ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  1

                                                பி ர ம் ம ம் ஸத் – சித் – ஆனந்தமாயும், இரண்டற்றதாயும், அளவு கடந்ததாயும், என்றுமுளதாயும், ஒன்றேயாயும், உள்ளதையெல்லாம் வியாபித்து நிற்பதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. இரண்டற்றதாயும், பிளவுபடாததாயும், ஒன்றேயாயும் ஆனந்த வடிவாயும், காணும் பொருளெல்லாம் கனவுபோலொதுக்கப்பட்ட பின் அடிப்படையாக எஞ்சி நிற்பதென்று வேதாந்தத்தில் விளக்கப்படுவதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.