல் இட்டால் அதில் கோபம், அச்சம் பொறாமை தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை என வரும் இவை அனைத்துமே மனிதன் இன்பமாய் இருக்க தடைகளாய் இருக்கின்றன.  மனிதன் இவற்றோடு இருப்பவன் இவைகளை இல்லாமல் செய்ய முடியாது ஆனால் இவைகளை செயலற்றதாக்க முடியும் அது…

சந்தோஷம் என்பது 4

மக்களில் அதிக பட்ச சதவிகிதத்தினர் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எனும் மன நிலையிலேயே இருக்கின்றனர்.   ஒரு குறிப்பிட்ட சிறு சதவிகித மக்கள் மட்டுமே வெந்தது என்பது என்ன  என்று சிந்திக்கும் பழக்கம் உடையவராய் இருக்கின்றனர்.  இதில் தின்பது, விதி போன்றவையும் அடங்கும்.  அப்படி சிந்தித்து செயல்படும் மனிதரே வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இன்பமாய் இருக்கின்றனர்.

சந்தோஷம் என்பது 3

மனிதனின் மனம் உறவுகளில் இன்பம் கொள்கிறது. அடுத்ததாக கலை, இலக்கியம், புகழ், வெற்றி, ஏதாவது ஒரு துறையில் அங்கீகாரம், போன்றவற்றில் இன்பம் பெறுகிறது. இதுகளில் ஒன்றின் பின் ஒன்றாக சிந்திப்போம். உறவுகள் என்று எடுத்துக்கொண்டால் அந்த உறவுகளை பற்றி ஒரு முழுமையான புரிதல் வேண்டும் அப்படி புரிந்து கொள்ள உறவுகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் மனிதர்கள் பெரும்பான்மையோருக்கு அதில் ஏனோ அக்கறையும் ஆர்வமும் இருப்பதில்லை

சந்தோஷம் என்பது 2

சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ புற காரணிகளைவிட அடிப்படையானது அக காரணியான மனமே அந்த மனதில் உண்டாகும் உணர்வுகளே இன்ப துன்பங்களை உருவகித்து கொள்கிறது எனும் முடிவிற்கு காரண காரியங்களோடு சிந்தித்து பார்த்தால் நம்மாள் வர முடிகிறது.   அப்படி அந்த முடிவிற்கு வந்த பின் இன்ப துன்பத்தின் மூலம் மனம் என்று ஆன பின் அதில் நாம் கவனம் செலுத்தி அதை கையாள பழகிக் கொண்டால் நம்மாள் இன்பத்தை மட்டுமே அடைய முடியும் அதற்கு உண்டான விஷயங்கள் எது,…

சந்தோஷம் என்பது  1

இன்பம் அல்லது சந்தோஷம் என்பது என்ன எனும் வினா வந்தால் மனித குலத்தின் பதில் ஒரே விதமாயும், ஒரே மாதிரியும் இல்லை என்பதே உண்மை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பம், சந்தோஷம் தருகிறது.    ஒவ்வொரு  சந்தர்ப்பத்தில்  ஒவ்வொன்று இன்பமாய் இருக்கிறது படிப்பதில் ஒருவருக்கு இன்பம் என்றால் படித்ததில் உள்ள விஷயத்தை ஆராய்ந்து செயல்படுத்தி பார்ப்பது இன்னொருவருக்கு இன்பம் படிக்காமலேயே இருப்பது இன்னுமொரு சாரருக்கு  இன்பம், சந்தோஷம் தருகிறது.  இதை ‍இப்படி பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே  போகும்  இதிலிருந்து…

மனம் எனும்  7

இந்த வரத்தால் அவன் கடுமையான, கொடுமையான விளைவுகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கூட அவன் அறியவில்லை என்ன செய்வது தன்னை தொலைத்துவிட்டான் என்பதை கூட அவனால் அறிய முடியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமையான விஷயம். இதிலிருந்து எப்போது, எப்படி மாறுவான், தெரியவில்லை. சுயநலமும், பேராசையும், வஞ்சகமும், அதீத அறிவும், அவனுடைய உடைமைகள் ஆகிவிட பிறகு மாறுவது எங்ஙனம்.

