இயற்கையை அழிப்பவரை

இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.  இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து  வாழ முடியாது.  காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.