ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  2

எதையடைந்த பின் வேறு அடைய வேண்டியது எதுவுமில்லையோ, எந்த ஆனந்தம் அனுபவிக்கப்பட்ட பின் அதற்கு மீறிய ஆனந்தம் வேறு ஒன்று வேண்டப்படுவதில்லையோ, எதையறிந்த பின் வேறு அறிய வேண்டியது எதுவுமில்லையோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.  பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்கள் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி அந்த அளவு கடந்த பிரம்ம ஆனந்தத்தின் சில திவலைகளையே அனுபவித்து ஆனந்தமுடையவர்களாகிறார்கள்.