பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 3
உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.