ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13

நல்லதும் ‍பொல்லாததும், உயர்ந்ததும், தாழ்ந்ததும், விரும்பத்தக்கதும், வெறுக்கத்தக்கதுமான காட்சிகளை ஒருவன் கனவில் காணும் பொழுது அவையெல்லாம் உள்ளபடி உண்மை என்றே நினைக்கிறான். கனவு நிலையில் அவை பொய்யென்ற எண்ணம் சிறிதுகூட இல்லை.  அவ்வாறே தான் ஞானோதயம் ஏற்படும் வரை இவ்வுலகும்.