காந்தளூர் சாலை போர் 3

அனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர் சாலையில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு வரலாற்று கூற்று உண்டு. முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்கு தன் தூதுவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சோழ நாட்டு தூதுவரை சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவிவர்மா சிறைபிடித்தனர்.