அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு

படிப்படியாகவே குண்டலினி சக்தி எழும், ஆண்டவனது நாமத்தை ஜபிப்பதால் நீ எல்லாவற்றையும் உணர்வாய். மனம் அமைதியாக இல்லாவிடினும் கூட நீ ஓரிடத்தில் அமர்ந்து புனித நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபிக்கலாம். குண்டலினி எழுவதற்கு முன் அனாஹா ஒலி கேட்கும், ஆனால் தெய்வீக அன்னையின் அருளின்றி எதுவுமே கிட்டாது.

6 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல உழைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு கடும் உழைப்பாளியாவார்கள். சகல செல்வ சுகங்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களது  லட்சியமாகும் நடவடிக்கையாவும் பணம் சம்பாதிப்பதிலேயேதான் இருக்கும். அதற்குத் தகுந்த வகையில் மற்றவர்களைப் பக்குவப்படுத்தி சாதித்துக் கொள்வார்.