அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 30

அன்ன பக்கவ ரத்த விருத்தி ஆமாசீரணகால நாடி லக்ஷணம் ….. அன்னபக்கவா சீரணகாலத்தில் நாடியானது புஷ்டி ரஹிதமாயும் மந்தமாயும் நடக்கும் சரீரத்தில் ரத்தமானது அதிகமாய் இருக்கும் போது நாடியானது கொஞ்சம் உஷ்ணமாய் நடக்கும். ஆமாசீரண யுக்தமான நாடி குருத்துவமுள்ளதாய் நடக்கும். சுக க்ஷ த்து மந்த பலஹீன நாடி லக்ஷணம் ….. சுகமாய் இருப்பவனுடைய நாடி ஸ்திரமாயும், பசியுடன் கூடி இருப்பவனது நாடி சபலமாயும், மந்தாக்கினி உடையவன் பலம் இல்லாதவன் இவர்களின் நாடி அதிமந்மாயும் நடக்கும்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

 2 – ல் சனி இருந்தாலும், பார்ததாலும், 7 – க்குடையவருடன் கூடினாலும், 2 – க்குரியவர் பலம் பெற்று இவருடன் தொடர்பு பெற்றாலும் இரண்டு குடும்பம் அமையும். பெண்கள் ஆனால் 2 – ஆம் தாரமாக வாழ்க்கைப்படுவர். இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் தீராத மன வருத்தம் காணும்.  2 – ல், 8 – க்குரியவர், இவரை சனியும் 1, 2 – க்குரியவரும் பார்த்தால் துர்வார்த்தை பேசுவோன். குடும்பத்தில் அக்கரை இல்லாதவன், கல்வி…