உரையாடலின் ஒரு பகுதி 81
நம் முன்னோர்கள் சொன்னது தான் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது என்று, இது மிக மிக சத்தியமான வார்த்தை மனம் என்ற ஒன்று இல்லையென்றால் புறத்தில் இருக்கும் எதுவும் நமக்கு தெரியாது, புரியாது அதாவது நம் மனதிற்குள் இருப்பது எதுவும் தெரியாது. அதனால், நாம் கண்டிப்பாக திடமான முடிவுக்கு தாராளமாய் வந்துவிடலாம் புறப்பொருட்கள் அனைத்தும் நம் மனதை நாம் அறிய இன்னும் சரியாய் சொல்ல போனால் நம்மை நாம் அறிய உதவும் பொருட்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை…
