உரையாடலின் ஒரு பகுதி 89
இப்படிதான் வாழ வேண்டும் என்ற நியதியோ, நியாயமோ, வரம்போ எந்த ஒரு வாழ்க்கையையும் இந்த ஜென்மத்தில் வாழாதவனால் அடுத்த ஜென்மத்தில் மட்டும் எப்படி (அப்படி பட்ட) ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியும். இந்த உலகில் அறிவினாலும் மனதினாலும் வாழ விரும்புவர்கள் இந்த உலகில் புதிய ஆண்மை ஒன்றை படைத்திருக்கிறார்கள் அதுதான் சான்றாண்மை சால்பை ஆள்வது தான் சான்றாண்மை, சான்றாண்மை குணத்தை விரும்புகிறவர்கள் எதை எதிர்ப்பதையும் வீரமாக கொள்வதில்லை பொறுத்து நிற்பதை தான் வீரமாக கொள்கிறார்கள்.
