பதினாறும் அருளும் ரம்பாபுரி நாதர்!

திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர் 16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம். இவரைத் தரிசித்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.