மனம் எனும்  6

 நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ள மனிதனால் முடியாததற்கு காரணம் மனிதனால் நேர்மையாய் இருக்க முடியவில்லை, காரணம்,  மனிதனுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும், வைராக்கியமும் இல்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் நேர்மையாய் இருப்பது மிக கடினமாக இருக்கிறது. அதிலும் உண்மையாய் இருப்பதோ மிகப்பெரும் சுமையாய் இருக்கிறது. காரணம், உண்மையென்பது மனம் சம்பந்தப்பட்டது, அறிவு சம்பந்தப்பட்டதல்ல, உண்மையை மறைப்பது தான் அறிவு சம்பந்தப்பட்டது. அதனாலேயே மனிதன் ஆரவாரமாகவும் அகம்பாவத்தோடும் பொய்மையுடனுமே வாழும் வாழ்க்கையை, சாபமாக அல்ல வரமாக…

மனம் எனும் 5

உங்களின் வாழ்க்கையில் அறிவின் பங்களிப்பும், மனதின் பங்களிப்பும் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை நீங்கள் உங்கள் செயல்களை, எண்ணங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும். அதாவது உற்று பார்த்து பழக, பழக தெரிந்துவிடும். இதை அறிய நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். அந்த நேரமே வாழ்க்கையில் பொன்னானது, ஏனென்றால் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை கற்கிறீர்கள் அதாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் எப்பேற்பட்ட வாய்ப்பு அது, அதை தவறவிடலாமா இது வரை தவற விட்டிருந்தாலும்…

மனம் எனும் 4

இந்த தன்னையறிதல் என்ற விஷயத்தினால் என்ன பயன் என்ற வினா வரலாம், பதில் இதுதான் தன்னையறிதலால் நாம் பிறரையும் அறியலாம், அறிய முடியும் நன்றாக கவனித்து பார்த்தோமானால் சரி, தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் உயர்வு, தாழ்வு, பிடித்தது, பிடிக்காதது போன்றவை மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். அதாவது, பிடித்தது, பிடிக்காதது என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவும்  முறை, முறையற்றது என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்

மனம் எனும் 3

 தவறு நடக்காததின் காரணம், அறிவானது மனதை ஆட்சி செய்ததால் வேறு சிலருக்கு அறிவு ஆட்சி செய்யப்படாத மனமிருக்கும் அங்கே தவறு என்பது சர்வ சாதாரணமாக நிகழும், நிகழ்த்தப்படும் அதில் பயமோ, குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்காது.  அவரவர் வாழ்க்கையில் மேலே சொன்ன விஷயங்களை எத்தனை முறை கடந்துள்ளீர்கள், அதில் உங்களின் செயல்பாடுகள் எந்தெந்த நிலையில் இருந்தது என்பதை கவனித்தலே தன்னை அறிதலுக்குண்டான முதல்படி.

மனம் எனும்  2

மனம் பற்றி படறும் விஷயத்தை, பலதுடன் இணைத்து சீர் தூக்கி பார்த்து அதனால் ஏற்படும் விளைவுகளை  சொல்லுவது அறிவு.  ஆனால், பல சமயங்களில் அறிவு சொல்லுவதை மனம் கேட்பதில்லை எதார்த்தமான உண்மைநிலை இதுதான்.         யாருக்கும் தவறு செய்ய பயமே கிடையாது.   ஆனால், தவறு வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயம் மட்டுமே உண்டு.  இங்கு நாம் இதை கவனித்தால் பயம் என்பது மனம் சம்பந்தப்பட்டது.   தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டது.

மனம் எனும்  1

        மனம் எனும் வார்த்தை ஒன்றுதான் ஆனால் மனம் எப்போதும் இரண்டானது ஏமாந்தால் அது மூன்று, நான்கு, ஐந்தாகவும் இருப்பது சலனப்படுவதும், சஞ்சரிப்பதுவுமே அதன் குணம் மனம் ஒரு விஷயத்தை பற்றும் போது அது எதைப்பற்றியும் சிந்திக்காது அதாவது நல்லது, கெட்டது, சரி, தவறு, தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம், என்கிற எதையும் கவனிக்காது, கண்டு கொள்ளாது.  ஆனால், அறிவு இதையும் இதற்கு மேலே உள்ளதையும் சொல்லும்.  மனம் அறிவாக மாறும் போது அல்லது மனம் அறிவால்…

எல்லைகளை நிர்ணயித்து  3

சுருக்கமாகச் சொன்னால் — உலக வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைக்கும் வரை , நினைத்ததெல்லாம்  சிறு முயற்சியில் கிடைக்கும் வரை,  எந்த தடங்கலும் இல்லாமல் நினைத்ததெல்லாம் நடக்கும் வரை  தன்னை கவனித்தல் எனும் செயல் நிகழாது , எல்லாவற்றிக்கும் போராட்டம்  சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் போராட்டம் எனும் நிலையில் இருக்கும் மனிதனுக்கு நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வரும் அந்த  கேள்வியில் இருந்து  தன்னை கவனித்தல் தொடங்கும். அது தன்னை அறிதலுக்கு அழைத்து…

எல்லைகளை நிர்ணயித்து 2

எல்லைகோடுகள் பல விஷயங்களில் அமையும்.  படிப்பு, தொழில், பணம், பதவி, என்று எத்தனையோ விஷயங்களில் அது தலை தூக்கும் அதன் பின் ஓடுபவரால் நிச்சயமாய் தனக்குள் இருப்பதை தனக்குள் பிரயாணிப்பதை தன்னை அறிதலை போன்ற விஷயங்களை ஏற்கவே முடியாது ஆனால் எத்தனை ஓடியும் எப்படி ஓடியும் எல்லைக்கோட்டின் அருகில்கூட வரமுடிய வில்லையே என்பவனுக்கு தான் ஏன் என்ற கேள்வி வரும் அது அவனை தன்னையறிதலுக்கும் தன்னையறிந்தவர்களின் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் செல்லும்.  அது அவனுக்கு தனக்குள் பிரயாணிப்பதையும்,…

எல்லைகளை நிர்ணயித்து 1

ஓடும் போது அதுவும் எல்லைகளை நிர்ணயித்து ஒடும்போது அந்த ஓட்டத்தில் எல்லையை அடையும் போது மனம் அடையும் நிலை, சந்தோஷம், திருப்தி என்பதைவிட வெற்றி என்ற இறுமாப்புதான் இருக்கும் அது நாம் அடைந்த எல்லையை மீண்டும் விஸ்தாரப்படுத்தி மீண்டும் நம்மை ஓட வைக்கும் அந்த ஓட்டத்திலும் எல்லைகளிலுமே மூழ்கியிருக்கும் மனிதனால், மனதினால் தன்னைப் உற்று பார்க்கவோ, தனக்குள் செல்லவோ தோணாது அப்படி செய்து பார் என்று சொல்லுபவர்களையும் அலட்சியப்படுத்தும் ஏளனமாய் கிண்டல் செய்யும் எல்லை கோடுகளை வகுத்து…

தத்துவம் தெரிந்த வாழ்க்கை

தத்துவம் தெரிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் என்பது எல்லோருக்கும் நியதி இல்லை. சட்டென்று சிலருக்கு வாழ்க்கையே தத்துவம் ஆகிவிடுகிறது. இந்த இடத்தில் தத்துவம் என்றால் என்ன என்ற வினா வருகிறது அந்த வினாவிற்கு பதிலாக பெரியவர்களின் போதனைகள் என்ற பதில் வரும் பெரியவர்கள் என்றால் யார் என்ற வினாவும் வரும் அதற்க்கு பதிலாக வயது அனுபவம் போன்றவை விடையாக வரும் வயது சரி அனுபவம் என்றால் என்ன என்ற வினாவும் வரும் கூடவே ஒருவருக்கு எல்லா அனுபவங்களும்…

எங்கு வன்முறை வரும் 3

தர்மமும், அறமும் முன்னோர்களின் நெறியும் அறியும் கல்வி இல்லாததால் அந்த கல்வி ஏன் இல்லாமல் போயிற்று. சுயநலமும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் இனி இதைத் தவிர வேறு என்ன செய்வது, சொல்வது, சிந்திப்பது, அதீத ஆளுமைக்கு ஆசைப்படுதலே வன்முறை உண்டாவதற்கு ஒரு காரணம். அன்பு பழக நேரமாகும், வன்முறை அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்பட்டுவிடும் இந்த அன்பு பழகும் நேரம் பொறுமையாய் இருத்தல் நலம் மற்றும் அவசியம் அந்த பழக்கம்…